11 Jan 2017

பாகிஸ்தானின் அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி
10/1/2017

நீருக்கு அடியில் இருந்து ஏவக்கூடிய அணுஆயுத ஏவுகணை சோதனையை நேற்று பாகிஸ்தான் வெற்றிகரமாக நிகழ்த்தியது. பாகிஸ்தானின் முதல் நீருக்கு அடியில் இருந்து செலுத்தக்கூடிய ஏவுகணையான 'பாபர்-3ஐ நேற்று பெருங்கடல் பகுதியில் வைத்து பாகிஸ்தான் சோதித்துப் பார்த்துள்ளது. நீர்மூழ்கி கப்பலில் இருந்து செலுத்தப் பட்ட இந்த ஏவுகணையானது இலக்கு தூரத்தை சரியாக கடந்து தாக்கியது. இது சுமார் 450 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இந்த வெற்றிக்காக பாகிஸ்தான் பிரதமர், ஏவுகணையை வடிவமைத்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment