மத்திய அரசின் புதியதிட்டங்கள்
Central Government New Plans
பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டங்களின் நோக்கம் இந்தியாவை மாற்றங்களை ஏற்படுத்தி விரைந்து முன்னேற்றம் காணச்செய்வதேயாகும்.
உருமாறும் இந்தியா
மோடி அரசாங்கத்தால் இந்தியாவை விரைந்து முன்னேறும் நாடாக மாற்றம் காணச்செய்வதற்கு தொடங்கப்பட்ட திட்டங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டமும் மேக் இன் இந்தியா திட்டமும் முதன்மையான திட்டங்களாகும்.
டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கம் இந்தியாவை கணினிப் பயன்பாட்டில் மேம்பட்ட, அறிவுப் பொருளாதாரம் சார்ந்த சமூகமாக முன்னேற்றம் காணச்செய்வதாகும். இத்திட்டத்தில் மூன்று அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். அவை:
ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் உள்கட்டுமானத்தை வழங்குதல்
தேவைக்கேற்றபடி சேவை மற்றும் நிர்வாகம்
மக்களை கணினிப் பயன்பாட்டில் திறன்மிக்கவர்களாக்குவது.
டிஜிட்டல் இந்தியாவின் இரண்டுஅடிப்படைகள்
அனைவருக்கும் தகவல் கிடைக்க வழிசெய்தல்-இதனை பொது தொலைபேசிகள் மற்றும் இணையம் மூலமாக சாதிக்கலாம்.
அடுத்தது மின் நிர்வாகம்- தொழில்நுட்பம், சேவைகளை மின்னணுத் தொடர்பில் வழங்குவது, மின்னணு உற்பத்தி, வேலைகளுக்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சாதிக்கலாம்.
மேக் இன் இந்தியா
இத்திட்டத்தின் குறிக்கோள்கள் மூன்று.
இந்தியாவை உற்பத்தி மையமாக முன்னிறுத்துவது,பொருளாதார மாற்றம்தேவையற்ற விதிகள், ஒழுங்குமுறை களை நீக்குவது.
குறிப்பாக ஆட்டோமொபைல், கெமிக்கல், தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறை, டெக்ஸ்டைல்ஸ், தோல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வடிவமைப்பு உற்பத்தி, புதுப்பித்தக்க ஆற்றல், சுரங்கத் தொழில், மின்னணு உள்ளிட்ட துறைகளில் இடையூறாக விளங்கும் விதி, ஒழுங்குமுறைகளை நீக்குவது.
தொழில்முனைவு மேம்பாட்டுத்திட்டங்கள்
தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக அரசானது சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதிகளை அதிகரிக்கவும், அவற்றின் சாத்தியத்திறனை விரிவுபடுத்தவும், கடனால் அழிந்துபடுவதைத் தடுக்கவும் தீர்மானித்துள்ளது.
பிரதமரின் ஜன்தன் யோஜனா
இத்திட்டம் குறைந்த வருவாய் உடையோருக்கானது. அவர்கள், தம் வங்கிக் கணக்கில் இருப்புப் பணம் எதுவுமின்றியே சேமிப்பு வங்கிக் கணக்கு தொடங்கவும், பணவைப்புகளுக்கு வட்டி பெறவும், ரூபே கார்டு மூலம் தேவையடிப் படையிலான கடன் பெறவும், வீட்டுக்கு ஒரு கணக்கு அடிப்படையில் ரூ. 5,000 வரையில் மிகைப்பற்று வைக்கவும், பணம் அனுப்பும் வசதிபெறவும், ரூ. 30,000 வரையிலான காப்பீட்டு வசதிபெறவும், ரூ. 1 செலவில் விபத்துக் காப்பீடு பெறவும்வசதிசெய்யப்பட்டுள்ளது.
முத்ரா வங்கித் திட்டம்
குறுந்தொழில் மேம்பாடு மட்டும் மறுநிதிக் கழகம் என்னும் ஆங்கில சொற்றொடருக்கான சுருக்கமே முத்ராவாகும். முத்ரா வங்கித் திட்டம் குறுங்கடன் அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகவும், சிறுதொழில் செய்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தருவதாகவும் திகழும். இத்திட்டத்தில் மூன்று வகைப்பாடு உள்ளது.
ரூ. 50,000 வரை கடன் தரும் ஆரம்பக் கட்ட திட்டத்துக்கு ஷிசு எனவும், 50,000 முதல் 5 லட்சம் வரை கடன் தரும் இடைநிலை கடன் திட்டத்துக்கு கிஷோர் எனவும், 5 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை கடன் தரும் மேல்நிலை கடன் திட்டத்துக்கு தருண் எனவும் பெயர்.
விவசாயிகள் மற்றும் கிராமமேம்பாட்டுத் திட்டம்
நம் நாட்டின் விவசாயிகள் மற்றும் கிராம மேம்பாட்டுக்கென்றே சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கிஷான் விகாஸ் பத்திரம்
கிஷான் விகாஸ் பத்திரம் என்பதும் சேமிப்புத் திட்டத்துக்கான சான்றிதழாகும். இதில் சேமிக்கும் தொகை 100 மாதங்களில் இரட்டிப்பாகும். இத்திட்டத்தில் ரூ.50,000 வரை சேமிக்கலாம். ஒருவர் பெயரிலோ, கூட்டாகவோ சேமித்து சான்றிதழ் பெறலாம். இந்தச் சான்றிதழைக் காட்டி7% கடன்பெறலாம்.
கிருஷி அம்பானி பீமா திட்டம்
விவசாயத்துக்கு உத்வேகம் தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். எதிர்பாராத பருவநிலை, இயற்கை அழிவால் நிதியிழப்பு ஏற்பட்டால் அதை தீர்க்க இத்திட்டம் உதவும்.
பிரதமரின் கிராம சின்ஜாய் திட்டம்
நாட்டின் அனைத்து விவசாயக் களத்துக்கும் கால்வாய் நீரைக் கொண்டுவர உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மண்வள அட்டை திட்டம்
இத்திட்டம் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மண்வள அட்டையை வழங்குகிறது. இந்த அட்டையில் எந்தப் பயிருக்கு என்ன போஷாக்கு, உரம் தேவையென்ற விவரம், பரிந்துரை போன்றவை இடம்பெற்றிருக்கும்.
தீனதயாள் உபாத்யாயாகிராமஜோதி திட்டம்
இந்தியாவின் கிராமப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமங்களுக்கு மின்வசதி வழங்க அரசாங்கம் இத்திட்டத்தில் ரூ 75,600 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
தீன்தயாள் உபாத்யாயா கிராமீன்கௌசல்யா திட்டம்
இது கிராமத்திலுள்ள 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வேலைவழங்குவதை இலக்காகக் கொண்ட திட்டம்.
மகாத்மா காந்தி பிரவாசி சுரக்சாதிட்டம்
இது இந்தியாவுக்கு வெளியில் பணியாற்றுகிற, குடிப்பெயர்வு சோதனை தேவைப்படும் பாஸ்போர்ட்டில் சென்ற நபர்களுக்கான சிறப்பு சமூகப்பாதுகாப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு தானாகவே ஓய்வூதியம் மற்றும் ஆயுள் காப்பீடு கிடைக்கும். இத்திட்டத்தில் இணைந்து இயற்கையான காரணத்தால் இறப்பவர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும். மேலும் வெளிநாட்டிலிலிருந்து திரும்பவும், மறுகுடியேற்றத்துக்கும், ஓய்வுக்குப்பின் சேமிக்கவும் உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நகர் மேம்பாட்டுத் திட்டங்கள்
தூய்மை இந்தியா திட்டம்
2019 அக்டோபர் 2-க்குள் தூய்மையானஇந்தியாவை உருவாக்கும் தேசிய பிரச்சாரத் திட்டம் இதுவாகும். நகர மேம்பாட்டு அமைச்சகத்தால் இதற்கான பிரச்சாரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. திறந்தவெளியில் மலம் கழிப்பது, திடக் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் கவனம் இந்த அமைச்சகம் செலுத்தும். இதன் ஒரு அம்சமாக இந்தத் துறை 476 நகரங்களை அவற்றின் தூய்மை நிலையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பட்டியலிலிட்டுள்ளது. இதில் மைசூர், திருச்சி, நவி மும்பை, கொச்சி, ஹாசன், மாண்டியா, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹாலிசாகர் போன்ற நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. நகரங்களிலுள்ள குழந்தைகளிடையே தூய்மையைப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் பாலர் தூய்மை இந்தியா திட்டமும் நடப்பிலுள்ளது.
அம்ருத்
நகரை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்து வதற்கான அடல் திட்டம் எனும் ஆங்கிலச்சொற்றொடரின் சுருக்கமே அம்ருத்.
நீர் விநியோகம், கழிவுநீர் கால்வாய் வசதிகள் மற்றும் நிர்வாகம், வெள்ளநீர்வடிகால் வசதி, பொது வாகன வசதிகளை பலப்படுத்துதல், பூங்கா அமைத்தல், பொழுதுபோக்கு குழுக்கள் அமைத்தல் இவற்றில் கவனம் செலுத்துவதே இத்திட்டத்தின் அம்சமாகும்.
ஹிரிடே
தேசிய பாரம்பரிய நகர் மேம்பாடு திட்டம்என்பதன் சுருக்கமே ஹிரிடே. பாரம்பரிய நகரங்களை அனைத்து அம்சங்களிலும் மேம்பாடடையச் செய்வதே இத்திட்டத்தின் இலக்காகும். தற்போது 12 நகரங்கள் அடையாளம் காணப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவை: அஜ்மீர், அமராவதி, அமிர்தசரஸ், பதாமி, துவாரகை, கயா, காஞ்சிபுரம், பூரி, வாரணாசி, வேளாங்கன்னி, வாரங்கல், மதுரா. மொத்தம் ரூ. 500 கோடி செலவில் 27 மாத கால அளவில் இத்திட்டம் நிறைவுக்குவரும்.
சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் சுதேசி தரிசனத் திட்டம்
குறிப்பிட்ட சுற்றுலா தலங்களில், அவற்றின் உட்கட்டுமான வசதியை உலகத் தரத்துக்கு உயர்த்தி சுற்றுலா மீதான ஈர்ப்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முழுமையான சுற்றுலா அனுபவத்தை வழங்குவதில் இத்திட்டம் கவனம் செலுத்தும். அனைத்து மதங்களைச் சேர்ந்த புனித சுற்றுலாத்தலங்களின்உட்கட்டுமானத்தை உயர்த்தி, அடிப்படைவசதிகளைச் செய்து நகரை அழகுபடுத்துவதில் இத்திட்டம் கவனம்செலுத்தும்.
Central Government New Plans
பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டங்களின் நோக்கம் இந்தியாவை மாற்றங்களை ஏற்படுத்தி விரைந்து முன்னேற்றம் காணச்செய்வதேயாகும்.
உருமாறும் இந்தியா
மோடி அரசாங்கத்தால் இந்தியாவை விரைந்து முன்னேறும் நாடாக மாற்றம் காணச்செய்வதற்கு தொடங்கப்பட்ட திட்டங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டமும் மேக் இன் இந்தியா திட்டமும் முதன்மையான திட்டங்களாகும்.
டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கம் இந்தியாவை கணினிப் பயன்பாட்டில் மேம்பட்ட, அறிவுப் பொருளாதாரம் சார்ந்த சமூகமாக முன்னேற்றம் காணச்செய்வதாகும். இத்திட்டத்தில் மூன்று அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். அவை:
ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் உள்கட்டுமானத்தை வழங்குதல்
தேவைக்கேற்றபடி சேவை மற்றும் நிர்வாகம்
மக்களை கணினிப் பயன்பாட்டில் திறன்மிக்கவர்களாக்குவது.
டிஜிட்டல் இந்தியாவின் இரண்டுஅடிப்படைகள்
அனைவருக்கும் தகவல் கிடைக்க வழிசெய்தல்-இதனை பொது தொலைபேசிகள் மற்றும் இணையம் மூலமாக சாதிக்கலாம்.
அடுத்தது மின் நிர்வாகம்- தொழில்நுட்பம், சேவைகளை மின்னணுத் தொடர்பில் வழங்குவது, மின்னணு உற்பத்தி, வேலைகளுக்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சாதிக்கலாம்.
மேக் இன் இந்தியா
இத்திட்டத்தின் குறிக்கோள்கள் மூன்று.
இந்தியாவை உற்பத்தி மையமாக முன்னிறுத்துவது,பொருளாதார மாற்றம்தேவையற்ற விதிகள், ஒழுங்குமுறை களை நீக்குவது.
