29 Dec 2016

அக்னி 5 ஏவுகணை : இறுதிக் கட்ட சோதனை வெற்றி 26/12/2016

ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையின் சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது. இவ்வெற்றிக்குக் கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்தியாவின் அடுத்த அக்னி-6 ஏவுகணையைக் கட்டமைக்கும் பணியானது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்துடன், நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்தும் ஏவும் வகையில் கட்டமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment