29 Dec 2016

இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் பயோடீசல் பேருந்து 27/12/2016

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பாக முற்று முழுதாக பயோடீசலில் இயங்கும் 25 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேற்படி போக்குவரத்து கழகத்தின் நிர்வாக அதிகாரி ராஜேந்திர குமார் கட்டாரியா, இந்த பயோடீசல் பேருந்துகள் மூலம், சுற்றுச்சூழல் மாசடைவது பெருமளவு குறையும் என்றும், உள்ளூர் தொழிலை மேம்படுத்த இது சரியான வழியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். முன்னதாக, கடந்த வருடம் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 பேருந்துகளில் 20 % பயோடீசலும், 80% சாதாரண டீசலும் பயன்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கிடைத்த வெற்றியை அடுத்தே முற்று முழுவதுமாக பயோடீசலில் இயங்கும் பேருந்துகளை அம்மாநில அரசு தற்போது அறிமுகப்படுத்தவுள்ளது.

No comments:

Post a Comment