கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பாக முற்று முழுதாக பயோடீசலில் இயங்கும் 25 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேற்படி போக்குவரத்து கழகத்தின் நிர்வாக அதிகாரி ராஜேந்திர குமார் கட்டாரியா, இந்த பயோடீசல் பேருந்துகள் மூலம், சுற்றுச்சூழல் மாசடைவது பெருமளவு குறையும் என்றும், உள்ளூர் தொழிலை மேம்படுத்த இது சரியான வழியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். முன்னதாக, கடந்த வருடம் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 பேருந்துகளில் 20 % பயோடீசலும், 80% சாதாரண டீசலும் பயன்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கிடைத்த வெற்றியை அடுத்தே முற்று முழுவதுமாக பயோடீசலில் இயங்கும் பேருந்துகளை அம்மாநில அரசு தற்போது அறிமுகப்படுத்தவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
-
1. அண்ணாவின் கட்டுரை நூல்கள்: 🖊 என் வாழ்வு 🖊 புன்னகை 🖊 செங்கரும்பு 🖊 அறுவடை 🖊 பாரதம் ஆரியமாயை 🖊 யார் கேட்க முடியும் 🖊 ஆடியபா...
-
பிழை திருத்தம் ஒருமை பன்மை - பிழை திருத்தம் வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்: பிழை: வண்டிகள் ஓடாது திருத்தம்: வண்டிகள் ஓடா பிழை: ...
-
TNPSC வினா விடைகள் 1. பதிப்புத் துறையின் வேந்தர் எனப்படுபவர் யார்? - உ.வே.சாமிநாதன் 2. தமிழ் மணம் என்ற நூலை இயற்றியவர் யார்? - தெ.பொ.மீ...
No comments:
Post a Comment