3 Dec 2016

DECEMBER 03 பாபு ராஜேந்திர பிரசாத்

🏁 இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் 'பாபுஜி" என்று அன்புடன் அழைத்தனர்.

🏁 புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்பு பணியைத் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.

🏁 உண்மையை அறியும் குழுவுக்குத் தலைமையேற்ற ராஜேந்திர பிரசாத், முக்கியமான தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது ராஜேந்திர பிரசாத் வாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

🏁 இந்தியக் குடியரசை செம்மையாக வழிநடத்திய இவருக்கு 'பாரத ரத்னா" விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. இந்திய குடியரசுத் தலைவர் பதவியை இரண்டு முறை வகித்த பெருமைக்குரிய டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத், 78-வது வயதில் (1963)காலமானார்.

No comments:

Post a Comment