3 Jan 2017

104வது தேசிய அறிவியல் மாநாடு- திருப்பதி 03/01/2017



திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 104வது தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற மோடி, மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் விஞ்ஞானிகளுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

       நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழில்நுட்ப பயன்பாடு அவசியம் என தெரிவித்த மோடி, உற்பத்தித் துறை மேம்பட தொழில்நுட்பம் அவசியம் என கூறினார். நகரங்கள்- கிராமங்களுக்கு இடையிலான வேறுபாட்டை களைவதற்கு தொழில்நுட்பங்கள் உதவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    விஞ்ஞானிகள் புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார். சீர்குலைப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அறிவியல் தொழில் நுட்பம் இருக்க வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment