3 Dec 2016

குதிராம் போஸ்

🎌 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸ் 1889ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டம் ஹபிப்பூர் கிராமத்தில் பிறந்தார். விடுதலை இயக்கத்தின் ஆசானாக விளங்கியவர்களின் சொற்பொழிவுகளில் கவர்ந்த இவர் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார்.

🎌 விடுதலை வீரர்களுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்கி வந்த மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டை பலி தீர்க்க அவருடைய வாகனம் மீது குண்டு வீசினார் இவர். ஆனால் அதில் பயணம் செய்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர்.

🎌 எனவே ஆங்கில அரசு இவருக்கு தூக்குதண்டனை (1908) விதித்தது. அப்போது அவருக்கு வயது 18 தான். கையில் பகவத் கீதையுடனும் வந்தே மாதரம் முழக்கத்துடனும் இந்த மாவீரனின் உயிர் பிரிந்தது. இந்த மாவீரனின் அஸ்தியை எடுத்துச் சென்ற தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பாலில் கலந்து புகட்டினார்களாம்.

No comments:

Post a Comment