வெளிநாடுவாழ் இந்தியர்களின் முக்கிய மாநாடு இன்று : January 8, 2017
14 ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்களின் மூன்று நாள் மாநாடு பெங்களூருவில் நேற்று வெளிநாடுவாழ் இந்திய இளைஞர்கள் மாநாட்டுடன் தொடங்கியது. இந்த மாநாட்டின் மையக்கருத்து, ‘இந்தியாவின் உருமாற்றத்தில், வெளிநாடுவாழ் இளைஞர்களின் பங்கு’ என்பதாகும். சூரிநாம் நாட்டின் துணை அதிபர் மைக்கேல் அஷ்வின் அதின், தொடக்க விழாவில் முக்கிய உரையாற்றினார். ஆன்மீக மற்றும் கலாச்சார மரபுரிமையின் சிறப்பு அந்தஸ்து காரணமாக, இந்தியா வலிமையான மற்றும் வல்லரசாக வேண்டும் என்றார். பல்வேறு நிலைகளில் நிலவும் வர்த்தக ஆதிக்கத்தைக் குறைக்க, வெளிநாடுவாழ் இந்திய இளைஞர்கள் தங்கள் தொழில்முனையும் திறனில் கவனம் செலுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். இணையமைச்சர் ஜெனரல் வி.கே. சிங்கும், விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் விஜய் கோயலும் மாநாட்டில் உரையாற்றினர். இதன் முக்கிய மாநாடு இன்று நடைபெறும். இதனை பிரதமர் நரேந்திர மோதி மற்றும் தலைமை விருந்தினரான போர்ச்சுக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா துவக்கி வைப்பார்கள். குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி வெளிநாடு வாழ் இந்தியர் விருதுகளை நாளை வழங்குவார்.
மஹாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பியதன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
14 ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்களின் மூன்று நாள் மாநாடு பெங்களூருவில் நேற்று வெளிநாடுவாழ் இந்திய இளைஞர்கள் மாநாட்டுடன் தொடங்கியது. இந்த மாநாட்டின் மையக்கருத்து, ‘இந்தியாவின் உருமாற்றத்தில், வெளிநாடுவாழ் இளைஞர்களின் பங்கு’ என்பதாகும். சூரிநாம் நாட்டின் துணை அதிபர் மைக்கேல் அஷ்வின் அதின், தொடக்க விழாவில் முக்கிய உரையாற்றினார். ஆன்மீக மற்றும் கலாச்சார மரபுரிமையின் சிறப்பு அந்தஸ்து காரணமாக, இந்தியா வலிமையான மற்றும் வல்லரசாக வேண்டும் என்றார். பல்வேறு நிலைகளில் நிலவும் வர்த்தக ஆதிக்கத்தைக் குறைக்க, வெளிநாடுவாழ் இந்திய இளைஞர்கள் தங்கள் தொழில்முனையும் திறனில் கவனம் செலுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். இணையமைச்சர் ஜெனரல் வி.கே. சிங்கும், விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் விஜய் கோயலும் மாநாட்டில் உரையாற்றினர். இதன் முக்கிய மாநாடு இன்று நடைபெறும். இதனை பிரதமர் நரேந்திர மோதி மற்றும் தலைமை விருந்தினரான போர்ச்சுக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா துவக்கி வைப்பார்கள். குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி வெளிநாடு வாழ் இந்தியர் விருதுகளை நாளை வழங்குவார்.
மஹாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பியதன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment