இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும்.
புறத்திணைப் பிரிவுகள்:-
1. வெட்சித் திணை
2. வஞ்சித் திணை
3. உழிஞைத் திணை
4. தும்பைத் திணை
5. வாகைத் திணை
6. காஞ்சித் திணை
7. பாடாண் திணை
புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல்:-
"வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்".
வெட்சித் திணை:-
** ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந் நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை
வஞ்சித் திணை:-
** மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது.
உழிஞைத் திணை:-
** படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக் கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது.
தும்பைத் திணை:-
** படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுவது.
வாகைத் திணை:-
** மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது
காஞ்சித் திணை:-
** உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை
பாடாண் திணை:-
** பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது
புறத்திணைப் பிரிவுகள்:-
1. வெட்சித் திணை
2. வஞ்சித் திணை
3. உழிஞைத் திணை
4. தும்பைத் திணை
5. வாகைத் திணை
6. காஞ்சித் திணை
7. பாடாண் திணை
புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல்:-
"வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்".
வெட்சித் திணை:-
** ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந் நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை
வஞ்சித் திணை:-
** மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது.
உழிஞைத் திணை:-
** படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக் கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது.
தும்பைத் திணை:-
** படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுவது.
வாகைத் திணை:-
** மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது
காஞ்சித் திணை:-
** உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை
பாடாண் திணை:-
** பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது
No comments:
Post a Comment