29 Dec 2016

திரைக்கவித் திலகம் கவிஞர் மருதகாசி

ஆசிரியர் குறிப்பு:

✧ பிறப்பு : பிப்ரவரி 13, 1920.

✧ ஊர் : மேலக்குடிகாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

✧ பெற்றோர் : அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள்.

✧ மனைவி : தனக்கோடி அம்மாள்.

✧ ஆசிரியர் : ராசகோபால ஐயர்.

✧ இறப்பு : நவம்பர் 29, 1989.

கல்வி:

✧ உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார் பின்பு, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார்.

திருமண வாழ்க்கை:

✧ 1940 ஆம் ஆண்டில் திருமணமானது.

✧ மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளார்கள்.

பரிசும் பாராட்டுக்களும்:

✧ துணைவன் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார்.

✧ மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடல் தமிழக அரசின் பரிசு பெற்றது.

திரைப்பயணம்:

✧ எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர்.

✧ சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

✧ கல்லூரி படிப்பிற்குப் பிறகு தேவி நாடக சபையின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார்.

✧ கருணாநிதி எழுதிய மந்திரிகுமாரி என்ற நாடகத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.

பாடல்கள் நாட்டுடமை:

✧ தமிழக அரசு மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும் மே,2007-இல் அரசுடைமை ஆக்கியது.

நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்:

✧ 1949-இல் சேலம் மாடர்ன் தியேட்டரின் மாயாவதி என்ற படத்திற்கு

  பெண் எனும் மாயப் பேயாம் .... பொய் மாதரை என் மனம் நாடுமோ .... என்று தொடங்கும் பாடலே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.

🎵 ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
  என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

🎵 நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக -அது
  நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக

🎵 மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
  வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு

🎵 கடவுள் என்னும் முதலாளி
  கண்டெடுத்த தொழிலாளி
  விவசாயி .... விவசாயி ....

🎵 மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே

🎵 வாராய் ..... நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!

🎵 சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா ..... (நீலமலைத் திருடன்)

🎵 சிரிப்பு ..... இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு (ராஜா ராணி)

🎵 முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல (உத்தம புத்திரன்)

🎵 காவியமா? நெஞ்சின் ஓவியமா? (பாவை விளக்கு)

No comments:

Post a Comment