30 Jan 2017

திகார் ஆண்கள் சிறைக்கு முதல் முறையாக அன்சு மங்களா பெண் அதிகாரி ஒருவர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கிரண்பேடி மற்றும் விமலா மெஹ்ரா ஆகிய இரு பெண் அதிகாரிகள் திகார் சிறையின் இயக்குனர் ஜெனரலாக பணியாற்றியுள்ளனர்.

- கொல்கத்தாவில் நடைபெற்ற இசை விழாவில் பாடகர் ஹரிஹரனுக்கு சர்வோட்டம் சம்மன் விருது வழங்கப்பட்டுள்ளது

- சபரிமலை யில் மகரவிளக்கு நாளில் அவசர தேவைகள் அனைத்துக்கும் ஹாட்லைன் வசதி ஏற்படுத்தி பி.எஸ்.என்.எல். சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது

- ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் விமான நிலையம் இயங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இங்கு புதிய முனையம் கட்டுவதற்கு அரசு ₹135 கோடி ஒதுக்கீடு செய்தது.

- இந்தியாவுக்கான ஹஜ் கோட்டா 1.36 லட்சம் யாத்ரீகர்களாக இருந்து  1.70 லட்சம் யாத்ரீகர்களாக உயர்த்தி சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது
- இந்தியாவில் முதன்முறையாக மாணவர்களுக்கான ஸ்டார்ட்-அப் கொள்கையை குஜராத் மாநிலம் துவக்கியுள்ளது

- இந்தியாவில் முதன்முறயாக Global Content Bazaar மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் அமைய உள்ளது

- மூன்று செயற்கைகோளுடன் சீன நாடு Kuaizhou-1A (KZ-1A) என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. வர்த்தக ரீதியில் செலுத்திய முதல் செயற்கை கோளாகும்

-ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் (2017) இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரேயா மேத்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

- ஆரம்ப நிலை விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலுக்கான அதிபர் விருதிற்கு அமரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிக்ள் 4 பேர் தேர்வாகியுள்ளனர்
  -மனிஷ் அரோரா
  -பங்கஜ் லால்
  -ஆரதனா திரிபாதி
  -கௌசிக் சௌத்ரி

-சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனம் பார்வையற்றோர்களுக்காக வேகமாக வாசிக்க கூடிய வகையில் Divya Nayan என்ற கருவியை உருவாக்கியுள்ளது

-இந்திய சினிமா வரலாற்றில் அமீர்கான் நடித்து வெளியான தங்கல் படம் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது
மாடுகளுக்கும் அடையாள எண் - மத்திய அரசு
5/1/2017

பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் நாடு முழுவதும் மாடுகளுக்கு 12 இலக்க அடையாள எண் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கி உள்ளது. ஒவ்வொரு மாட்டுக்கும் பிரத்யேகமாக வழங்கப்படும் இந்த எண் மூலம் மாடுகளின் உடல் நிலையை கண்காணித்து அவற்றிக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்பன போன்ற தகவலை தெரிந்து கொள்ள முடியும். இதற்காக விவசாயிகளிடம் மாடுகளுக்கான ஹெல்த் கார்டு வழங்கப்படும். ரூ.148 கோடி நிதி மூலம் நாட்டில் உள்ள 8.8 கோடி மாடுகளுக்கு அடையாள எண் பொருத்தும் பணியில் 1 லட்சம் பேர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
திருப்பூர் குமரன் (எ) கொடிகாத்த குமரன் :
11/1/2017

சுதந்திர போராட்ட வீரர்கள் என்றதும் நம் நினைவுக்கு வரும் சிலரில் கொடி காத்த குமரனும் ஒருவர். இவரது இயற்பெயர் 'குமாரசாமி'. 1904ம் ஆண்டு அக்டோபர் 4ம் நாள் ஈரோடு அடுத்த சென்னிமலையில், நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். குடும்ப ஏழ்மையின் காரணமாக தனது பள்ளி வாழ்க்கையை 5ம் வகுப்பு வரையே தொடர முடிந்தது. 1923ல் தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை திருமணம் செய்து கொண்டார். குமாரசாமியின் குடும்பம் தறி நெசவு தொழிலை பூர்விகமாக கொண்டது. தொழிலில் போதிய வருமானம் இல்லாமையால் இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. அங்கு இவர் தனக்குப் பழக்கமான சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக பற்று கொண்ட குமரன், காந்தி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார். நாட்டுப்பற்று கொண்ட குமாரசாமி திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். மகாத்மா காந்தியின் கதர் இயக்கம் திருப்பூரில் தான் சிறப்பாக நடந்து வந்தது. குமாரசாமியும் கதர் இயக்கத்தில் கலந்துகொண்டு, தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிரஸ் தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார். 1932இல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932 ல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவானது. தேசபந்து வாலிபர் சங்கத்தினர் ஊர்வல ஏற்பாடுகளைச் செய்தனர். தியாகி 'பி.எஸ்.சுந்தரம்' தலைமையில் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு இந்த ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து சுமார் முப்பது நாற்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது; ரத்தம் பீரிட்டது. அவர் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை. வாய், மகாத்மா காந்திக்கு ஜே, பாரத மாதாக்கு ஜே என கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகியின் உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும், அவர் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை. நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். மரண அடிபட்ட குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தான் பிரிந்தது. அந்த வீரத் திருமகனின் உடல், யாரோ சிலரால் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. இந்தத் தமிழனின் வீரம் புதைக்கப்பட்டாலும், வரலாறு பேசிக்கொண்டே தான் இருக்கும்.
டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக தமிழர் நியமனம்
12/1/2017

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்புவகித்து வந்த சைரஸ்மிஸ்திரி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொர்ந்து, மும்பையில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் தலைமைப்பதவிக்ககான தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில், டாடா நிறுவனதலைவர் ரத்தன் டாடா உட்பட 5 பேர் கொண்ட அக்குழு, தற்போது டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலராகப் பணியாற்றி வரும் என். சந்திரசேகரனை இப்பதவிக்குத் தேர்வு செய்துள்ளது. இவர், நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு வருகிறது துஸாட்ஸ் அருங்காட்சியகம் 13/01/2017

உலகம் முழுவதும் பிரபலமான அருங்காட்சியங்களில் ஒன்றான துஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் கிளை டெல்லியில் தொடங்கப்படவுள்ளது.

உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகமான மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியம் 22 கிளைகள் கொண்டது. அவை உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகின்றன. அந்த அருங்காட்சியகத்தின் 23வது கிளை இந்தியாவில் டெல்லியில் அமையவுள்ளது. இது பற்றிய அறிவிப்பை மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியக நிறுவன இயக்குனர் மார்செல் க்ளூஸ் வெளியிட்டார்.

இதற்காக, டெல்லியில் வருகிற ஜூன் மாதம் நடக்கவுள்ள திறப்புவிழா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார். அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஹாலிவுட் பாப் ஸ்டார் லேடி காகா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

1835ஆம் ஆண்டு மாரீ துஸாட் என்பவரால் லண்டனில் தொடங்கப்பட்ட மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், ஷாரூக்கான், ஹிருத்திக்ரோஷன், சல்மான் கான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களின் தத்ரூபமான மெழுகுச்சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அட அப்படியா.

♦ உலகில் வருமான வரி இல்லாத நாடு சவுதி அரேபியா.

♦ தஞ்சை சரஸ்வதி மஹhல் நூலகத்தில் பலமொழி நூல்களும், கையெழுத்துப் பிரதிகளும், ஓலைச்சுவடிகளும் உள்ளன.

♦ உலகிலேயே ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் நாடு சுவிட்சர்லாந்து தான்.

♦ உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% இந்தியர்கள்.

♦ மதராஸ் என்பது 1996 ஆம் ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.

♦ ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி ஸ்காட்லாண்ட் என்ற இடத்தில் நடந்தது.

♦ காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு.
தெரியுமா உங்களுக்கு...!

உலகிலேயே  அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு)  இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - பிருத்வி

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியயாவின் தேஜஸ்

உலகிலேயே அதிவேக போர்விமானம் - சுகோய் 30 ரக இந்திய விமானம்

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - அக்ணி 5

உலகிலேயே GPS தொழில்நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை - இந்தியாவில் K4 ஏவுகணை

உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை - இந்தியாவின் நிர்பாய்

உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி - அர்ஜுனா டாங்கி.

உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர் இந்தியாவின் பினாகா.                      

​♻பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்♻​
இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள் -NATIONAL AWARDS
இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்:

• இந்தியாவின் மிக உயர்ந்த விருது 'பாரத ரத்னா'

• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

• அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

• மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

• மிக உயர்ந்த கெüரவ ராணுவ விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது

• மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

• மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

• மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

• மிக உயர்ந்த வேளாண்மை விருது -க்ருஷி பண்டிட் விருது

• மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது
1. மங்கையர்க்கரசி காதல் நூல் ஆசிரியர் யார்?
- வீரமாமுனிவர்
2. Broking Wing's நூல் ஆசிரியர் யார்?
- சரோஜினி நாயுடு
3. சேரர்களை அசோகர் தன் கல்வெட்டில் எவ்வாறு கூறிப்பிட்டு உள்ளார்?
- கேரள புத்திரர்கள்
4. பாலக்காடு கணவாய் அமைந்துள்ள இடம்?
- கேரளா
5. இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வேறுபெயர் _______?
- பாலம் (டெல்லி)
6. 🦀 புறச்சட்டகம் எதனால் ஆனது?
- கைட்டின்
7. ☕ காபியில் உள்ள வேதிபொருள் _______?
- காபீன்
8. 🐖 பன்றியால் பரவும் நோய்?
- ஸ்வான் புளூ
9. ஒரு 🐎 திறன் என்பது?
- 746 வாட்
10. ஒரு கிலோவாட் என்பது எத்தனை குதிரை திறன்?
- 1.340 HP (1000/746 = 1.340)
11. 🐼 பன்டா கரடி எந்த நிறுவணத்துடைய  சின்னம்?
- சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு
12. 🐘 கர்ப காலம் ______ ஆண்டு?
- 22 மாதம் (சுமார் 1 வருடம் 10 மாதம்)
13. 🐀 எலியின் மூலம் பரவும் நோய்கள்?
- பிளேக், லீஸ்மேணியசீஸ் (எலி சிறுநீர் மூலம்)
14. வெறி 🐕 கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் யார்?
- லூயி பாஸ்டர்
15. 🐝 தேனி நடன அசைவுக்காக ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றவர் யார்?
- காரல் வான் ப்ரிஷ்
16. 🐄 பசு மாடுக்கு வியர்வை சுரப்பி எங்கு உள்ளது?
- மூக்கு
17.  முதன் முதலில் குளோனிங் மூலம் உருவாக்க பட்ட 🐑 குட்டி பெயர் என்ன?
- டாலி
18. 🐈 பூனை கண்கள் இருட்டில் மின்ன காரணம்?
- டபிட்டம்
19. 🌸 மலரின் இன்றியமையாத வட்டம் எது எது _______ , ________?
- மகரந்த்தாள் வட்டம், சூலக வட்டம்
20. கடைசியாக தமிழகத்தை தாக்கிய 🌪 ________?
- வார்தா
Thiruvananthapuram Mail to get LHB coaches from Jan 18, 2017.

திருவனந்தபுரம் மெயில் ரயிலில் அதிநவீன எல்.ஹெச்.பி பெட்டிகள்..!

திருவனந்தபுரம் மெயில் ரயிலில் எளிதில் தடம்புரளாத எல்.ஹெச்.பி பெட்டிகள் பொறுத்தப்பட உள்ளன.

சென்னை-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலான திருவனந்தபுரம் மெயில் ரயிலில் வரும் ஜனவரி 18-ஆம் தேதி முதல் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட எல்.ஹெச்.பி பெட்டிகள் பொறுத்தப்பட இருக்கின்றன.

மங்களூர் எக்ஸ்பிரஸ்,பாண்டியன் எக்ஸ்பிரஸ்,ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சேவைகளுக்கு அடுத்தபடியாக,நான்காவதாக எல்.ஹெச்.பி பெட்டிகள் பொறுத்தப்பட உள்ள ரயில் சேவை இதுவாகும்.

மற்ற சாதாரண ரயில் பெட்டிகளை விட,எல்.ஹெச்.பி ரயில் பெட்டிகள் அதிக அளவு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கின்றன.இவை எளிதில் தடம் புரளாது.இவை அலுமினியத்தால் செய்யப்படுபவை என்பதால்,மிகவும் எடை குறைவாக இருக்கும்.எனவே ரயில் என்ஜின்களால் இந்த பெட்டிகளை எளிதில் இழுத்துச் செல்ல முடியும்.மேலும் இந்த வகை பெட்டிகள் அதிர்வுகளை ஏற்படுத்தாது என்பதால்,ரயில் பயணம் மிகவும் இனிமையாக அமையும்.

வெளிநாட்டு தொழில்நுட்பம் கொண்ட இந்த எல்.ஹெச்.பி பெட்டிகள்,தற்போது சென்னை மற்றும் கபுதலாவில் உள்ள ரயில் பெட்டிகள் உற்பத்தி நிலையங்களில் முழு வீச்சில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.தற்போதைக்கு தென்னக ரயில்வேக்கு 250 எல்.ஹெச்.பி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குமரியில் பாரதமாதா கோவிலை இன்று திறந்து வைக்கிறார் மோடி
12/1/2017

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாரத மாதா கோவிலை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ள இக்கோவிலில் 15 அடி உயரத்தில் 5.5 டன் எடைக் கொண்ட பாரத மாதாவின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. கோவிலின் உட்புறத்தில் ராமாயணக் காட்சிகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. அதனுடன் நடராஜர் திருவுருவம், பகவதி அம்மன் தவக் கோலம் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. கோவிலின் முன்புறம் 27 அடிஉயர உயர அனுமன் சிலையும் நிறுவப் பட்டுள்ளது.

To follow Facebook group click here

https://www.facebook.com/groups/1031622320290175/
ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப் படுகிறது
January 12, 2017

தேசிய இளைஞர் தினம் இன்று. ஸ்வாமி விவேகானந்தரின் 154 வது பிறந்த நாளை  நாடு இன்று கொண்டாடுகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோதி ஹரியாணாவின் ரோதக்கில் தேசிய இளைஞர் தின நிகழ்ச்சியில்  காணொளிக்காட்சி மூலமாக உரையாற்றுகிறார். இம்மாதம் 16 ஆம் தேதி வரை தொடரும் இவ்விழாவின் மையக் கருத்து
“டிஜிட்டல் இந்தியாவின் இளைஞர்கள்”
Tamil Nadu: Children's Traffic Park 11.01.2017

குழந்தைகளின் போக்குவரத்து பூங்கா: விழிப்புணர்விற்காக கோவையில் தொடக்கம்

கோவை: குழந்தைகளின் போக்குவரத்து பூங்கா ஒன்று, கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியது நம் அனைவரது கடமை. அவ்வாறு செய்வதன் மூலம், நம்மை பாதுகாத்து கொள்வதோடு, சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ள முடியும். அதனை சிறுவயதில் இருந்தே மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில் கோவையில் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்து, அறிந்து கொள்ளும் வகையில் சாலைகள், சிக்னல்கள், குறியீடுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
History of Maraimalai Adigal.
📚 மறைமலை அடிகள் - படைப்புகள் 📚

உரைநடை நூல்கள்:

📘 பண்டைத் தமிழரும் ஆரியரும்

📘 மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

📘 வேளாளர் யாவர்

📘 சைவ சமயம்

📘 தமிழர் மதம்

📘 அம்பலவாணர் கூத்து

📘 தமிழ்த்தாய்

📘 தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்

📘 அறிவுரைக் கொத்து

📘 மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?

📘 மரணத்தின் பின் மனிதனின் நிலை

📘 சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

📘 தென்புலத்தார் யார்?

📘 சாதி வேற்றுமையும் போலிச் சைவமும்

📘 தொலைவில் உணர்த்தல்

செய்யுள் நூல்கள்:

📘 திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை

📘 சோமசுந்தரக் காஞ்சி

ஆய்வு நூல்கள்:

📘 முல்லைப்பாட்டு ஆராய்ச்சி

📘 பட்டினப்பாலை ஆராய்ச்சி

📘 சிவஞான போத ஆராய்ச்சி

📘 குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி

📘 திருக்குறள் ஆராய்ச்சி

நாடகம்:

🎥 சாகுந்தலம்

🎥 குமுதவல்லி

🎥 அம்பிகாபதி அமராவதி

நாவல்:

📘 கோகிலாம்பாள் கடிதங்கள்

📘 குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி

இதழ்:

📘 அறிவுக்கடல்

📘 The Ocean Od wisdom
கொலை,கற்பழிப்பு மற்றும் பிற வெறுக்கத்தக்க(heinous) குற்றங்களில் ஈடுபட்டோர்க்கு எடுக்கப்படும் DNA சோதனைகளுக்கு கட்டண விலக்கை அளித்து "ராஜஸ்தான்" மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
- இது போன்ற வழக்குகளை விரைந்து முடிக்கவே ராஜஸ்தான் மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது
தமிழக சுற்றுலா துறைக்கு புதிய செயலி
13/1/2017

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மற்றும் அவற்றின் தகவல்களை அறிந்து கொள்வதற்காக புதிய செயலி ஒன்றை தமிழ்நாடு சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. "பினாகின்" எனப் பெயரிடப்பட்ட இந்த செயலியானது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளி வந்துள்ளது. இந்த செயலியை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் செல்லப்பாண்டி நடராஜன் சென்னையில் இன்று துவக்கி வைத்தார். இந்த செயலி குறித்த கருத்துகளை ttdc.chennai@gmail.com என்ற முகவரியில் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கலாம்.

22 Jan 2017

டெஹ்ராடூனில் ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டில் பிரதமர் இன்று உரையாற்றுகிறார்.
January 21, 2017

உத்தராகண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனில் ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோதி பேச இருக்கிறார். இந்திய இராணுவ அகாடமி நடத்தும் இந்த ஒருநாள் மாநாட்டில் எல்லா இராணுவ கமாண்டர்களும், விமானப்படை, கடற்படையைச் சேர்ந்த சம அந்தஸ்து அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.  கடந்த  ஆண்டு தங்கள் படையின் தலைவர்களாக பொறுப்பேற்ற பிறகு மூன்று பாதுகாப்புப் படைத் தலைவர்களும் முதன் முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.  2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது தடவையாக புது தில்லியிலிருந்து வெளியே நடத்தப்படும் இந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரும் கலந்து கொள்வார்.  முந்தைய மாநாடு 2015 டிசம்பர் 15-ம் தேதி கொச்சி கடலோரப் பகுதிக்கு அப்பால் INS விக்கிரமாதித்யாவில் நடத்தப்பட்டது.  எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் அதிரடித் தாக்குதல்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவும் நிலவரம், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் உருவாகிவரும் பாதுகாப்பு நிலைமை பற்றி இந்த மாநாட்டில் முக்கியமாகப் பேசப்படலாம்.  சட்டசபைத் தேர்தலுக்கு  முன்பாக உத்தராகண்டில் இந்த மாநாட்டை நடத்துவது பற்றி காங்கிரஸ் ஆட்சேபணை தெரிவித்தது.  மாநாட்டை நடத்த பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.  ஆனால், பிரதமரின் அரசுப் பூர்வ பயணம், எந்தவொரு பொதுக் கூட்டத்துடனும் ஒருங்கிணைக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
General knowledge Questions with Answers !!
பொது அறிவு

1. தாவர உயிர் சக்தியினை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி? - சந்திரபோஸ்

2. தாவர வளர்ச்சிக்கு உதவும் முக்கிய ஹார்மோன்? - ஆக்ஸிஜன்

3. ஆணிவேரின் மாற்றுருவான நேபிபார்மிற்கு எ.கா? - பீட்ரூட்

4. பயிர் வளர்ச்சிக்கு தேவையான பயிர் உணவு? - பாஸ்பேட்

5. பிரையோபைட்டாவின் தாவர உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? - தாலஸ்

6. பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவின் பெயர்? - மைக்காலஜி

7. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை ________ பொழுதில் நடைபெறுகிறது? - பகல்

8. நீர்வழி என்பது? - ஹைட்ரஜன்

9. உணவை திரவ வடிவில் உட்கொள்வது? - பின்னோ சைட்டாசிஸ்

10. அல்லி சுரிய ஒளியில் மூடுவதும் இரவில் மலர்வதும் ஒரு? - திசை சாரா தூண்டுதல்

11. உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்? - மைட்டோகாண்ட்ரியா

12. தாவரங்களில் நீர் மற்றும் கனிம உப்புகள் கடத்தப்படும் நிகழ்ச்சி? - சாறேற்றம்

13. தாவரத்தின் தரைக்கு மேலுள்ள பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது? - நீராவிப் போக்கு

14. தாவரங்களின் அடியில் கீழ்கண்டவற்றில் எது இல்லை? - வைட்டமின் ஈ

15. மனித மற்றும் விலங்குகளின் உடலைப் பற்றி படிக்கும் படிப்பு ________ ஆகும். - உடற்கூறியியல்.
பொதுத்தமிழ் வினாக்கள்

1. திருவாரூர் உலா என்ற நூலின் ஆசிரியர்? - அந்தகவி வீரராகவர்

2. அந்தாதித் தொடை அமையப் பாடப்படும் சிற்றிலக்கியம்? - கலம்பகம்

3. கலம்பகம் பாடுவதில் வல்லவர்? - இரட்டையர்

4. உலகின் முதல் சிறுகதை தொகுதி எது? - தி ஸ்கெட்ச் புக்

5. சிறுகதைக்கென நோபல் பரிசு பெற்றவர் யார்? - ஷோலோகாவ்

6. குளத்தங்கரை அரசமரம் என்ற தமிழின் முதல் சிறுகதை எதைப் பற்றியது? - குழந்தை மணம்

7. மங்கையர்க்கரசியின் காதல் என்ற தமிழின் முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறாத சிறுகதை? - ஆறில் ஒரு பங்கு

8. சிறுகதையின் வள்ளுவர் எனப் புகழப்பட்டவர்? - புதுமைப்பித்தன்

9. வேதாளம் சொன்ன கதை என்ற நூலின் ஆசிரியர் யார்? - புதுமைப்பித்தன்

10. உன்னைப் போல் ஒருவன் என்ற நாவலின் ஆசிரியர் யார்? - ஜெயகாந்தன்

11. சிறுகதையின் மன்மதன் என்றழைக்கப்படுபவர் யார்? - கு.ப.ரா

12. இரா.கிருஷ்ணமூர்த்தி யாரின் மீது கொண்ட ஈடுபாட்டால் தம் பெயரை கல்கி என வைத்துக்கொண்டார்? - திரு.வி.க.

13. வட்டார வழக்குச் சொல்லகராதியை வெளியிட்டவர்? - இராஜநாராயணன்

14. யாருடைய எல்லாக் கதைகளிலும் குங்குமப்பொட்டு குமாரசாமி என்ற கதாபாத்திரம் வந்துள்ளது? - பி.எஸ்.இராமையா

15. காடன் கண்டது என்ற சிறுகதை நூலின் ஆசிரியர்? - பிரமிள்

To follow Facebook group click here

https://www.facebook.com/groups/1031622320290175/
நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016

1. அணு எண் 113 கொண்ட தனிமத்தின் பெயர் என்ன? நிஹோனியம்.

2. சர்வதேச விண்வெளி மையத்திற்கு SPACE JUNK COLLECTOR - ஐ அனுப்பியுள்ள நாடு எது? ஜப்பான்.

3. நிலவுக்கு ரோபோவை அனுப்பும் இந்திய விண்வெளி நிறுவனம் எது? TEAM INDUS.

4. G 7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு, 2016 நடைபெற்ற இடம் எது? ஹிரோஷிமா.

5. 2016, உலக பூஜ்ஜிய மாநாடு நடைபெற்ற இடம் எது? பாரீஸ்.

6. டிசம்பா; 2016-ல் இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது? வியட்நாம்.

7. உலகின் மிகப் பழமையான நீர் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? கனடா.

8. உலகின் மிக உயரமான நினைவிடம் எந்த நாட்டில் அமைய உள்ளது? இந்தியா.

9. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி) தலைவர் யார்? வி.கே.சர்மா.

10. சர்வதேச தடகள சம்மேளனத்தின் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது பெற்றவர் யார்? ஆஸ்டன்.

11. ஐ.நா. சபையின் சாம்பியன் ஆப் எர்த் என்ற சுற்றுச்சசூழல் விருது பெற்ற இந்தியர் யார்? அப்ரோஸ் ஷா.

12. பசுமை பத்திர முன்னோடி எனப்படும் GREEN BOND AWARD விருது பெற்ற வங்கி எது? யெஸ் வங்கி (YES BANK).

To follow Facebook group click here

https://www.facebook.com/groups/1031622320290175/
நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்  விடைகள்
=====================================

01) பொது இடங்களில் / காலியிடங்களில் குப்பைகளை எரிப்பவர்கள் மீது எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது?

விடை  -- ரூ 25,000

02)  Epsilon - 2 ?

விடை  -- ஜப்பான் அனுப்பிய திட எரிபொருள் ராக்கெட்

03) கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட , அதிகளவு பெண்கள் கலந்து கொண்ட தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு எங்கு நடைபெற்றது?

விடை -- தெலுங்கானா மாநில வாரங்கல் மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ( 21,276 பேர் )

04)  மலேசியாவில் நடைபெற்ற குழந்தைகள் கோல்ப் உலக சாம்பியன் போட்டியில் வென்ற இந்திய சிறுவன் யார் ?

விடை -- Arjun Bhati

05) Indian Institute of Corporate Affairs (IICA ) டைரக்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்படவர் யார் ?

விடை. --- சுனில் அரோரா

06) கொச்சியில் துவங்கப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் மூன்றாம் பாலினத்தவர் பள்ளியின் பெயர் என்ன ?

விடை. --- Sahaj international school

07)  பணமில்லா பரிவர்தனையை இளைஞர்களிடம் ஊக்குவிக்க , மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட பிரச்சார இயக்கம் என்ன?

விடை. -- #youth4digitalpaisa

08)  எகிப்து நாட்டின் எந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு மையத்தை அமைக்க இந்தியா ஒத்துக்கொண்டுள்ளது.?

விடை. -- Al Azhar University

09)  [i ] வாசகர் விருப்பத்தின் அடிப்படையில் டைம் நாளிதழ் 2016 சிறந்த மனிதர் யார் ?
[ii] டைம் நாளிதழ் 2016 சிறந்த மனிதர் யார் ?

விடை. -- (i ) மோடி ., ( ii ) டொனால்ட் டிரம்ப்

10) உலகின் முதல் water - wave laserஐ உருவாக்கியவர்கள் யார்?

 விடை. -- பேராசிரியர் Tal Carmon தலைமையிலான Technion Israel Institute of Technology Scientists

11) ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் திரைப்பட விழாவின் கருப்பொருள் ( Theme ) என்ன ?

விடை. - Make in India

12)  International Conference on  Decarbonisation of Indian Railways – Mission Electrification எங்கு நடைபெற்றது?

விடை - புதுடெல்லி

13) 1st International Agro - biodiversity Congress எங்கு நடைபெற்றது?

விடை. --- புதுடெல்லி

14) ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் chhamp பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு புலம் பெயரந்தோருக்கான மறுவாழ்வுக்காக இந்தியா ஒதுக்கீடு செய்த தொகை எவ்வளவு?

 விடை. -- ரூ. 2000 கோடி

15) சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா துறை தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? அந்நாட்டின் சுற்றுலா பிரசார வாசகம் என்ன ?

விடை. --- ரன்வீர் சிங் . , 2017 – Nature wants you back

16) Pradhan Mantri Surakshit Matritva Abhiyan என்பது எந்த திட்டம் தொடர்பானது?

விடை - கருவுற்ற தாய்மார்களுக்கான மாதாந்திர பரிசோதனை திட்டம் ( முதல் 6 மாதம் வரை )

17) Tata Literature Live! Lifetime Achievement Award வென்றவர் யார்?

விடை. --- அமிதவ் கோஷ்

18) Reporters without Borders (RSF)-TV5 Monde prize’ வென்றவர் யார்?

விடை. --- Hadi Abdullah ( syria )

19) திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலம் என்ற தகுதியை அடைந்துள்ள மூன்று மாநிலங்கள் எவை?

விடை -- சிக்கிம், இமாச்சல பிரதேசம் , கேரளா

20) விவசாயிகளுக்கு மானிய விலையில் சூரிய மின் சக்தி மோட்டார் விசை பம்புகள் வழங்கும் திட்டம் எது?

விடை -- Saur Sujala Yojana ( சட்டீஸ்கரில் துவக்கி வைக்கப்பட்டது )

To follow Facebook group click here

https://www.facebook.com/groups/1031622320290175/
 பிரதேசத்தின்    2-வது தலைநகரானது "தரம்சாலா"
20/1/2017

வடஇந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாகவும், சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்கும் ஹிமாச்சல் பிரதேசத்தின் "தரம்சாலா" அம்மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனை அம்மாநில முதல்வர் வீரபத்திர சிங் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர், தரம்சாலா வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெற்றுள்ளது. மேலும் கங்காரா, சம்பா, ஹமிர்புர் மற்றும் உனா போன்ற மாவட்டங்களின் மேம்பாட்டிற்காகவும் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது, என கூறினார். ஹிமாச்சல் பிரதேசத்தின் முதல் தலைநகராக சிம்லா இருந்து வருகிறது.
ராக்கெட்டுகளின் வகைகள்

GSLV: Geosyncronous Satellite Launch Vehicle

PSLV: Polar Satellite Launch Vehicle

ASLV: Augumented Satellite Launch Vehicle

14 Jan 2017

TNPSC Tamil

1. பண்டையத் தமிழர் தாம் வரைந்த ஓவியத்தை எவ்வாறு அழைத்தனர்? - கண்ணெழுத்து

2. தமிழ் இலக்கியத்தில் உள்ள எழுத்து என்பதன் பொருள் --------------- - ஓவியம்

3. எழுத்து என்பதற்கு ஓவியம் என்பது பொருள் என்று கூறும் நூல் --------------- - குறுந்தொகை, பரிபாடல்

4. ஓவியம் வரைவதற்கு அடிப்படையானவை --------------- - நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு

5. நடுகல் வணக்கம் பற்றி கூறும் நூல் --------------- - தொல்காப்பியம்

6. ஓவியக்கலையின் வேறு பெயர்கள் --------------- - ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி

7. ஓவியக்கலைஞரின் வேறு பெயர்கள் --------------- - ஓவியர்., ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திகாரர் வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்

8. ஆண் ஓவியரின் பெயர் --------------- - சித்திராங்கதன்

9. பெண் ஓவியரின் பெயர்--------------- - சித்திரசேனா

10. ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றவர் யார்? - ஓவியப்புலவன்

11. ஓவியக்கலைஞர் குழுவிற்கு --------------- என்று பெயர்? - ஓவிய மாக்கள்

12. வண்ணம் தீட்டும் கோலின் பல பெயர்கள் --------------- - தூரிகை, துகிலிகை, வட்டிகை

13. ஓவியம் வரைய தனிப்பட்ட இடங்கள் இருந்தனவா? - ஆம்

14. தமிழர் வளர்ந்த நுண்கலைகளின் வரிசையில் முன்னணியில் நிற்பது --------------- - ஓவியக்கலை

15. பழங்கால மக்கள் தம் உள்ளக்கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும், குகைகளிலும் எவ்வாறு எழுதினர்? - கீறி எழுதினர்

13 Jan 2017

December 21, 2016

1. 2016ம் ஆண்டிற்கான சாகித்ய அகடாமி விருது=வண்ணதாசன்
நூல்=சிறு இசை
2. 69வது தேசிய சைக்கிள் பந்தயப்போட்டி திருவனந்தபுரத்தில் தொடங்கியது
3. இந்த ஆண்டிற்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளில் வெப் ரத்னா பிரிவில் மத்திய சுகாதரத்துறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது
4. ஹாங்காங்கில் ஜனவரி 2017 முதல் இற்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழையும் வசதி தடை செய்யப்பட உள்ளது
5. Forbes இதழ் அறிக்கையின் படி இந்திய பொருளாதாரம் UK பொருளாரத்தை அதன் அளவில் 150 ஆண்டுகளில் முதல் முறையாக மிஞ்சியுள்ளதாக தெரிவித்துள்ளது
6. உச்ச நீதிமன்றத்தின் பார் கழகத்தின் புதிய தலைவராக "R S Suri" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
7. வங்காள விரிகுடா கடல் பகுதியில் 60000 sq kms அளவிற்கு ஒரு ஆபத்து பகுதியினை (Death zone) கோவாவைச் சேர்ந்த தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியர்கள் கண்டறிந்துள்ளனர்
8. பணி புரியும் மற்றும் வியாபாரம் செய்யும் இடத்திற்கு ஏற்றார் போன்ற உலகின் முதல் அரட்டை இயக்குத்தளத்தினை(Chat Operating System) Flock நிறுவனம் "FlockOS" என்ற பெயரில் தொடங்கியுள்ளது
9. உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான "Privat bank" தேசிய மயமாக்கப்பட்டுள்ளது
10. துருக்கி நாட்டின் முதல் சுரங்க வழிப்பாதை இஸ்தான்புலில் உள்ள Bosphorus எல்லைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது
- இச்சுரங்கப்பாதை ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும்
11. "இந்திய இரயில்வேயின் கணக்குவைப்பு சீர்த்திருத்தம் - ஒரு திட்டமிட்ட நீடித்த வளர்ச்சிக்கான திட்டம்" என்ற பெயரிலான மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது
12. அரபிக் கடலில் நிறுவப்போகும் மன்னர் சத்ரபதி சிவாஜி மெமோரியல் தான், உலகிலேயே மிக உயரமான நினைவிடமாக இருக்கும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்
> ரூ.3,600 கோடி செலவில் மும்பை கடற்கரை பகுதியையொட்டி, சிவாஜி நினைவிடம் உருவாக்கப்பட உள்ளது
> வரும் டிசம்பர் 24ம் தேதி பிரதமர் மோடி இந்த மிகப் பெரிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
13. இந்த வருடத்திற்கான பிபிசி யால் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது நீச்சல் வீரர் மைக்கில் பெல்ப்ஸ் க்கு வழங்கப்பட உள்ளது
14. முதல் பணமில்லா பரிவர்த்தனை கொண்ட BAZZAR சட்டிஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் அமைய உள்ளது
15. சிபிஎஸ்சி பாடப்பகுதியிலிருந்து நாடார் பற்றிய பாடங்கள் &தகவல்கள் பாடப்பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன
16. இந்தியாவும் கிரிகிஸ்தானும் இணைந்து நடத்தும் KHANJAR-IV ராணுவ கூட்டுப்பயிற்ச்சி வரும் பிப்ரவரி 2017ல் நடக்க உள்ளது
17. கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகளுக்காக ப்ராஜக்ட் ஸ்மைல் திட்டம் டெல்லியில் அறிமுகம்
18. முதல் பணமில்லா பரிவர்த்தணை கொண்ட யூனியன் பிரதேசம் = டையூ & டாமன்
19. டெல்லி உயர்நீதிமன்றம் பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வெவ்வேறு வகையிலான 83 வலைதளங்களை முடக்கியுள்ளது
20. பணமில்லா பரிவர்த்தனைக்காக MERA-MOBILE, MERA-BANK,
MERA-BAUTA திட்டத்தை பேங்க் ஆப் பரோடா வங்கி துவங்கியுள்ளது
21. இ-தாகா செயலியை தேசிய கைத்தறிவளர்ச்சி கழகம் செவாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது
22. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டில் மொரீஷியஸ் நாடு முதலிடம் பிடித்துள்ளது
23. உலகின் மிகப்பெரிய தீவு மாவட்டமான "Majuli"ஐ மேம்படுத்த மத்திய அரசு 207 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
- சமீபத்தில் 2020க்குள் அம்மாவட்டத்தை இந்தியாவின் முதல் "carbon neutral" மாவட்டமாக மாற்ற அஸாம் மாநில அரசு திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது
24. அடுத்த நிதியாண்டில் இருந்து "நர்மதை" நதிக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூட மத்திய பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது
25. OBC பிரிவினர்களுக்கென தனி அமைச்சகம் அமைக்க உள்ளதாக மஹாராஷ்டிரா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்
26. 77வது "Indian Road Congress"( IRC) மாநாடு "ஹைதராபாத்தில்" நடைபெற்றது
27. 45வது "All India Police Science Congress" மாநாடு கேரள மாநிலம் கோவலம்,திருவனந்தபுரத்தில் நடைபெற்றது
28. இந்த வருடத்திற்கான சிறந்த தலைமைசெயல் அதிகாரி விருது_2016னை ஜீ நிறுவன தலைவர் & சீஇஓ ஆன புனித் கோயாங்கா பெற்றுள்ளார்
29. 2018ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது
30. பிரபல அகராதி நிறுவனமான Merriam-Webster நிறுவனம் இந்த வருடத்திற்கான சிறந்த வார்த்தையாக #surreal என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது
thanks to facebook friends
December 22, 2016

1. 2016ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் தேசிய விருது (வேளாண்மை) பெற்றவர்
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் , ஆறு தேசம் என்ற பகுதியைச் சார்ந்த செல்லப்பன் பத்மநாபன் என்பவர் ஆவார்...
2. 2016ம் ஆண்டின் சிறந்த குத்துச் சண்டை வீரர் - விகாஷ் கிருஷ்ணன் (இந்தியா).
3. 2016 ம் ஆண்டின் சிறந்த தடகள வீரர் - உசேன் போல்ட் (அமெரிக்கா)
4. 2016 ம் ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனை - அயானா (எத்தியோப்பியா)
5. Oxford Dictionary Word of the year 2016    POST TRUTH.
6. Merriam - Webster Dictionary Word of the year 2016      SURREAL.   Definition of – surreal             "Marked by the intense irrational reality of a dream"
7. 2016ன் சிறந்த கிரிக்கெட் வீரர் அஷ்வின்!
இவ்வாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. அவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணியிலும் ஆல்-ரவுண்டர் அஷ்வின் இடம்பெற்றுள்ளார்!
8. ஒடிஷா மாநிலம் சண்டிப்பூரில் இருந்து ஏவிய நிர்பாய் சோதனை ஏவுகனை முயற்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது . 1000 கி.மீ வரை சென்று தாக்கும் திறனுடையது
9. வங்கி கணக்கு இல்லாமல் சம்பளத்தை பெறும் பொதுமக்களுக்கு இந்தியன்வங்கி கேஷ்கார்ட் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது
10. இரண்டாவது பட்டுப்பூச்சி வளாக வளர்ப்பு மையம் பெங்களுரில் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது
11. 2017ம் ஆண்டிற்குறிய சர்வதேச இணைய வெளிமாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது
12. டெலிகாம் சந்தாதர்களின் கால்ட்ராப் பிரச்சனைகளை கேட்டும் அறியும் வகையில் மத்திய அரசு கட்டணமில்லா இலவச அலைபேசி எண்1955 ஐ அறிமுகம் செய்துள்ளது
13. பிம்பிரி ,புனேவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநெட்டிக்கல் க்கு கீழ் இயங்கும் பயன்படாத வெற்று நிலங்களை விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
14. நேபாளம் மற்றும் சீனா இணைந்து நடத்தும் கூட்டு ராணுவ பயிற்ச்சி PRATIKAR வரும் பிப்ரவரி 10-2017ல் நடக்க உள்ளது
15. அடுத்த ஆண்டு அக்டோபர் 6-28ம் தேதி வரை நடக்க உள்ள FIFA-U-17 உலககோப்பை கால்பந்து போட்டிக்கு பேங்க் ஆப் பரோடா(BANK O BAROA) முழு ஒத்துழைப்பு(முதல்வங்கி) அளிக்க உள்ளது. 6 நகரகங்களில் நடக்க உள்ளது
16. 2016ம் ஆண்டிற்கான சாஸ்த்ரா ராமனுஜம் விருது
> மாக்ஸிம் ராடில்வில்(கனடா)
> கைசா மடோமாகி(பின்லாந்து)
17. எண்ணெய் கப்பலில் கசிவுஏற்பட்டு கடல் நீர் மாசு அடைவதை தடுக்கும் ஒத்திகை குஜராத் மாநில கடற்பகுதியில் கடலோர காவற் படையினர் ஈடுபட்டனர்
18. 4மணி நேரத்தில் 300+ திட்டங்களை உ.பி மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிமுகம் செய்துள்ளார்
19. 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
20. பாசா சம்மான் விருதுகள்_2016= சவுராஷ்டிரா மொழிக்காக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.ஆர்.தாமோதரன் & டி.எஸ்.சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் விருது பெற தேர்வாகியுள்ளனர்
21. கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்களின் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு மீண்டும் காக்கி நிற சீருடை வழங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
22. சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங் & கணிதமேதை ராமானுஜம் பிறந்த தினம் இன்று (டிச22)
23. அகில இந்திய கால்பந்து சம்மேளன (ஏஐஎப்எப்) தலைவராக பிரஃபுல் படேல் போட்டியின்றி 3வது முறையாக தேர்வு
24. ர்வதேச குத்துசண்டை சம்மேள விருதுகள்
> AIBA ஜாம்பவான் விருது=மேரிகோம்
> ABB சிறந்த குத்துசசண்டை வீரர் விருது=விகாஸ் கண்ணா
25. இந்தியாவின் முதல் வனத்துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் 24*7 இலவச சேவை எண்(Toll free number) "மஹாராஷ்டிரா" வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது
- இலவச எண் "1926" ஜனவரி 6 முதல் தொடங்கப்பட உள்ளது
- மஹாராஷ்டிரா வனத்துறையினரின் சார்பாக Goregaonல் உள்ள "SAAR IT Solutions Pvt Ltd" இச்சேவையை செய்ய உள்ளது
- இந்தி,ஆங்கிலம் மற்றும் மராத்தியில் இச்சேவை வழங்கப்படும்
26. காற்று மாசுபாட்டைக் குறைக்க புது ஐடியா: பேருந்து கட்டணத்தில் 75% டிஸ்கவுன்ட் தரும் டெல்லி அரசு
27. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு குழு (Ladakh Autonomous Hill Development Council- LADH) லடாக் மாவட்டத்தில் நடைபெறும் இரண்டு நாள் பொதுக்குழு கூட்டத்தின் போது மாவட்டம் முழுவதும் பட்டாசுகளை வெடிக்க தடை செய்துள்ளது
28. ஏவுகணைகளை தாங்கி எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அழிக்கும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒலியின் வேகத்தை விட குறைந்த கடல்சார் "Nirbhay" ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது
- ஒடிசா கடற்கரையோரத்தில் உள்ள சண்டிபூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில்(ITR) இச்சோதனை நிகழ்த்தப்பட்டது
- எதிரிகளின் ரேடார்களின் கண்ணுக்கு புலப்படாமல் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது
- 700கீமி வரை இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது
- இந்த ஏவுகணை ஏற்கனவே 3 முறை சோதனை செய்யப்பட்டு தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது
29. உலகின் முதல் சிக்கன் குனியாவிற்கான மருந்து(Chikungunya Vaccine) US ஆராய்ச்சியாளர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது
- இந்நோய் எலைட் வைரஸால் உண்டாகும் நோயாகும்
30. Student Connect
பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் கல்வி நிறுவனங்களுக்கே சென்று கடவுச்சீட்டு ( Passport ) சேவையை வழங்கும் "ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவையை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
31. 2016ம் ஆண்டுக்கான சிறந்த ஆசியருக்கான சிங்கப்பூரின் ஸ்டிரெய்ட்ஸ் விருது, ஃபிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்ஸால் மற்றும் பின்னி பன்ஸால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வணிகத் தொழிலில் நவீனத் தொழில்நுட்பத்தைப் புகுத்தி செயல்படுத்தி வருவதை அங்கீகரிக்கும் விதமாக "சிறந்த ஆசியர்' விருது வழங்கப்படுகிறது.
32. Global Conference on Cyber Space (GCSS)
5வது சர்வதேச இணைய வெளி மாநாடு, 2017ல் இந்தியாவில் நடைபெற உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பம், சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
மாநாடு நடைபெறும் இடமும், தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
2011. -- பிரிட்டன்
2012 -- ஹங்கேரி
2013 -- தென்கொரியா
2015 – நெதர்லாந்து
33. அகில இந்திய கால்பந்து சம்மேளன (ஏஐஎப்எப்) தலைவராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரஃபுல் படேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
34. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியின் விளையாடாத ( Non playing captain ) கேப்டனாக முன்னாள் வீரரான மகேஷ் பூபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
35. இந்த ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதும் அஸ்வினுக்குக் கிடைத்துள்ளது. மேலும் ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
36. Indian Enterprise Development Services --- IEDS
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் வரிசையில் இந்திய தொழில் வளர்ச்சிப் பணிகள் என்ற புதிய பிரிவையும், அதற்கான பதவியிடங்களை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி ஆணையத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் இந்தப் புதிய பதவியிடங்கள் நிரப்பப்படும்.
மத்திய தேர்வாணையம் நடத்தும், குடிமைப் பணிகள் தேர்வு மூலம் இப்புதிய பதவியிடங்கள் நிரப்பப்படும். இதன் மூலம் துறையின் செயல்பாடுகள் மேம்படுவதோடு, ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ போன்ற திட்டங்களின் இலக்கை அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
37. தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக திருமதி. கிரிஜா வைத்தியநாதன் IAS நியமிக்கப்பட்டுள்ளார். (ராம மோகன ராவ்)
மேலும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
38. சாகித்ய அகாடமியின் பாஷா சம்மான் விருது
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு அல்லது விமர்சனம் உள்ளிட்ட படைப்புகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு அவைகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்படாத மொழிகளான குருக், லடாக்கி, ஹல்பி, சௌராஷ்டிரா ஆகிய மொழிகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு நல்கிய நான்கு எழுத்தாளர்களுக்கு " பாஷா சம்மான் " விருது வழங்கப்படுகிறது.
சௌராஷ்டிரா மொழியின் இலக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.ஆர். தாமோதரன், டி.எஸ். சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் இணைந்து "பாஷா சம்மான்' விருது பெறுகின்றனர்.
சாகித்ய அகாதெமி தலைவர் -- டாக்டர். விஸ்வநாத் பிரசாத் திவாரி
39. காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தை பிடித்து உள்ளது.
கடந்த 2½ ஆண்டுகளில் காற்றாலை மூலம் 7.04 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 25,088 மெகா வாட் அளவு காற்றாலை மின் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இது உலகளவில் 5.8% ஆகும். சீனா , அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.
40. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
thanks to facebook friends
INDIAN GEOGRAPHY:(SHORTCUTS)

1)TOPMOST LITERACY STATES INSTITUTE IN INDIA:
KERALA, LAKSHADWEEP, MISORAM

SHORTCUT: K.LAKSHMI

K - KERALA
LAKSH - LAKSHADEEP
MI - MISORAM

2)TOPMOST ILLITERATE STATES IN INDIA
BIHAR, ARUCHALA PRADESH, RAJASTAN

SHORTCUT : BAR (பார் - க்கு போனால் படிப்பு வராது)

B - BIHAR
A - ARUNACHALA PRADESH
R - RAJASTAN
*கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம்...*

* கடல்களின் அரசி என்று அழைக்கப்படுவது பசிபிக் பெருங்கடல்.

* பிளாடா என்ற ஸ்பானிஷ் சொல்லிலிருந்து பிளாட்டினம் என்ற சொல் தோன்றியது.

* ஹெல்மெட்டை உருவாக்கியவர் நரம்பியல் மேதை சர். எச்.கெயர்னஸ். என்பவர் ஆவார்.

* உலகில் அதிக அளவில் காபி அருந்துபவர்கள் ஸ்வீடன் நாடுகரர்கள் ஆகும்.

* ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படுவது சோமாலியா.

* இந்தியாவில் உள்ள சிலைகளில் பெரியது சிரவணபெலகோளவில் உள்ள 200 அடி உயரம் கொண்ட கோமதீஸ்வரர் சிலை.

* மாரத்தான் ஓட்டப்பந்தயம் தூரம் 41.8 கிலோமீட்டர்.

* ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரின் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

*உலகிலேயே மிகப் பெரிய தபால்தலை தொகுப்பு வைத்திருப்பவர் - எலிசபெத் ராணி

* எளிதில் உருகும் உலோகம் - காரீயம்.

* எளிதில் ஆவியாகாத திரவம் - பாதரசம்.

* இந்தியாவில் முதன்முதலாக மனநோய் மருத்துவமனை 1871-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது

.* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது

.* தேசப்படம், நிலப்படம் சம்பந்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி

.* மலேசியா நாட்டில் உலகிலேயே மிக உயரமான கோபுரம் - பெட்ரோனாஸ் டவர் என்ற கோபுரம்.

* நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் - 20 லட்சம்
Important facts about Mughal Empire BABUR (With SHORTCUT IDEA)

1) Bargana - the place in which he ruled
2) Horse power - Important force for his panipet war victory
3) Artillery power - Important force for his panipet war victory
4) Sahiruddin Muhammad - his ORIGINAL NAME
5) Kasi - a title was conferred to him aftr the victory over Ranasingh
6) He has been also called as "HINDUSTHAN EMPIRE"
7) Agra - The place where he died at the age of 47
8) Babur knows arabic, persian language
9) Ranasanga was defeated by BABUR. Then only babur became the real power of India.

SHORTCUT IDEA for BABUR - "BHASKAR"

B - Bargana - the place in which he ruled
H - Horse power, HINDUSTHAN EMPIRE
A - Artillery power
S - Sahiruddin Muhammad - his ORIGINAL NAME
K - Kasi - a title was conferred to him aftr the victory over Ranasingh
A - Agra - The place where he died, Arabic language
R - Ranasanga was defeated by BABUR.
தமிழ்நாட்டில் மிக அதிகமாக மழையை பெரும் மாவட்டங்கள்: - SHORTCUT IDEA

நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், நீலகிரி,சென்னை

SHORTCUT: தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கன மழையினால் மக்களை காப்பாற்றுவதற்கு நாதியில்லை. இதுதான் அவர்களின் "விதி". இதுதான் அவர்களின் "கதி". இதற்கு வேண்டும் "நீதி" .

SHORTCUT : நாதி, விதி, கதி, நீதி

நாதி: நா- நாகப்பட்டினம், தி - திருவாரூர்
விதி: வி - விழுப்புரம், தி - திருவள்ளூர்
கதி : க - கடலூர், தி - திருவாரூர்
நீதி : நீ - நீலகிரி, தி - திருவள்ளூர்
36 வகை இராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தார்கள். அவர்களில் வலிமை பெற்றவர்கள்:

அவந்தியை ஆண்ட பிரதிகாரர்கள்

வங்காளத்தை ஆண்ட பாலர்கள்

ஆஜ்மீர், டெல்லியை ஆண்ட சௌகான்கள்

டெல்லியை ஆண்ட தோமர்கள்

கனோஜ் பகுதியை ஆண்ட ரத்தோர்கள்

மேவார் பகுதியை ஆண்ட சிசோதியர்கள் (அ) குகிலர்கள்

பந்தல்கண்ட் பகுதியை ஆண்ட சந்தேலர்கள்

மாளவம் பகுதியை ஆண்ட பரமாரர்கள்

வங்காளம் பகுதியை ஆண்ட சேனர்கள்

குஜராத் பகுதியை ஆண்ட சோலங்கிகள்

#ஷாட்கட்

பிராந்தி சாப்ட்டா வாந்தி (அவந்தி).
வங்காளம் - சேனைப்படை ஒரு பாலமா இருக்கனும்
ஆச்சி டெல்லிக்கு சௌகரியமா போகனும்னு நினைச்சி தோத்து போச்சி.
மனோஜ்(கனோஜ்) கடிச்சா இரத்தம் வரும்.
மேஜரா இருந்த சிஸ்டர் சொல்லனும் இல்ல குல்லர்கள்.
சந்தைனா பந்தல் இருக்கனும்.
பாமர மக்கள் மாளவிகாவ பார்க்க முடியாது.
குஜராத் - சோலங்கி (மோடி)
Tamil Launguage and Literature awards announced by Tamilnadu Govt.

தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியோருக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் 2016ஆம் ஆண்டிற்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளுவர் விருது புலவர் பா. வீரமணிக்கும், தந்தை பெரியார் விருது பண்ருட்டி ச. இராமச்சந்திரனுகும், அண்ணல் அம்பேத்கர் விருது மருத்துவர் இரா. துரைசாமிக்கும் வழங்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணா விருது கவிஞர் கூரம் மு. துரைக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது டி. நீலகண்டனுக்கும், மகாகவி பாரதியார் விருது பேராசிரியர் முனைவர் ச. கணபதிராமனுக்கும் அளிக்கப்படுகிறது.

இதேபோல் பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் கோ. பாரதிக்கும், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது மீனாட்சி முருகரத்தினத்திற்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தன் விருதுகள் வரும் 15ஆம் தேதி, காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். இவ்விழாவில் அகவை முதிர்ந்த 50 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப்பெறும்.
தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

# திருவள்ளுவர் விருது-புலவர் பா. வீரமணி
# தந்தை பெரியார் விருது- பண்ருட்டி. ராமச்சந்திரன்
# அம்பேத்கர் விருது- மருத்துவர். ரா.துரைசாமி
# பேரறிஞர் அண்ணா விருது- கவிஞர் கூரம் மு.துரை
# பெருந்தலைவர் காமராசர் விருது- டி.நீலகண்டன்
# மகாகவி பாரதியார் விருது- முனைவர் கணபதி ராமன்
# பாராதிதாசன் விருது- கவிஞர் கோ. பாரதி
# தமிழ் தென்றல் திரு.வி.க விருது- பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
# முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது- மீனாட்சி முருகரத்தினத்தம்
🏆🏆 first Recipients of Various Awards🏆🏆
💰💰●●●BHARAT RATNA●●●💰💰
✔1st Indian to be awarded the Bharat Ratna➡ C Rajagopalachari
✔1st Bharat Ratna Awardee to become the President of India
➡Dr. S.Radhakrishnan
✔1st person to be awarded the Bharat Ratna posthumously➡Lal Bahadur Shastri
✔1st Scientist to be awarded the Bharat Ratna ➡CV Raman
✔1st and only Industrialist to be awarded the Bharat Ratna➡JRD Tata
✔1st woman to be awarded the Bharat Ratna➡Mrs. Indira Gandhi
✔1st sportsperson to be awarded the Bharat Ratna➡ Sachin Tendulkar
📚📚●●●LITERARY AWARDS●●●📚📚
✔1st Indian to be awarded the Nobel prize in literature➡Rabindranath
Tagore
✔1st recipient of Bhartiya Jnanpith award ➡G Sankara Kurup
✔1st recipient of Sahitya Akademi Award for English➡RK Narayan
✔1st person to receive Nobel prize for English literature➡Rudyard Kipling
✔1st Indian to receive the Booker prize (British citizen) ➡Salman Rushdie
✔1st Indian woman (and also first Indian citizen) to receive the Booker prize➡Arundhati Roy
✔1st Indian to receive the Pulitzer prize (Reporting category)➡Gobind Behari Lal
🎾⛳●●●SPORTS AWARDS●●●⛳🎾
✔1st recipient of Rajiv Gandhi Khel Ratna Award➡ Viswanathan Anand
✔1st woman recipient of Rajiv Gandhi Khel Ratna Award ➡Karnam Malleshwari
✔1st recipient of Dhyanchand Lifetime Achievement Award➡Aparna Ghosh
✔1st cricket player to be awarded the Arjuna Award➡ Salim Durrani
✔1st Indian recipient of International Cricket Council's Sir Garfield Sobers Trophy➡ Rahul Dravid
🌈🌈●●●AWARDS IN SCIENCE FIELD●●●🌍🌍
✔1st Indian scientist to be awarded the Nobel prize ➡CV Raman
✔1st person to receive Nobel prize for Physics➡ William K Roentgen
✔1st woman to receive the Nobel prize ➡Madame Curie (1903)
●●●GALLANTRY AWARDS●●●
✔1st winner of Param Vir Chakra
➡ Major Somnath Sharma
✔1st and only Air Force person to receive the Param Vir Chakra
➡Flying Officer Nirmaljit Shekhon
✔1st woman to receive the Ashoka Chakra➡ Neerja Bhanot (1987)
🌆🌆●●●FOREIGN AWARDS●●●🌆🌆
✔1st Indian to be awarded the No shan I Pakistan➡ Morarjee Desai
✔1st Indian to be awarded Magsaysay Award➡ Vinoba Bhave
📀📀●●●FILM AWARDS●●●📀📀
✔1st winner of Dadasaheb Phalke Award➡ Devika Rani
✔1st winner of Filmfare best actor award➡ Dilip Kumar
✔1st winner of Filmfare best actress award➡ Meena Kumari
✔1st Hindi film to win the National film Award➡ Mirza Ghalib (1954)
✔1st film to win the Best Film Academy Award(Oscar)➡ Wings (1927-28)
📊📊●●●OTHER AWARDS●●●📊📊
✔1st recipient of Jawaharlal Nehru Award for International Understanding
➡U Thant (1965)
✔1st recipient of Indira Gandhi Prize for Peace, Disarmament and ➡Development Parliamentarians for Global Action(1986)
✔1st recipient of Indira Gandhi Award for International Justice and Harmony
➡Yasser Arafat (1992)
✔1st recipient of Outstanding Parliamentarian Award ➡Shri Chandrashekhar (1995)
✔1st recipient of Gandhi Peace Prize (Govt of India Award) ➡Julius Nyerere (1995)
✔1st recipient of World Food Prize instituted By Norman Borlaug (Father of Green Revolution) ➡MS Swaminathan (Father of Green Revolution in India ),

1987
✔1st recipient of Communal Harmony Award (Individual)➡Asghar Ali Engineer, 1997
✔1st recipient of Communal Harmony Award(Organisation)➡Quami Ekta Trust, 1997
✔1st recipient of Tagore Award for Cultural Harmony➡ Pt. Ravi Shankar, 2012
✔1st Asian recipient of Hoover Medal (America's prestigious award for outstanding extra-career services by engineers to humanity)➡ APJ Abdul Kalam, 2008

✔1st recipient of VK Krishna Menon Award (instituted by London based VK Krishna Menon Foundation)
நன்றி Tnps  portal

தினமணி

1. தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா எழுதிய 'ஒருத்திக்கே சொந்தம்' என்கிற முதல் நாவலை ஜனவரி மாதத்தின் 'குடும்ப நாவல்' இதழில் மறுபதிப்பு செய்துள்ளார்கள்.
 ஜெயலலிதாவின் முதல் நாவல் 'ஒருத்திக்கே சொந்தம்' 1980ம் ஆண்டு வெளியானது. இந்த நாவலை மாலைமதி பதிப்பகம் வெளியிட்டது. நாவல் எழுத வேண்டும் என்ற கனவை நனவாக்கியவர், ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரும், மறைந்த துக்ளக் ஆசிரியருமான சோ.
 ஒரு நாயகனுக்கும், 2 நாயகிகளுக்கும் இடையிலான பாசக் கதைதான் 95 பக்கம் கொண்ட 'ஒருத்திக்கே சொந்தம்' நாவலின் கரு. இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற பலரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் குடும்ப நாவல் இதழில் இது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே சோழர்கள் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் மூலம் தென்கரும்பலூர், தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளில் 13-ஆம் நூற்றாண்டில் சோழர்கள் வாழ்ந்தது தெரியவந்தது. மேலும், கல்வெட்டில் இருந்த ஓவியங்கள், எழுத்துகளை ஆய்வு செய்தபோது, கோயில் அர்ச்சகர்களுக்குத் தேவையான நிலத்தை சோழர்கள் நன்கொடையாக வழங்கியதும் தெரியவந்துள்ளது.

3. பிரபல நாடகக் கலைஞர், நாடக நடிகர், தயாரிப்பாளர் விழா வேந்தர் என்.கே.டி.முத்து (82)  காலமானார். ஏராளமான பாராட்டு விழாக்களை வெற்றிகரமாக நடத்தியதால் எம்.ஜி.ஆரால் விழா வேந்தர் எனப் பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டவர்.

4. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் வி. ஆச்சார்யா  நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு 60 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6. சர்வதேச சூரியசக்தி கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது :
 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து சர்வதேச சூரியசக்தி கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கி வைத்தார்.
 சூரியசக்தியில் சிறந்து விளங்கும் 121 நாடுகளை ஓர் அமைப்புக்குள் கொண்டு வந்து, அதுதொடர்பான ஆய்வு உள்ளிட்டவைகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.
 இதுவரை இந்தக் கூட்டணியில், 25 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் இணைந்து செயல்படுவதற்குத் தயாராக இருப்பதாக ஐ.நா. மற்றும் உலக வங்கி ஆகியனவும் அறிவித்துள்ளன.

7. உடல்நலக் குறைவு காரணமாக தமது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நடிகரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மிதுன் சக்ரவர்த்தி ராஜிநாமா செய்துள்ளார்.

8. சேவல் சண்டை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி 3-1-2017 அன்று தொடங்கி வைத்தார்.

Others

10. பாரதீய ஜனபீட அமைப்பின் “நவ்லேகான் விருது 2016” ( Navlekhan Award ) சாராதா மற்றும் கியான்ஷாம் குமார் தேவன்ஷ் (Shraddha and Ghyansham Kumar Devansh) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

11. சங்கர் பால சுப்ரமணியன் எனப்படும்   இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய பேராசியருக்கு அந்நாட்டின் உயரிய விருதான Queen Elizabeth II Knighthood வழங்கப்பட்டுள்ளது.

12. மத்திய குடிமைப்பணி தேர்வு ஆணையத்தின் (Union Public Service Commission ) தலைவராக டேவிட் R சைம்லீ (David R Syiemlieh) நியமிக்கப்பட்டுள்ளார்.
13. கிர்கிஸ்தான் (Kyrgyzstan) நாட்டின் இராணுவ தளபதியாக ( Major General ) இந்தியாவில் பிறந்த தொழிலதிபரான சேக் ராஃபிக் மொகமது (Shaikh  Rafik  Mohammed) நியமிக்கப்பட்டுள்ளார்.

14. ”பர்கார்க் தனுவா ஜாத்ரா” ( Bargarh Dhanua Jatra) எனப்படும் உலகப்புகழ்பெற்ற 11 நாள் திருவிழா ஒடிசா மாநிலம் பர்கார்க் நகரில் 3-1-2017 அன்று துவங்கியது.


இந்திய அரசியலமைப்பு:

குடியரிமை

1. பகுதி 2ல் அமைந்துள்ளது.

2. Art 5 முதல் 11 வரை இந்திய குடியுரிமை பற்றியது.

3. இந்திய குடியுரிமைச் சட்டம் 1955.

4. இரட்டை குடியுரிமை 1. அமெரிக்கா, 2. ஆஸ்திரேலியா  3. இங்கிலாந்து, 4. நியூசிலாந்து, 5. கனடா.

5. NRI ( Non-Residential indians ) எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க பிரவேசிய பாரதிய திவாஸ் என்ற திட்டம் L.M.சிங்வி கமிட்டியின் பரிந்துரையின் பேரில் கொண்டுவரப்பட்டது.

6. தேசிய அடையாள அட்டை 13/04/2003 லிருந்து வழங்கப்படுகிறது.

பொது தகவல்கள் -- முக்கிய குறிப்புகள்

1.    மிகப்பெரிய கடல் பறவை?   அல்பட்ரோஸ்.

2.    உலகின் மிகப்பெரிய கோயில்?   அங்கோர் வாட் கோயில் (கம்போடியா).

3.    உலகின் மிகப்பெரிய சமுத்திரம்?   பசிபிக் பெருங்கடல்.

4.    உலகின் மிகப்பெரிய குவிமாடம் (Dome)?   கோல்கும்பாஸ் (இந்தியா).

5.    உலகின் ஆழமான ஏரி?   பாய்க்கால் ஏரி (ரஷ்யா).

6.    உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு?   சீனா.

7.    மிகப்பெரிய பறவை?   நெருப்புக் கோழி.

8.    உலகின் மிகப்பெரிய உயிரினம்?   நீல திமிங்கலம்.

9.    உலகில் மிக அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு?   இந்தியா.

10.  உலகின் மிகப்பெரிய கழிமுகம் (Delta)?  சுந்தரவனம் (இந்தியா).

11.    உலகின் உயரமான ஏரி?   டிடிகாகா (பெரு-பொலிவியா).

12.    உலகின் மிகப்பெரிய வளைகுடா?   மெக்சிகோ வளைகுடா.

13.    உலகின் மிகப்பெரிய மசூதி?   ஜாமா மசூதி (டில்லி).

14.    நள்ளிரவில் சூரியன் உதிக்கும் பூமி?   நார்வே.

15.    உலகின் மிக நீளமான ரயில்வே?   டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே.

16.    உலகின் மிக நீளமான சுவர்?   சீரப் பெருஞ்சுவர் (சீனா).

17.    உலகின் மிகச்சிறிய பறவை?   ஹம்மிங் பறவை.

18.    உலகின் மிகச்சிறிய நாடு (பரப்பளவில்)?   வாடிகன் நகரம்.

19.    மிக உயரமான விலங்கு?   ஒட்டகச்சிவிங்கி.

20.    உலகின் உயரமான மலைத்தொடர்? இமயமலைத்தொடர்.

21.    குழந்தைகள் நீதிமன்றம் அமைந்துள்ள முதல் மாநிலம்?   டில்லி (2011).

22.    உலகின் மிக உயரமான நீர் ஊற்று?   பவுண்டெய்ன் ஹில்ஸ் (அரிசோனா).

23.    உலகின் மிக குளிரான இடம்?  பாலியஸ் நெடோஸ்டுபுனோஸ்டி (அண்டார்டிகா).

24.    உலகின் மிக வெப்பமான இடம்?   தலால் (எதியோப்பியா).

25.    உலகின் மிக அதிக மழைபெறும் இடம்?   மாசின்ரம் (மேகாலயா-இந்தியா).

26.    உலகின் மிக உயரமான ஒற்றைக்கல் சிலை?   கோமத்தீஸ்வரர் சிலை (சிரவணபெலகோலா).

27.    இந்தியாவின் மிக உயரமான விமானநிலையம்?   லே விமான நிலையம் (லடாக்).

28.    இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி?   ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.

29.    இந்தியாவின் மிகப்பெரிய ஆடிட்டோரியம்?   ஸ்ரீ சண்முகாநந்தா ஹால், மும்பை.

30.    . இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்?. பாம்பன் பாலம் (தமிழ்நாடு).

31.    இந்தியாவின் மிக நீளமான கால்வாய்?   இந்திராகாந்தி கால்வாய் (ராஜஸ்தான்).

32.    இந்தியாவில் உள்ள பெரிய பாலைவனம்?   தார் பாலைவனம் (ராஜஸ்தான்).

33.    இந்தியாவின் மான்செஸ்டர்?   மும்பை.

34.    ஏழு தீவுகளின் நகரம்?   மும்பை.

35.    இந்தியாவின் மிகப்பெரிய குகை?   அமர்நாத் (ஜம்மு காஷ்மீர்).

36.    இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோயில்?   எல்லோரா (மகாராஷ்டிரா).

37.    இந்தியாவின் பழமையான தேவாலயம்?   புனித தோமையார் தேவாலயம் (கேரளா).

38.    இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயம்?   புனித கதீட்ரல் தேவாலயம் (பழைய கோவா).

39.    இந்தியாவின் மிகப்பெரிய குருத்துவாரா?   பொற்கோயில் (அமிர்தசரஸ்).

40.    இந்தியாவின் மிக உயரமான அணை?. பக்ரா அணை (பஞ்சாப்).

41.    இந்தியாவின் மிக நீளமான அணை?   ஹிராகுட் அணை (ஒடிசா).

42.    இந்தியாவின் மிக உயரமான நீர்மின் திட்டம்?   ரோங்டோங் நீர்மின் திட்டம் (இமாச்சல பிரதேசம்).

43.    இந்தியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரி?   உலார் ஏரி (காஷ்மீர்).

44.    இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி?   கொல்லேறு (ஆந்திரப் பிரதேசம்).

45.    அதிகாலை அமைதி நாடு?   கொரியா.

46.    இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்?   அண்ணா நூற்றாண்டு நூலகம் (சென்னை).

47.    தங்கக் கம்பளி பூமி?   ஆஸ்திரேலியா.

48.    இந்தியாவின் பழமையான புத்த மடாலயம்?   தவாங் மடாலயம் (அருணாச்சலப் பிரதேசம்).

49.    இந்தியாவின் முதலாவது வனவிலங்கு சரணாலயம்?   முதுமலை.

50.   தமிழகத்தில் கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?. கிருஷ்ணகிரி மாவட்டம்.

11 Jan 2017

2016-ம் ஆண்டுக்கான பிஃபா சிறந்த வீரர் விருதை வென்றார் கிறிஸ்டியனோ ரொனால்டோ. 10.01.2017

பிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதை 4வது முறையாக, கிறிஸ்டியனோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ, ரியல் மேட்ரிட் கால்பந்து அணிக்காக, கிளப் போட்டிகளிலும் விளையாடிவருகிறார். அவர் சர்வதேச கால்பந்து அரங்கில் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். இதன்படி, 2016ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கு, ரொனால்டோ பெயரை சர்வதேச கால்பந்து சம்மேளனம் தேர்வு செய்தது.

இதற்கான விருதை நேற்று அவர் பெற்றுக் கொண்டார். இந்த விருதுக்கான போட்டியில், மற்றொரு சர்வதேச கால்பந்து வீரரான மெஸ்ஸி, சில வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியதும் குறிப்பிடத்தக்கது.

பிஃபா சிறந்த வீரர் விருதை 4வது முறையாக ரொனால்டோ பெற்றுள்ளார். அதேசமயம், அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி 5முறை இந்த விருதை பெற்று, சாதனை படைத்துள்ளார். அவரை விரைவில் எட்டிப்பிடிப்பேன் என்று, ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.

யானைக்கு 60 பெயர்கள்

யானை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)
பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோ ன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
விரமலி
மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள்.
பிடி
அதவை
வடவை
கரிணி

அத்தினி ஆகியவை பெண் யனைகளின் பெயர்கள். இரண்டும் சேர்ந்து மொத்தம் 60 பெயர்கள்
உலக வங்கி

உலக வங்கிக் குழுமம்(World Bank Group, WBG) ஐந்து பன்னாட்டு அமைப்புகளை உள்ளடக்கிய ஓர் குழுமமாகும். இது உலகளவில் பெரிய நிதி நிறுவனம்.இதன் முதன்மை நோக்கம் வறுமையான நாடுகளுக்கு கடன்கள் அமைத்துக் கொடுப்பதாகும்.

இதில் அங்கமேற்கும் அமைப்புகளாவன:

பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) – 1945 இல் நிறுவப்பட்டது.

பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) – 1960 இல் நிறுவப்பட்டது. வட்டியில்லாக் கடன்களை வழங்குகிறது.

பன்னாட்டு நிதிக் கழகம் (IFC) – 1956 இல் நிறுவப்பட்டது

பலதரப்பு முதலீடு பொறுப்புறுதி முகமை (MIGA) -1988 இல் நிறுவப்பட்டது

பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID) – `1966 இல் நிறுவப்பட்டது.

பொறுப்புகள், பணிகள்.

உலக வங்கி (ஐபிஆர்டி & ஐடிஏ) மனிதவள மேம்பாடு (கல்வி, சுகாதாரம்), வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி (பாசனங்கள், சிற்றூர் சேவைகள்), சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசுக் கட்டுப்பாடு அமைப்புகளை நிறுவுதல்), கட்டமைப்பு (சாலைகள், நகர்ப்புற புத்துயிராக்கல், மின்துறை), அரசாண்மை (ஊழல் எதிர்ப்பு, சட்டபூர்வ அமைப்புகள் மேம்படுத்தல்) போன்றவற்றில் வளரும் நாடுகளுக்கு உதவி புரியுமாறு குவிந்த செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றிற்காக இரு அமைப்புகளும் உறுப்பினர் நாடுகளுக்கு முன்னுரிமை வட்டியில் கடன் வழங்குகின்றன; மிக வறிய நாடுகளுக்கு உதவி மானியங்கள் வழங்குகின்றன.

இந்தக் கடன்களும் உதவி மானியங்களும் பெரும்பாலும் அந்தத் துறை அல்லது பொருளாதாரத்தில் உள்ள பரந்தளவு கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டவை. காட்டாக, கடலோரச் சூழல் மேலாண்மை மேம்பாடு திட்டத்திற்கான கடன் புதிய தேசிய மற்றும் பிராந்திய சுற்றுச்சூழல் நிறுவனங்களை அமைப்பதையும் இனி சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் சட்டங்கள்/கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதையும் கட்டாயப் படுத்தும்.

பன்னாட்டு நிதிக் கழகம் தனியார்த் துறை முதலீடுகளுக்கு கடன் ஏற்பாடு செய்யவும் பலதரப்பு முதலீடு பொறுப்புறுதி முகமை தனியார் முதலீடுகளுக்கு காப்புறுதிகள் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இதுவரையிலும், அமெரிக்க குடியுரிமை பெற்றவரே வங்கியின் தலைவராக இருந்துள்ளார். நிதியில் பெரும்பங்கை கொண்டுள்ளபடியால், அமெரிக்காவே தேர்ந்தெடுத்து நியமிக்கும். தலைவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும். தற்போதைய தலைவராக ஜிம் யோங் கிம் நீடிக்கிறார். இவரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நியமித்தார். இதுவரை பன்னிரெண்டு பேர் தலைவர் பதவி வகித்துள்ளனர். யூகின் மேயர் என்பவர் முதல் தலைவராக, 1946 மேயில் இருந்து ஆறு மாதங்களுக்குப் பணியாற்றினார்.
Pratikar - 1 Exercise

முதன்முறையாக நேபாளம் சீனாவுடன் இணைந்து
பிப்ரவரி 2017ல் ராணுவ பயிற்சியில் ஈடுபட
உள்ளது. இதற்கு Pratikar - 1 Exercise என
பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு


*  இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது.

*   தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார்.

*  டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.

*   இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.

*   இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.

*   இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும்.

*  பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசிய லமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன.

*  இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை: 395 சரத்துகள், 8 பட்டியல்கள்.

*  தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 444 சரத்துகள், 12 பட்டியல்கள்.

*   இந்திய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.

*   இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும் ஒன்றாகக் கொண்டுள்ள ஓர் அரசியலமைப்பாக விளங்குகிறது.

*   மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன.

*  அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன.

*   நெருக்கடிகாலச் சமயங்களில் அதிகாரங்களை மத்திய அரசே, ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒற்றையாட்சிக் கூறுகள் உள்ளன.

*  இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசாக விளங்குகிறது. அரசு மதத் தலையீட்டிலிருந்து விடுபட்டது. எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாராதது. குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமான தெய்வ நம்பிக்கை, வழிபாட்டுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

*  இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. (அங்கங்கள் 12 முதல் 35 வரை).

*  அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன.

*  அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்துகின்றன.

*   இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (அங்கங்கள் 36 முதல் 51 வரை).

*   நமது நாட்டில் பொது நல அரசு அமைப்பதற்கும் இவைகளே வழிகாட்டி வருகின்றன.

*  நமது அரசியலமைப்பு, சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன.

*  ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப் புனராய்வு என்று பெயர்.

*   அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.

*  இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது.

*  பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர்.


இந்திய அரசியலமைப்புமுறை பெறப்பட்ட நாடுகள் மற்றும் கொள்கைகள்

*  இங்கிலாந்து:

1. சட்டமியற்றும் முறை:

2. சட்டத்தின் பணி

3. ஒற்றைக் குடியுரிமை

4. பாராளுமன்ற முறை அரசாங்கம்

5. கேபினட் முறை அரசாங்கம்

6. வெஸ்ட் மினிஸ்டர் முறை அரசாங்கம்

7. சட்டத்தில் இருந்து பாதுகாப்பு

8. மேல் சபையை விட கீழ் சபைக்கு அதிக அதிகாரம்

9. பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச் சர்கள்

*  அமெரிக்கா:

1. சுதந்திரமான நீதித்துறை

2. நீதிப்புனராய்வு

3. அடிப்படை உரிமைகள்

4. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்

5. நீதிபதிகளை நீக்கும் முறை

*   குடியரசு முறை அரசாங்கம்

அரசியலமைப்பின் முன்னுரை

துணை ஜனாதிபதியின் பொறுப்புகள்

அரசியலமைப்பைத் திருத்தும் முறைகள்

உச்சநீதிமன்றத்தின் அமைப்பும் இயக்கமும்

அயர்லாந்து அரசின் வழிநெறிக் கோட்பாடுகள்

ஜனாதிபதி முறை தேர்வு (தேர்தல்)

ஜனாதிபதியால், ராஜ்யசபைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள்

பலமான மத்திய அரசாங்கம்

எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வருவது

*  ஜெர்மனி: நெருக்கடிநிலையின் போது அடிப்படை உரிமைகள் நீக்கப்படுவது

*   ஆஸ்திரேலியா: பொதுபட்டியல் முறை

*  ரஷ்யா: அடிப்படைக் கடமை கள்

*  கனடா: மாநிலங்களுக்கு இடை யேயான இலவச வர்த்தக முறை

*   தென் ஆப்பிரிக்கா: பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டத் திருத்த முறை

அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள்

*  முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1951-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

*  இந்திய அரசியலமைப்பு "கூட்டாட்சி முறை' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

*  அரசியலமைப்பு சட்டம் என்பது அரசிய லமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும்.

*  சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் சாதாரண சட்டங்கள் ஆகும்.

*  அரசியலமைப்புச் சட்டம் சாதாரணச் சட்டத்தினின்றும் வேறுபட்டது.



இந்திய அரசியலமைப்பு முகவுரை

*  இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது.

*  அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர்.

*  இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.

*  இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல், "இந்திய அரசியலமைப்பின் இதயம்' என்று போற்றப்படுவது முகவுரைதான்.

*  இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.

*  1976-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.

இந்திய அரசும் அதன் எல்லைகளும்

*  இந்திய அரசியலமைப்பில் பகுதி-1, இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.

*  இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும். மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும். ஒரு தேசிய தலைநகர் பகுதி (டெல்லி)யும் உள்ளன.

*  புதிய மாநிலங்களை உருவாக்கும் பாராளுமன்ற உரிமைகளை விவரிப்பது சட்டப்பிரிவு- 2

*  புதிய மாநிலத்தை உருவாக்குவது, பழைய மாநிலங்களைச் சுருக்குவது, எல்லைகளை மாற்று வது இவற்றை விவரிப்பது சட்டப்பிரிவு- 3

*  புதிய மாநிலங்களை உருவாக்கத் தேவையான சட்ட வழிமுறைகளைப் பற்றிப் பேசுவது சட்டப்பிரிவு- 4

* இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

*  இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்கண்ட்.

அடிப்படை உரிமைகள்

*  இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.

*  1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டதால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன.

*   1. சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):

*   2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)

*  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):

* ் 4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):

*  5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):

*  6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):

ஐந்து வகையான நீதிப் பேராணைகள்:

1. ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus) :

தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை, இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.

2. கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus):

ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார்.

3. தடை நீதிப்பேராணை (Writ of Prohibition):

நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்ப தாகும்.

4. உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto):

பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக் கையின் அடிப்படையில், அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

5. தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorary):

நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச் செய்வதாகும்.

*  டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

*  அடிப்படை உரிமையை நெருக்கடி கால அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.

அடிப்படைக் கடமைகள்

*  அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

*  42-வது சட்டத்திருத்தம் மூலம் பகுதி ஒய லி ஆ (அங்கம் 51 ஆ)லி ல் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன.

*  ரஷ்யாவின் அரசியலமைப்பிலிருந்து இவை பெறப்பட்டன.

மாநிலங்கள் அவை (Rajya Sabha)

*  இந்திய நாடாளுமன்றம், இந்திய குடியரசுத் தலைவரையும், மாநிலங்கள் அவை, மக்கள் அவை எனப்படும் இரண்டு அவைகளையும் கொண்டுள்ளது.

*  மாநிலங்கள் அவை 250-க்கு மிகாத உறுப் பினர்களைக் கொண்டது. இதில் பன்னிருவரை (12) இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்த அறிவும் அல்லது அனு பவமும் கொண்டவர்களைக் குடியரசுத் தலைவர் உறுப்பினர்களாக நியமிப்பார். மீதமுள்ள 238 உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும், மத்திய ஆட்சிப் பகுதி களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

*  உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

*  மாநிலங்கள் அவைக்கான தேர்தல் மறைமுகமானது.

*  மாநிலங்கள் சார்பாக உறுப்பினர்கள் மாநிலங் களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

*  மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண் டாண்டுகளுக்கு ஒரு முறை விலக காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும்.

*  இதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.

*  இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் தன்னு டைய பதவியின் அடிப்படையில் மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார்.

*  ஒரு துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

*  துணைக் குடியரசுத் தலைவர் இல்லாத காலங்களில் துணைத் தலைவர் மாநிலங்கள் அவைக்குத் தலைமை தாங்குவார்.

மக்கள் அவை (Lok Sabha):

*  மக்கள் அவை 565-க்கு மிகாத உறுப்பினர் களைக் கொண்டது.

*  525 உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும், 18 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

*  ஆங்கிலோ - இந்திய சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவர் இருவரை நியமன உறுப்பினர்களாக நியமிப்பார்.

*  மக்கள் அவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும்.

*  நெருக்கடி நிலைமை (Emergency) பிரகடனப் படுத்தும் காலங்களில் மக்கள் அவையின் காலத்தை ஓர் ஆண்டுக்கு மேற்படாமலும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஆறு மாதத்திற்கு மேற்படாமலும் சட்டத்தினால் நீட்டிக்கலாம்.

*  தற்போது மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர்.

*  மக்கள் அவையின் தலைவர் (Speaker) நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

*  மக்கள் அவை ஒரு துணைத்தலைவரையும் (Deputy Speaker) தேர்ந்தெடுக்கும்.

நாடாளுமன்றத்தின் பணிகள்(Functions of Parliament):

*  சட்டம் இயற்றுதல், நிர்வாக மேற்பார்வை, வரவு - செலவு அறிக்கை நிறைவேற்றுதல், பொது மக்களின் குறைகளைப் போக்குதல், முன்னேற்றத் திட்டங்களை உருவாக்குதல், பன்னாட்டு உறவுகளைப் பராமரித்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.

*  சட்டமியற்ற மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

*  நிதி மசோதாவைப் பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது.

*  நிதி மசோதாக்கள் மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்தலாம்.

*  சட்டங்கள் இயற்றும் அதிகாரங்களோடு நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரும் அதிகாரமும் வழங்கப்பட் டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் (Sessions of Parliament) :

*  அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறை கூட்டப்பட வேண்டும்.

*  இரண்டு கூட்டங்களுக்கும் இடையில் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இடைவெளி இருக்கும் வகையில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஆணையிடுவார்.

*  நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூட்டப்படுகிறது.

கூட்டத் தொடர்கள் பின்வருமாறு:

*  1. வரவு - செலவு அறிக்கை கூட்டத் தொடர் - பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கூடும்.

*  2. பருவக்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக ஜூலை மாதத்தில் கூடும்.

*  3. குளிர்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

குடியரசுத் தலைவர்

*  இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார்.

*  இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார். "பெயரளவிலான தலைவர்' (Nominal Chief), "சட்டப்படியான தலைவர்' (Legal Chief), "நாட்டின் தலைவர்' (ஐங்ஹக் ர்ச் ற்ட்ங் ள்ற்ஹற்ங்), "நடைமுறைத் தலைவர்' (எர்ழ்ம்ஹப் ஈட்ண்ங்ச்), "முப்படைகளின் தலைவர்' என்ற சிறப்புப் பெயர்களும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

*  இந்தியக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்

*  இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார்.

*  மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள். ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.

*  குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்

*  ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

*  குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம்தான் அளிக்க வேண்டும்.

*  குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம்.

*  குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும்.

*  குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

1. நிர்வாக அதிகாரங்கள்

*  மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் உள்ளது.

*  மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங் களுக்கு குடியரசுத்தலைவரின் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன.

*  பிரதமரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவரும் அவரே, பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

*  இந்தியத் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை கணக்காய்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தூதுவர்கள், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய தேர்வாணையத்தின் தலை வர், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் போன்ற முக்கியமான பதவிகளில் உரிய நபர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

2. சட்டமன்ற அதிகாரங்கள் :

*   பாராளுமன்றத்தைக் கூட்டும் உரிமை பெற்றவர் குடியரசுத் தலைவர் ஆவார்.

*  பாராளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையையோ ஒத்திப்போடவோ அல்லது கூட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவோ அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்.

*  மாநிலங்களவை 12 உறுப்பினர்களை நியமனம் செய்யவும், மக்களவையில் 2 ஆங்கிலோ - இந்திய இனத்தினரை நியமனம் செய்யவும் அதிகாரம் அவருக்கு உண்டு.

*   பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

*  இவரது அங்கீகாரம் இல்லாது எந்த மசோதாவும் சட்டமாகாது.

*  பாராளுமன்றம் கூடாதபோது அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுள்ளது.

3. நிதி தொடர்பான அதிகாரங்கள்

*  நிதி மசோதாவை பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியின்றி தாக்கல் செய்ய இயலாது.

*  இந்திய அரசின் எதிர்பாராத செலவு (Contingency Fund) நிதிக்குப் பொறுப்பானவர் குடியரசுத் தலைவர்.

*  இந்தியாவின் நிதி ஆணையகத்தை (Finance Commission) அமைக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.

4. நீதி தொடர்பான அதிகாரங்கள் :

*  குற்றவாளிகள் எவரையும் மன்னிக்கவோ தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக் கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு, மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றவர் குடியரசுத் தலைவர்.

*   அரசியலமைப்பு சட்டங்கள் பற்றிய சந்தேகம் குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்டால் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெற இயலும்.

5. நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள்:

*  போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கியோரின் தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

*  மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்குமுறை செயலற்றுப் போகும் போது மாநில நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

*  நிதி நிலை மிகவும் மோசமாகும் போது குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

துணைக் குடியரசுத் தலைவர்

*  துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார்.

*  ராஜ்யசபாவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவ தில்லை. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் தமது பதவியின் வாயிலாகவே ராஜ்யசபாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

*  குடியரசுத் தலைவர் இறக்க நேரிட்டாலோ, பதவி காலியாகும் போதோ, நீக்கப்பட்டாலோ, அப் பதவி காலியாக இருக்கும் போதோ அப் பதவியை ஏற்பவர் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார்.

*   பாராளுமன்றத்தின் இரண்டு அவை உறுப்பினர் களைக் கொண்ட வாக்காளர் குழுமம் (Electoral College) மூலமாக, விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை வாக்குமுறை மூலமாக, துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார். இதில் இரகசிய வாக்களிப்பு முறை பின்பற்றப்படுகிறது.

*  துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டி இடலாம்.

ஸ் துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார். துணைக் குடியரசுத் தலைவர்மீது குற்ற விசாரணை ஒன்றை மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

*  துணைக் குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம்தான் கொடுக்க வேண்டும்.

*  மாநிலங்களவையில் ஒட்டெடுப்பின் போது சமநிலை ஏற்படும் போது மட்டும், ஒட்டுப் போடும் உரிமை பெற்றவர் துணைக் குடியரசுத் தலைவர்.

பிரதமர்

*  பிரதமர் அரசாங்கத்தின் செயல்பாட்டுத் தலைவர், நிர்வாகத் துறையின் தலைவருமாவார்.

*  குடியரசுத் தலைவர் மக்கள் அவையில் பெரும்பான்மையான உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவரை அழைத்து பிரதமராக நியமித்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார்.

அமைச்சரவை

*  அமைச்சர்கள், மக்கள் அவைக்கு தனித்தனி யாகவும், கூட்டமாகவும் பொறுப்புடையவர்கள்.

*  அமைச்சர்கள் மூன்று வகையாக பிரிக்கப்படு கிறார்கள். அவை,

1. காபினெட் அமைச்சர்கள் 2. மாநில அமைச் சர்கள் 3. துணை அமைச்சர்கள்

*   காபினெட் என்பது சிறிய குழுவாயினும் அது அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க உறுப்பாகும்.

*  மாநில அமைச்சர்களில் சிலர் சில துறைகளில் தனித்துப் பொறுப்பு வகிக்கிறார்கள்.

*  மாநில அமைச்சர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் துணை அமைச்சர்கள் எனப் படுவர்.

மாநிலச் சட்ட மேலவை

*  மாநிலச் சட்டமன்றம் ஓரவை அல்லது ஈரவை யைக் கொண்டிருக்கலாம். அவை சட்டப் பேரவை அல்லது விதான் சபா என்றும் சட்டமேலவை அல்லது விதான் பரிஷத் என்றும் அழைக்கப்படுகின்றன.

*  ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையை உருவாக்க அல்லது நீக்க அரசியலமைப்பின் அங்கம் 169-ன் கீழ் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தைச் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்ற வேண்டும்.

மாநிலச் சட்டப் பேரவை

*  சட்டப் பேரவை ஓர் உண்மையான மக்கள் அவையாகும்.

*  சட்டப் பேரவையின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் தொகையைச் சார்ந்து வேறுபடுகின்றது.

*  சட்டப் பேரவையின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அது முன்கூட்டியே கலைக்கப்படலாம். நாட்டில் நெருக்கடி நிலை நிலவும் பட்சத்தில் அதன் ஆயுட்காலம், நாடாளுமன்றச் சட்டத்தினால் நீட்டிக்கப் படலாம்.

*  வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில், சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப் பினர்களை அது கொண்டுள்ளது.

*  ஆங்கிலோ - இந்தியர் சமூகத்தினர் சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவம் பெறத்தவறினால் ஆங்கிலோ இந்தியர் சட்டப் பேரவையில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுகின்றார்.

*  சட்டப்பேரவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 500-க்கு மிகையின்றியும் குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை 60-க்குக் குறைவின்றியும் இருத்தல் வேண்டும்.

*  இதில் சிக்கிம் மாநிலச் சட்டப்பேரவை ஒரு விதிவிலக்காகும். அங்கு 30 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது.

*  சட்டப் பேரவையின் ஓர் உறுப்பினராக இருக்க குறைந்தது 25 வயதடைந்தவராயிருத்தல் வேண்டும்.

*  சட்டப் பேரவையின் அனுமதியின்றி அதன் கூட்டங்களில் அறுபது நாட்களுக்குப் பங்கேற் காத ஓர் உறுப்பினரின் பதவியைப் பேரவை பறிக்கலாம்.

சபாநாயகர்

*  சட்டப் பேரவை தனது உறுப்பினர்களுள் இருவரை முறையே சபாநாயகராகவும், துணைச் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கின்றது.

*  மாநிலச் சட்டப்பேரவைச் சபாநாயகரின் கடமைகள், அதிகாரங்கள், சலுகைகள் யாவும் மக்களவைச் சபாநாயகர் பெற்றுள்ளவை களுக்குப் பெருவாரியாக ஒத்துள்ளன.

ஆளுநர்

*  ஆளுநராக நியமனம் செய்யப்படுவதற்கு முன் னர் மாநில முதலமைச்சர் கலந்தாலோசிக்கப் படுகின்றார்.

*  மாநில ஆளுநரின் பதவிக்காலம் பொதுவாக ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அவர் குடியரசுத் தலைவர் மனநிறைவைப் பெற்றுள்ள காலம் வரை பதவி வகிக்கின்றார்.

*  ஆளுநருக்குரிய தகுதிகள், பதவிக்காலம், தனிச் சலுகைகள் மற்றும் பலவற்றை அரசியலமைப்பு விவரிக்கின்றது.

*  மாநில அரசாங்கத்தின் செயலாட்சி அதிகாரங் கள் அனைத்தும் ஆளுநரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

*  முதலமைச்சரை ஆளுநர் பதவியில் அமர்த்து கின்றார். முதலமைச்சரின் அறிவுரையின்படி ஏனைய அமைச்சர்கள் அவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.

*  மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட நீதி பதிகள், தலைமை வழக்குரைஞர் ஆகியோரையும் ஆளுநரே நியமனம் செய்கின்றார்.

*  ஆளுநரின் கலந்தாலோசிப்புடன் மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

*  சட்ட மேலவை உறுப்பினர்களுள் ஆறில் ஒரு பங்கினரையும் சட்டப் பேரவையில் ஆங்கிலோ இந்தியச் சமுதாயத்தைச் சார்ந்த ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களையும் ஆளுநர் நியமிக்கிறார்.

*  மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் அவர் நியமனம் செய்கின்றார்.

*  சட்டமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம் பெற்றுள்ள அதே சக்தியை ஆளுநரால் பிறப் பிக்கப்படும் அவசரச் சட்டமும் பெற்றுள்ளது.

*  ஒரு நபரின் தண்டனையைக் குறைக்கவும் அல் லது அதை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கவும் அல்லது குற்ற மன்னிப்புகள் வழங்க வும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனையை மன்னிக்கும் அதிகாரத்தை அவர் பெற்றிருக்கவில்லை.

முதலமைச்சர்

*  அமைச்சரவையின் தலைவர் முதலமைச்ச ராவார்.

*  மாநிலத்தின் பெயரளவிலான ஒரு தலைவராக ஆளுநர் உள்ளார். உண்மை செயலாக்க அதிகாரங்கள் யாவும் முதலமைச்சரின் தலைமையிலான ஓர் அமைச்சர் குழுவினால் செயல்படுத்தப்படுகின்றன.

*  அரசியலமைப்பின் 164-ம் அங்கத்தின் கீழ் முதலமைச்சரையும் முதலமைச்சரின் பரிந்துரை மீது அனைத்து அமைச்சர்களையும் ஆளுநர் நியமனம் செய்கின்றார்.

*  முதலமைச்சரின் தலையாய பணி தனது அமைச் சரவையை அமைப்பதாகும்.

*  முதலமைச்சரின் நம்பிக்கையை ஓர் அமைச்சர் இழப்பாராயின், அவர் பதவி விலக வேண்டும்.

*  அமைச்சகத்திலிருந்து ஆளுநருக்குச் செல்லும் ஒவ்வொரு தகவலும் முதலமைச்சரின் வாயிலாகவே செல்ல வேண்டும்.

*  முதலமைச்சர் கட்சித் கொறடாக்களையும் நியமனம் செய்கின்றார்.

அமைச்சர்குழு

*  சட்டமன்ற உறுப்பினரல்லாத ஒருவரும் அமைச் சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறுமாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம்

*  இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் இருபத்தைந்து நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.

*  தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.

*  உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அறுபத்தைந்து வயது நிறைவுபெறும் வரை பதவி வகிப் பார்கள்.

*  உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு (Jurisdiction of supreme court) அடிப்படை உரிமைகள் செயலாக்குவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்புக்கு உட்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த உரிமைகள் தொடர்பாக பணிப்புரைகள் (உண்ழ்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்) ஆணைகள் (ஞழ்க்ங்ழ்ள்) அல்லது நீதிப்பேராணைகள் (ரழ்ண்ற்ள்) பிறப்பிக்கும் அதிகாரத்தைக் கொண் டுள்ளது.

உள்ளாட்சி அல்லது பஞ்சாயத்துராஜ்

*  பஞ்சாயத்து இராஜ்யம் 1959-ம் ஆண்டு அக் டோபர் திங்கள் 2-ம் நாளன்று பண்டித ஜவ ஹர்லால் நேருவினால் துவக்க செய்த முதல் மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசமும் ராஜஸ் தானும் ஆகும்.

*   அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள் 1992-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்டன. 1993-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள்

*  73-வது திருத்தத்தின்கீழ் 11-வது இணைப்புப் பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின்மீது முழுமையான அதிகாரத்தைப் பஞ்சாயத்துக்கள் பெற்றுள்ளன.

*  12-வது இணைப்புப் பட்டியல் 18 வகை அதி காரங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களைக் கொண்டுள்ளன.

*  ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம சபைக்கும் மற்றும் கிராமம் இடைப்பட்ட மற்றும் மாவட்ட நிலைகளில் பஞ்சாயத்துக்கள் அமையப்பெறவும் 73-வது திருத்தம் வகை செய்கின்றது.

அவசர நிலைகள்

*  இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

1. தேசிய நெருக்கடி நிலை

2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

3. நிதி நெருக்கடி நிலை

*  தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து - ஆழ்ற் 352

*  தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி

*  தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்

2. போர் மூலம் அபாயம்

3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5. உள்நாட்டுக் கலவரம்

*  தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

*   6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி

*  ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து - ஆழ்ற் 356

*  ் முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951

*  முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

*  இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

*  இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

*  இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி

*  நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து- ஆழ்ற் 360

*  நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்

*  நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.

*  நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.

*  1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

*  2. மத்திய அர?
கேரள அரசின் 'ஹரிவராசனம்' விருதுக்கு கங்கை அமரன் தேர்வு 10.01.2017

திருவனந்தபுரம் : 2017-ம் ஆண்டுக்கான கேரள அரசின்' ஹரிவராசனம்' விருதுக்கு பிரபல இசையமைப்பாளரும் , பாடகருமான கங்கை அமரன் தேர்வு செய்யப்ப்பட்டுள்ளனார்.

மத நல்லிணக்கணம் மற்றும் தேச ஒருமைப்பாடுக்காக பாடுபடும் கலைஞர்களுக்கு கேரள அரசு ஆண்டுதோறும் 'ஹரிவராசனம்' என்ற விருதை வழங்கிவருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலின் உதவியுடன் வழங்கப்படும் இந்த விருதானது ரூ.1 லட்சம் பணமும், சான்றிதழும் அளிக்கப்படும்.

2017-ம் ஆண்டுக்கான இந்த விருதை பிரபல இசையமைப்பாளரும் , பாடகருமான கங்கை அமரனை கேரள அரசு தேர்வு செய்ய்துள்ளது. வரும் ஜனவரி 14-ம் தேதி இந்த விருத்தினை கேளர சுற்றுலா மற்றும் தேவஸ்தான போர்டு அமைச்சர் கடப்பள்ளி சுநேந்திரன் சபரிமலையில் வைத்து கங்கை அமரனுக்கு வழங்குகிறார்.
FIFA : ரொனால்டோவுக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது.  10/1/2017

சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா, ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அவ்வரிசையில், 2016-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடந்தது. அதில், சிறந்த கால்பந்து வீரருக்கான தேர்வில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, பிரெஞ்சின் கிரிஸ்மென் மற்றும் போச்சுக்கலின் ரொனால்டோ ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் ரொனால்டோ அவ்விருதைத் தட்டி சென்றார். விருது பெற்றவர்கள் விவரம்: சிறந்த கால்பந்து வீரர் - கிரிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்) சிறந்த கால்பந்து வீராங்கனை - கார்லி லாய்ட் (அமெரிக்கா) சிறந்த பெண் பயிற்சியாளர் - சில்வியா நெய்ட் (ஜெர்மனி) சிறந்த ஆண் பயிற்சியாளர் - க்ளவுடியோ ரனைரி (இத்தாலி) சிறந்த கோல் அடித்த வீரர் - மொஹ்த் பைஷ் சுப்ரி (மலேசியா)
இலங்கை: இந்திய ஹை-கமிஷன் ஏற்பாடு செய்திருந்த 14—வது ப்ரவாஸி பாரதியா திவஸ் நேற்று கொண்டாடப்பட்டது.
January 10, 2017


இலங்கையில், இந்திய ஹை-கமிஷன் ஏற்பாடு செய்திருந்த 14-வது ப்ரவாஸி பாரதியா திவஸ் இலங்கையில் நேற்று கொண்டாடப்பட்டது.   இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும், இந்திய ஹை-கமிஷன் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.  வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக நடத்தப்படும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, இலங்கைக்கான இந்தியாவின் தற்காலிக ஹை-கமிஷனர் Arindam Bagchi, இலங்கையின் முன்னேற்றத்திற்கும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பையை பாரட்டிப் பேசினார்.  திறன் வளர்ப்பு இந்தியா, தூய்மை இந்தியா இயக்கம் மற்றும்  இந்தியாவின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யவேண்டும் என்று இந்திய வம்சாவளியினரை அவர் கேட்டுக்கொண்டார்.  வெளிநாடுவாழ் இந்தியர்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோதியின் முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார்.  இலங்கை அரசு, இந்திய வம்சாவளியினருக்கு வழங்கியிருக்கும் கல்வி உதவித்திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பேசிய வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்திய அரசின் முயற்சிகளையும் குறிப்பிட்டு பேசினார்கள்.  நிகழ்ச்சியில், ப்ரவாஸி பாரதிய திவஸ் தொடர்பான ஆவணப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது.
கப்பலில் பறக்கும் கொடி...

*கருப்புக் கொடி பறந்தால் அது கடற்கொள்ளைக்காரர்களின்
கப்பல்.
-
*சிவப்புக் கொடி பறந்தால் அது புரட்சிக்காரர்களின் கப்பல்.
-
*வெள்ளைக் கொடி பறந்தால் அது எந்தக் கப்பலோடும்
சமாதானம் செய்து கொள்ளும்.
-
*மஞ்சள் கொடி பறந்தால் அது தொற்றுநோயாளிகளின் கப்பல்.

Central Government New Plans

மத்திய அரசின் புதியதிட்டங்கள்

Central Government New Plans


பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டங்களின் நோக்கம் இந்தியாவை மாற்றங்களை ஏற்படுத்தி விரைந்து முன்னேற்றம் காணச்செய்வதேயாகும்.



உருமாறும் இந்தியா



மோடி அரசாங்கத்தால் இந்தியாவை விரைந்து முன்னேறும் நாடாக மாற்றம் காணச்செய்வதற்கு தொடங்கப்பட்ட திட்டங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டமும் மேக் இன் இந்தியா திட்டமும் முதன்மையான திட்டங்களாகும்.



டிஜிட்டல் இந்தியா



டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கம் இந்தியாவை கணினிப் பயன்பாட்டில் மேம்பட்ட, அறிவுப் பொருளாதாரம் சார்ந்த சமூகமாக முன்னேற்றம் காணச்செய்வதாகும். இத்திட்டத்தில் மூன்று அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். அவை:



ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் உள்கட்டுமானத்தை வழங்குதல்



தேவைக்கேற்றபடி சேவை மற்றும் நிர்வாகம்



மக்களை கணினிப் பயன்பாட்டில் திறன்மிக்கவர்களாக்குவது.



 டிஜிட்டல் இந்தியாவின் இரண்டுஅடிப்படைகள்



அனைவருக்கும் தகவல் கிடைக்க வழிசெய்தல்-இதனை பொது தொலைபேசிகள் மற்றும் இணையம் மூலமாக சாதிக்கலாம்.



அடுத்தது மின் நிர்வாகம்- தொழில்நுட்பம், சேவைகளை மின்னணுத் தொடர்பில் வழங்குவது, மின்னணு உற்பத்தி, வேலைகளுக்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சாதிக்கலாம்.



மேக் இன் இந்தியா



இத்திட்டத்தின் குறிக்கோள்கள் மூன்று.



இந்தியாவை உற்பத்தி மையமாக முன்னிறுத்துவது,பொருளாதார மாற்றம்தேவையற்ற விதிகள், ஒழுங்குமுறை களை நீக்குவது.



குறிப்பாக ஆட்டோமொபைல், கெமிக்கல், தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறை, டெக்ஸ்டைல்ஸ், தோல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வடிவமைப்பு உற்பத்தி, புதுப்பித்தக்க ஆற்றல், சுரங்கத் தொழில், மின்னணு உள்ளிட்ட துறைகளில் இடையூறாக விளங்கும் விதி, ஒழுங்குமுறைகளை நீக்குவது.



தொழில்முனைவு மேம்பாட்டுத்திட்டங்கள்



தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக அரசானது சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதிகளை அதிகரிக்கவும், அவற்றின் சாத்தியத்திறனை விரிவுபடுத்தவும், கடனால் அழிந்துபடுவதைத் தடுக்கவும் தீர்மானித்துள்ளது.



பிரதமரின் ஜன்தன் யோஜனா



இத்திட்டம் குறைந்த வருவாய் உடையோருக்கானது. அவர்கள், தம் வங்கிக் கணக்கில் இருப்புப் பணம் எதுவுமின்றியே சேமிப்பு வங்கிக் கணக்கு தொடங்கவும், பணவைப்புகளுக்கு வட்டி பெறவும், ரூபே கார்டு மூலம் தேவையடிப் படையிலான கடன் பெறவும், வீட்டுக்கு ஒரு கணக்கு அடிப்படையில் ரூ. 5,000 வரையில் மிகைப்பற்று வைக்கவும், பணம் அனுப்பும் வசதிபெறவும், ரூ. 30,000 வரையிலான காப்பீட்டு வசதிபெறவும், ரூ. 1 செலவில் விபத்துக் காப்பீடு பெறவும்வசதிசெய்யப்பட்டுள்ளது.



முத்ரா வங்கித் திட்டம்



குறுந்தொழில் மேம்பாடு மட்டும் மறுநிதிக் கழகம் என்னும் ஆங்கில சொற்றொடருக்கான சுருக்கமே முத்ராவாகும். முத்ரா வங்கித் திட்டம் குறுங்கடன் அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகவும், சிறுதொழில் செய்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தருவதாகவும் திகழும். இத்திட்டத்தில் மூன்று வகைப்பாடு உள்ளது.



ரூ. 50,000 வரை கடன் தரும் ஆரம்பக் கட்ட திட்டத்துக்கு ஷிசு எனவும், 50,000 முதல் 5 லட்சம் வரை கடன் தரும் இடைநிலை கடன் திட்டத்துக்கு கிஷோர் எனவும், 5 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை கடன் தரும் மேல்நிலை கடன் திட்டத்துக்கு தருண் எனவும் பெயர்.



 விவசாயிகள் மற்றும் கிராமமேம்பாட்டுத் திட்டம்



நம் நாட்டின் விவசாயிகள் மற்றும் கிராம மேம்பாட்டுக்கென்றே சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.



கிஷான் விகாஸ் பத்திரம்



கிஷான் விகாஸ் பத்திரம் என்பதும் சேமிப்புத் திட்டத்துக்கான சான்றிதழாகும். இதில் சேமிக்கும் தொகை 100 மாதங்களில் இரட்டிப்பாகும். இத்திட்டத்தில் ரூ.50,000 வரை சேமிக்கலாம். ஒருவர் பெயரிலோ, கூட்டாகவோ சேமித்து சான்றிதழ் பெறலாம். இந்தச் சான்றிதழைக் காட்டி7% கடன்பெறலாம்.



கிருஷி அம்பானி பீமா திட்டம்



விவசாயத்துக்கு உத்வேகம் தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். எதிர்பாராத பருவநிலை, இயற்கை அழிவால் நிதியிழப்பு ஏற்பட்டால் அதை தீர்க்க இத்திட்டம் உதவும்.



பிரதமரின் கிராம சின்ஜாய் திட்டம்



நாட்டின் அனைத்து விவசாயக் களத்துக்கும் கால்வாய் நீரைக் கொண்டுவர உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.



மண்வள அட்டை திட்டம்



இத்திட்டம் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மண்வள அட்டையை வழங்குகிறது. இந்த அட்டையில் எந்தப் பயிருக்கு என்ன போஷாக்கு, உரம் தேவையென்ற விவரம், பரிந்துரை போன்றவை இடம்பெற்றிருக்கும்.



தீனதயாள் உபாத்யாயாகிராமஜோதி திட்டம்



இந்தியாவின் கிராமப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமங்களுக்கு மின்வசதி வழங்க அரசாங்கம் இத்திட்டத்தில் ரூ 75,600 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.



    தீன்தயாள் உபாத்யாயா கிராமீன்கௌசல்யா திட்டம்



இது கிராமத்திலுள்ள 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வேலைவழங்குவதை இலக்காகக் கொண்ட திட்டம்.



    மகாத்மா காந்தி பிரவாசி சுரக்சாதிட்டம்



இது இந்தியாவுக்கு வெளியில் பணியாற்றுகிற, குடிப்பெயர்வு சோதனை தேவைப்படும் பாஸ்போர்ட்டில் சென்ற நபர்களுக்கான சிறப்பு சமூகப்பாதுகாப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு தானாகவே ஓய்வூதியம் மற்றும் ஆயுள் காப்பீடு கிடைக்கும். இத்திட்டத்தில் இணைந்து இயற்கையான காரணத்தால் இறப்பவர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும். மேலும் வெளிநாட்டிலிலிருந்து திரும்பவும், மறுகுடியேற்றத்துக்கும், ஓய்வுக்குப்பின் சேமிக்கவும் உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



நகர் மேம்பாட்டுத் திட்டங்கள்



தூய்மை இந்தியா திட்டம்



2019 அக்டோபர் 2-க்குள் தூய்மையானஇந்தியாவை உருவாக்கும் தேசிய பிரச்சாரத் திட்டம் இதுவாகும். நகர மேம்பாட்டு அமைச்சகத்தால் இதற்கான பிரச்சாரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. திறந்தவெளியில் மலம் கழிப்பது, திடக் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் கவனம் இந்த அமைச்சகம் செலுத்தும். இதன் ஒரு அம்சமாக இந்தத் துறை 476 நகரங்களை அவற்றின் தூய்மை நிலையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பட்டியலிலிட்டுள்ளது. இதில் மைசூர், திருச்சி, நவி மும்பை, கொச்சி, ஹாசன், மாண்டியா, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹாலிசாகர் போன்ற நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. நகரங்களிலுள்ள குழந்தைகளிடையே தூய்மையைப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் பாலர் தூய்மை இந்தியா திட்டமும் நடப்பிலுள்ளது.



    அம்ருத்



நகரை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்து வதற்கான அடல் திட்டம் எனும் ஆங்கிலச்சொற்றொடரின் சுருக்கமே அம்ருத்.



நீர் விநியோகம், கழிவுநீர் கால்வாய் வசதிகள் மற்றும் நிர்வாகம், வெள்ளநீர்வடிகால் வசதி, பொது வாகன வசதிகளை பலப்படுத்துதல், பூங்கா அமைத்தல், பொழுதுபோக்கு குழுக்கள் அமைத்தல் இவற்றில் கவனம் செலுத்துவதே இத்திட்டத்தின் அம்சமாகும்.



ஹிரிடே



தேசிய பாரம்பரிய நகர் மேம்பாடு திட்டம்என்பதன் சுருக்கமே ஹிரிடே. பாரம்பரிய நகரங்களை அனைத்து அம்சங்களிலும் மேம்பாடடையச் செய்வதே இத்திட்டத்தின் இலக்காகும். தற்போது 12 நகரங்கள் அடையாளம் காணப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



அவை: அஜ்மீர், அமராவதி, அமிர்தசரஸ், பதாமி, துவாரகை, கயா, காஞ்சிபுரம், பூரி, வாரணாசி, வேளாங்கன்னி, வாரங்கல், மதுரா. மொத்தம் ரூ. 500 கோடி செலவில் 27 மாத கால அளவில் இத்திட்டம் நிறைவுக்குவரும்.



சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் சுதேசி தரிசனத் திட்டம்



குறிப்பிட்ட சுற்றுலா தலங்களில், அவற்றின் உட்கட்டுமான வசதியை உலகத் தரத்துக்கு உயர்த்தி சுற்றுலா மீதான ஈர்ப்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முழுமையான சுற்றுலா அனுபவத்தை வழங்குவதில் இத்திட்டம் கவனம் செலுத்தும். அனைத்து மதங்களைச் சேர்ந்த புனித சுற்றுலாத்தலங்களின்உட்கட்டுமானத்தை உயர்த்தி, அடிப்படைவசதிகளைச் செய்து நகரை அழகுபடுத்துவதில் இத்திட்டம் கவனம்செலுத்தும்.