11 Jan 2017

இலங்கை: இந்திய ஹை-கமிஷன் ஏற்பாடு செய்திருந்த 14—வது ப்ரவாஸி பாரதியா திவஸ் நேற்று கொண்டாடப்பட்டது.
January 10, 2017


இலங்கையில், இந்திய ஹை-கமிஷன் ஏற்பாடு செய்திருந்த 14-வது ப்ரவாஸி பாரதியா திவஸ் இலங்கையில் நேற்று கொண்டாடப்பட்டது.   இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும், இந்திய ஹை-கமிஷன் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.  வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக நடத்தப்படும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, இலங்கைக்கான இந்தியாவின் தற்காலிக ஹை-கமிஷனர் Arindam Bagchi, இலங்கையின் முன்னேற்றத்திற்கும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பையை பாரட்டிப் பேசினார்.  திறன் வளர்ப்பு இந்தியா, தூய்மை இந்தியா இயக்கம் மற்றும்  இந்தியாவின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யவேண்டும் என்று இந்திய வம்சாவளியினரை அவர் கேட்டுக்கொண்டார்.  வெளிநாடுவாழ் இந்தியர்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோதியின் முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார்.  இலங்கை அரசு, இந்திய வம்சாவளியினருக்கு வழங்கியிருக்கும் கல்வி உதவித்திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பேசிய வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்திய அரசின் முயற்சிகளையும் குறிப்பிட்டு பேசினார்கள்.  நிகழ்ச்சியில், ப்ரவாஸி பாரதிய திவஸ் தொடர்பான ஆவணப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது.

No comments:

Post a Comment