9 Jan 2017

பிரிஸ்பேன் சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா , அமெரிக்காவின் பெதானி மேடக் சான்ட்ஸ் ( Bethanie Mattek-Sands ) ஜோடி , ரஷ்யாவின் எகடெரினா மகரோவா , எலினா வெஸ்னினா ஜோடியை  தோற்கடித்து பட்டம் வென்றனர்.

2016லும் சானியா மிர்ஸா,  ஹிங்ஸ்  உடன் இணைந்து இப்பட்டத்தை வென்றுள்ளார்.

சாம்பியன் பட்டம் வென்றாலும், சானியா மிர்ஸா 91 வாரங்களாக வகித்து வந்த இரட்டையர்  தரவரிசை  முதலிடத்தை இழந்து விட்டார்.

தற்போது முதலிடத்தை அமெரிக்காவின்  பெதானி மேடக் சான்ட்ஸ் பெற்றுள்ளார்.
.
அடுத்த வாரம் துவங்கவுள்ள ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் சானியா மிர்ஸா , செக் குடியரசின் Barbora Strycova உடன் இணைந்து விளையாடவுள்ளார்.

No comments:

Post a Comment