குறிப்பாக ஆட்டோமொபைல், கெமிக்கல், தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறை, டெக்ஸ்டைல்ஸ், தோல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வடிவமைப்பு உற்பத்தி, புதுப்பித்தக்க ஆற்றல், சுரங்கத் தொழில், மின்னணு உள்ளிட்ட துறைகளில் இடையூறாக விளங்கும் விதி, ஒழுங்குமுறைகளை நீக்குவது.
தொழில்முனைவு மேம்பாட்டுத்திட்டங்கள்
தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக அரசானது சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதிகளை அதிகரிக்கவும், அவற்றின் சாத்தியத்திறனை விரிவுபடுத்தவும், கடனால் அழிந்துபடுவதைத் தடுக்கவும் தீர்மானித்துள்ளது.
பிரதமரின் ஜன்தன் யோஜனா
இத்திட்டம் குறைந்த வருவாய் உடையோருக்கானது. அவர்கள், தம் வங்கிக் கணக்கில் இருப்புப் பணம் எதுவுமின்றியே சேமிப்பு வங்கிக் கணக்கு தொடங்கவும், பணவைப்புகளுக்கு வட்டி பெறவும், ரூபே கார்டு மூலம் தேவையடிப் படையிலான கடன் பெறவும், வீட்டுக்கு ஒரு கணக்கு அடிப்படையில் ரூ. 5,000 வரையில் மிகைப்பற்று வைக்கவும், பணம் அனுப்பும் வசதிபெறவும், ரூ. 30,000 வரையிலான காப்பீட்டு வசதிபெறவும், ரூ. 1 செலவில் விபத்துக் காப்பீடு பெறவும்வசதிசெய்யப்பட்டுள்ளது.
முத்ரா வங்கித் திட்டம்
குறுந்தொழில் மேம்பாடு மட்டும் மறுநிதிக் கழகம் என்னும் ஆங்கில சொற்றொடருக்கான சுருக்கமே முத்ராவாகும். முத்ரா வங்கித் திட்டம் குறுங்கடன் அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகவும், சிறுதொழில் செய்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தருவதாகவும் திகழும். இத்திட்டத்தில் மூன்று வகைப்பாடு உள்ளது.
ரூ. 50,000 வரை கடன் தரும் ஆரம்பக் கட்ட திட்டத்துக்கு ஷிசு எனவும், 50,000 முதல் 5 லட்சம் வரை கடன் தரும் இடைநிலை கடன் திட்டத்துக்கு கிஷோர் எனவும், 5 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை கடன் தரும் மேல்நிலை கடன் திட்டத்துக்கு தருண் எனவும் பெயர்.
விவசாயிகள் மற்றும் கிராமமேம்பாட்டுத் திட்டம்
நம் நாட்டின் விவசாயிகள் மற்றும் கிராம மேம்பாட்டுக்கென்றே சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கிஷான் விகாஸ் பத்திரம்
கிஷான் விகாஸ் பத்திரம் என்பதும் சேமிப்புத் திட்டத்துக்கான சான்றிதழாகும். இதில் சேமிக்கும் தொகை 100 மாதங்களில் இரட்டிப்பாகும். இத்திட்டத்தில் ரூ.50,000 வரை சேமிக்கலாம். ஒருவர் பெயரிலோ, கூட்டாகவோ சேமித்து சான்றிதழ் பெறலாம். இந்தச் சான்றிதழைக் காட்டி7% கடன்பெறலாம்.
கிருஷி அம்பானி பீமா திட்டம்
விவசாயத்துக்கு உத்வேகம் தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். எதிர்பாராத பருவநிலை, இயற்கை அழிவால் நிதியிழப்பு ஏற்பட்டால் அதை தீர்க்க இத்திட்டம் உதவும்.
பிரதமரின் கிராம சின்ஜாய் திட்டம்
நாட்டின் அனைத்து விவசாயக் களத்துக்கும் கால்வாய் நீரைக் கொண்டுவர உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மண்வள அட்டை திட்டம்
இத்திட்டம் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மண்வள அட்டையை வழங்குகிறது. இந்த அட்டையில் எந்தப் பயிருக்கு என்ன போஷாக்கு, உரம் தேவையென்ற விவரம், பரிந்துரை போன்றவை இடம்பெற்றிருக்கும்.
