26 Dec 2016

Solar Boats

கேரளாவில்,
முதன் முறையாக,
சோலார் எனப்படும் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும், படகுச் சேவை,
ஜனவரி, 12ல் துவங்க உள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.

அம்மாநிலத்தில், கோட்டயம்,
ஆலப்புழா, கொச்சி மாவட்டங்களில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயன்பாட்டிற்கு படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்த படகுகள், பெரும்பாலும் டீசல் அல்லது பெட்ரோல் மூலமே இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், அம்மாநில அரசு, மாற்று எரிசக்தியை ஊக்குவிக்க முயற்சித்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, சூரிய மின் சக்தியில் இயங்கும், படகு போக்குவரத்து துவங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment