14 Jan 2017

TNPSC Tamil

1. பண்டையத் தமிழர் தாம் வரைந்த ஓவியத்தை எவ்வாறு அழைத்தனர்? - கண்ணெழுத்து

2. தமிழ் இலக்கியத்தில் உள்ள எழுத்து என்பதன் பொருள் --------------- - ஓவியம்

3. எழுத்து என்பதற்கு ஓவியம் என்பது பொருள் என்று கூறும் நூல் --------------- - குறுந்தொகை, பரிபாடல்

4. ஓவியம் வரைவதற்கு அடிப்படையானவை --------------- - நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு

5. நடுகல் வணக்கம் பற்றி கூறும் நூல் --------------- - தொல்காப்பியம்

6. ஓவியக்கலையின் வேறு பெயர்கள் --------------- - ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி

7. ஓவியக்கலைஞரின் வேறு பெயர்கள் --------------- - ஓவியர்., ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திகாரர் வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்

8. ஆண் ஓவியரின் பெயர் --------------- - சித்திராங்கதன்

9. பெண் ஓவியரின் பெயர்--------------- - சித்திரசேனா

10. ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றவர் யார்? - ஓவியப்புலவன்

11. ஓவியக்கலைஞர் குழுவிற்கு --------------- என்று பெயர்? - ஓவிய மாக்கள்

12. வண்ணம் தீட்டும் கோலின் பல பெயர்கள் --------------- - தூரிகை, துகிலிகை, வட்டிகை

13. ஓவியம் வரைய தனிப்பட்ட இடங்கள் இருந்தனவா? - ஆம்

14. தமிழர் வளர்ந்த நுண்கலைகளின் வரிசையில் முன்னணியில் நிற்பது --------------- - ஓவியக்கலை

15. பழங்கால மக்கள் தம் உள்ளக்கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும், குகைகளிலும் எவ்வாறு எழுதினர்? - கீறி எழுதினர்

No comments:

Post a Comment