தீனதயாள் உபாத்யாயாகிராமஜோதி திட்டம்
இந்தியாவின் கிராமப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமங்களுக்கு மின்வசதி வழங்க அரசாங்கம் இத்திட்டத்தில் ரூ 75,600 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
தீன்தயாள் உபாத்யாயா கிராமீன்கௌசல்யா திட்டம்
இது கிராமத்திலுள்ள 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வேலைவழங்குவதை இலக்காகக் கொண்ட திட்டம்.
மகாத்மா காந்தி பிரவாசி சுரக்சாதிட்டம்
இது இந்தியாவுக்கு வெளியில் பணியாற்றுகிற, குடிப்பெயர்வு சோதனை தேவைப்படும் பாஸ்போர்ட்டில் சென்ற நபர்களுக்கான சிறப்பு சமூகப்பாதுகாப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு தானாகவே ஓய்வூதியம் மற்றும் ஆயுள் காப்பீடு கிடைக்கும். இத்திட்டத்தில் இணைந்து இயற்கையான காரணத்தால் இறப்பவர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும். மேலும் வெளிநாட்டிலிலிருந்து திரும்பவும், மறுகுடியேற்றத்துக்கும், ஓய்வுக்குப்பின் சேமிக்கவும் உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நகர் மேம்பாட்டுத் திட்டங்கள்
தூய்மை இந்தியா திட்டம்
2019 அக்டோபர் 2-க்குள் தூய்மையானஇந்தியாவை உருவாக்கும் தேசிய பிரச்சாரத் திட்டம் இதுவாகும். நகர மேம்பாட்டு அமைச்சகத்தால் இதற்கான பிரச்சாரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. திறந்தவெளியில் மலம் கழிப்பது, திடக் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் கவனம் இந்த அமைச்சகம் செலுத்தும். இதன் ஒரு அம்சமாக இந்தத் துறை 476 நகரங்களை அவற்றின் தூய்மை நிலையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பட்டியலிலிட்டுள்ளது. இதில் மைசூர், திருச்சி, நவி மும்பை, கொச்சி, ஹாசன், மாண்டியா, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹாலிசாகர் போன்ற நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. நகரங்களிலுள்ள குழந்தைகளிடையே தூய்மையைப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் பாலர் தூய்மை இந்தியா திட்டமும் நடப்பிலுள்ளது.
அம்ருத்
நகரை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்து வதற்கான அடல் திட்டம் எனும் ஆங்கிலச்சொற்றொடரின் சுருக்கமே அம்ருத்.
நீர் விநியோகம், கழிவுநீர் கால்வாய் வசதிகள் மற்றும் நிர்வாகம், வெள்ளநீர்வடிகால் வசதி, பொது வாகன வசதிகளை பலப்படுத்துதல், பூங்கா அமைத்தல், பொழுதுபோக்கு குழுக்கள் அமைத்தல் இவற்றில் கவனம் செலுத்துவதே இத்திட்டத்தின் அம்சமாகும்.
ஹிரிடே
தேசிய பாரம்பரிய நகர் மேம்பாடு திட்டம்என்பதன் சுருக்கமே ஹிரிடே. பாரம்பரிய நகரங்களை அனைத்து அம்சங்களிலும் மேம்பாடடையச் செய்வதே இத்திட்டத்தின் இலக்காகும். தற்போது 12 நகரங்கள் அடையாளம் காணப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவை: அஜ்மீர், அமராவதி, அமிர்தசரஸ், பதாமி, துவாரகை, கயா, காஞ்சிபுரம், பூரி, வாரணாசி, வேளாங்கன்னி, வாரங்கல், மதுரா. மொத்தம் ரூ. 500 கோடி செலவில் 27 மாத கால அளவில் இத்திட்டம் நிறைவுக்குவரும்.
சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் சுதேசி தரிசனத் திட்டம்
குறிப்பிட்ட சுற்றுலா தலங்களில், அவற்றின் உட்கட்டுமான வசதியை உலகத் தரத்துக்கு உயர்த்தி சுற்றுலா மீதான ஈர்ப்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முழுமையான சுற்றுலா அனுபவத்தை வழங்குவதில் இத்திட்டம் கவனம் செலுத்தும். அனைத்து மதங்களைச் சேர்ந்த புனித சுற்றுலாத்தலங்களின்உட்கட்டுமானத்தை உயர்த்தி, அடிப்படைவசதிகளைச் செய்து நகரை அழகுபடுத்துவதில் இத்திட்டம் கவனம்செலுத்தும்.
No comments:
Post a Comment