30 Jan 2017

இந்தியாவுக்கு வருகிறது துஸாட்ஸ் அருங்காட்சியகம் 13/01/2017

உலகம் முழுவதும் பிரபலமான அருங்காட்சியங்களில் ஒன்றான துஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் கிளை டெல்லியில் தொடங்கப்படவுள்ளது.

உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகமான மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியம் 22 கிளைகள் கொண்டது. அவை உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகின்றன. அந்த அருங்காட்சியகத்தின் 23வது கிளை இந்தியாவில் டெல்லியில் அமையவுள்ளது. இது பற்றிய அறிவிப்பை மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியக நிறுவன இயக்குனர் மார்செல் க்ளூஸ் வெளியிட்டார்.

இதற்காக, டெல்லியில் வருகிற ஜூன் மாதம் நடக்கவுள்ள திறப்புவிழா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார். அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஹாலிவுட் பாப் ஸ்டார் லேடி காகா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

1835ஆம் ஆண்டு மாரீ துஸாட் என்பவரால் லண்டனில் தொடங்கப்பட்ட மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், ஷாரூக்கான், ஹிருத்திக்ரோஷன், சல்மான் கான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களின் தத்ரூபமான மெழுகுச்சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment