27 Dec 2016

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள வீலர் தீவில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை சோதனை  வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

அக்னி-5 ஏவுகணை 5,500 முதல் 5,800 கிலோமீட்டர் வரை உள்ள தொலைவில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.  50 ஆயிரம் கிலோ எடை கொண்ட அக்னி-5 ஏவுகணை, 17.5 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்டது.

மேலும் இந்த ஏவுகணை மூலம் வடக்கு சீனாவை எளிதாக தாக்க முடியும். கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. அந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்திருப்பது குறிப்பிடத்க்கது.

அக்னி 1   --  700 கி.மீ.,
அக்னி 2   --  2,000 கி.மீ.
அக்னி 3   -- 2,500 கி.மீ.
அக்னி 4   -- 2,500 முதல் 3,500 கி.மீ வரை
அக்னி 5   -- 5,500 முதல் 5,800 கி.மீ வரை

No comments:

Post a Comment