23 Dec 2016

வாணிதாசன்

தமிழ்நாட்டின் Words Worth  - வாணிதாசன்

ஆசிரியர் குறிப்பு :

☆ இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு

☆ புனைப்பெயர் : ரமி

☆ ஊர் : புதுவை மாவட்டம் வில்லியனு}ர்

☆ பெற்றோர் : அரங்க திருக்காமு, துளசியம்மாள்

☆ காலம் : 22.7.1915 - 7.8.1974

வாழ்க்கை குறிப்புகள் :

♤ பாவேந்தர் பாரதிதாசனின் சீடர்.

♤ பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முக்கியமான கவிஞர்களில் இவரும் ஒருவர்.

♤ பாரதிதாசனுக்குப் பிறகு இயற்கையின் அழகை எழிலுறப் படம் பிடித்து காட்டியவர் இவர்.

♤ வாணிதாசன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, பிரெஞ்சு, ரஷ்யம், ஆங்கில மொழிகளிலும் புலமைப்பெற்று விளங்கினார்.

♤ தமிழ் - பிரெஞ்சு கையரக முதலி என்ற
நூலை வெளியிட்டுள்ளார்.

♤ இவரது பாடல்கள் சாகித்ய அகாடமியால் வெளியிடப்பட்ட தமிழ் கவிதை களஞ்சியம் என்ற நூலிலும், தென் மொழிகள் புத்தக வெளியிட்டு கழகம் வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளன.

♤ குற்றியலுகர ஒலியை முதன் முதலில் உவமையாக எடுத்தாண்டவர் இவர்தான்.

♤ 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர்.

சிறப்புப் பெயர்கள் :

☆ கவிஞரேறு

☆ தமிழ்நாட்டின் வேர்ட்வொர்த்

☆ தமிழ்நாட்டுத் தாகூர்

☆ பாவலர் மணி

☆ பாவலர் மன்னன்

☆ புதுமைக் கவிஞர்

பட்டங்கள் :

♤ செவாலியர் என்ற பட்டத்தை பிரெஞ்சு குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.

♤ கவிஞரேறு

♤ பாவலர் மணி

சிறந்த தொடர்கள் :

நோக்கடா கீழ்வானம் தங்க காட்டாறு
நுண்முகில்கள் ஆகிய அழகை காண ஆயிரம் கண்கள் வேண்டும்

அன்பு வளர்த்தால் அலைகடல் சூழ் நம்நாட்டில் துன்பமில்லை

கற்பிப்போர் கண்கொடுப்பாரே - அந்தக்
கணக்காயர் உரையினில் இரு செவிசேரே

செங்கதிரோன் மலையிடையில் செம்மை தேக்கும்
செடி கொடிகள் பொன் பூக்கும்

படைப்புகள் :

☆ இரவு வரவில்லை

☆ இன்ப இலக்கியம்

☆ இனிக்கும் பாட்டு

☆ எழில் விருத்தம்

☆ எழிலோவியம்

☆ குழந்தை இலக்கியம்

☆ சிரித்த நுணா

☆ கொடி முல்லை

☆ தமிழச்சி

☆ தீர்த்த யாத்திரை

☆ தொடுவானம்

☆ பாட்டரங்கப் பாடல்கள்

☆ பாட்டு பிறக்குமடா

☆ பெரிய இடத்துச் செய்தி

☆ பொங்கற்பரிசு

☆ வாணிதாசன் கவிதைகள்.

No comments:

Post a Comment