டெஹ்ராடூனில் ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டில் பிரதமர் இன்று உரையாற்றுகிறார்.
January 21, 2017
உத்தராகண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனில் ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோதி பேச இருக்கிறார். இந்திய இராணுவ அகாடமி நடத்தும் இந்த ஒருநாள் மாநாட்டில் எல்லா இராணுவ கமாண்டர்களும், விமானப்படை, கடற்படையைச் சேர்ந்த சம அந்தஸ்து அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு தங்கள் படையின் தலைவர்களாக பொறுப்பேற்ற பிறகு மூன்று பாதுகாப்புப் படைத் தலைவர்களும் முதன் முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது தடவையாக புது தில்லியிலிருந்து வெளியே நடத்தப்படும் இந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரும் கலந்து கொள்வார். முந்தைய மாநாடு 2015 டிசம்பர் 15-ம் தேதி கொச்சி கடலோரப் பகுதிக்கு அப்பால் INS விக்கிரமாதித்யாவில் நடத்தப்பட்டது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் அதிரடித் தாக்குதல்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவும் நிலவரம், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் உருவாகிவரும் பாதுகாப்பு நிலைமை பற்றி இந்த மாநாட்டில் முக்கியமாகப் பேசப்படலாம். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக உத்தராகண்டில் இந்த மாநாட்டை நடத்துவது பற்றி காங்கிரஸ் ஆட்சேபணை தெரிவித்தது. மாநாட்டை நடத்த பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், பிரதமரின் அரசுப் பூர்வ பயணம், எந்தவொரு பொதுக் கூட்டத்துடனும் ஒருங்கிணைக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
January 21, 2017
உத்தராகண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனில் ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோதி பேச இருக்கிறார். இந்திய இராணுவ அகாடமி நடத்தும் இந்த ஒருநாள் மாநாட்டில் எல்லா இராணுவ கமாண்டர்களும், விமானப்படை, கடற்படையைச் சேர்ந்த சம அந்தஸ்து அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு தங்கள் படையின் தலைவர்களாக பொறுப்பேற்ற பிறகு மூன்று பாதுகாப்புப் படைத் தலைவர்களும் முதன் முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது தடவையாக புது தில்லியிலிருந்து வெளியே நடத்தப்படும் இந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரும் கலந்து கொள்வார். முந்தைய மாநாடு 2015 டிசம்பர் 15-ம் தேதி கொச்சி கடலோரப் பகுதிக்கு அப்பால் INS விக்கிரமாதித்யாவில் நடத்தப்பட்டது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் அதிரடித் தாக்குதல்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவும் நிலவரம், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் உருவாகிவரும் பாதுகாப்பு நிலைமை பற்றி இந்த மாநாட்டில் முக்கியமாகப் பேசப்படலாம். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக உத்தராகண்டில் இந்த மாநாட்டை நடத்துவது பற்றி காங்கிரஸ் ஆட்சேபணை தெரிவித்தது. மாநாட்டை நடத்த பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், பிரதமரின் அரசுப் பூர்வ பயணம், எந்தவொரு பொதுக் கூட்டத்துடனும் ஒருங்கிணைக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment