பசுமை ரயில் எனப்படும் இந்தியாவின் முதல் சூரிய சக்தியால் இயங்க கூடிய ரயில் தமிழகம் வந்தது. கோவை - மயிலாடுதுறை மார்க்கத்தில் இயக்கப்படும் இந்த ரயிலின் குளிர்சாதன வசதி இல்லாத 6 பெட்டிகளின் மேற்புறத்திலும் 16 சூரிய ஒளி சேமிப்பான் தகடுகள் பொருத்தப் பட்டுள்ளன. 4.8 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த தகடுகள் மூலம் ரயிலில் உள்ள மின்விசிறி, விளக்குகள் போன்றவற்றை இயக்க முடியும். ஆனால் குளிர்சாதன பெட்டிகளை இயக்க தேவையான மின்சாரம் இதில் கிடைக்காது. சூரிய ஒளி இல்லாத நேரங்களில் மின்சாதனகளை இயக்க பேட்டரி அமைப்பும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment