4 Dec 2016

TNPSC  வினா விடைகள்
1. ஆங்கில அரசு தடை செய்த நியூ இந்தியா பத்திரிக்கையை நடத்தியது யார்? - திருமதி.அன்னிபெசண்ட்

2. ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது? - 1919

3. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர்? - லின்லித்கோ

4. இங்கிலாந்து அரசு இந்திய விடுதலைச் சட்டத்தினை நிறைவேற்றிய ஆண்டு? - ஜூலை 1947

5. இராமகிருஷ்ண மடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? - 1897

6. தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தை தொடங்கியவர்? - ஸ்ரீநாராயண குரு

7. 'பிகு" எனப்படும் அறுவடைப்பண்டிகை எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது? - அஸ்ஸாம்

8. டங்ஸ்டனின் உருகுநிலை என்ன? - 3410°C

9. காலை மாலை உலாவி நித்தம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப் போவானே எனப் பாடியவர் யார்? - கவிமணி

10. சரஸ்வதி என்னும் சிறப்புப் பெயரைக் கொண்ட கீரை - வல்லாரை

11. நோய்க்கு முதல் காரணம் .............. - உப்பு

12. வள்ளலார் ஞானப்பச்சிலை எனக் கூறிய மூலிகை? - சிங்கவல்லி

13. தாயுமானவரின் காலம் - 18 ஆம் நூற்றாண்டு

14. திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின் அருளும் ஆசியும் பெற்றவர்? - தாயுமானவர்

15. சும்மா இருப்பதே சுகம் எனப் பாடியவர்? - தாயுமானவர்

16. இராமலிங்க அடிகளாரின் ஆசிரியர் பெயர்? - சபாபதி

17. மலேசிய தமிழர் தலைவர் டத்தோஸ்ரீ நல்லாவுக்கு வழங்கிய உயரிய விருது எது? - டான்ஸ்ரீ விருது

18. மேற்கூரை சூரிய ஒளி மின்சக்தித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி, விருதுகளைப் பெற்ற மாநிலம் எது? - தமிழ்நாடு

19. உளவு செயற்கைகோளுடன், அமெரிக்காவால் அனுப்பப்பட்ட உளவு ராக்கெட் எது? - டெல்டா 4

20. ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3 சதவீதம் அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ. 300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை எவ்வளவு?

விடை: ரூ. 5000

No comments:

Post a Comment