1 Dec 2016

வரலாறு - மௌரியருக்கு பிந்தைய கால இந்தியா.

1. கன்வ வம்சம் எத்தனை ஆண்டுகள் நீடித்தது - 45 ஆண்டுகள்

2. மௌரியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, தக்காணத்தில் சுதந்திர அரசை நிறுவியவர்கள் யார் - சாதவாகனர்கள்

3. சாதவாகனர்களின் ஆட்சிக்காலம் எத்தனை ஆண்டுகள் நீடித்தது - 450 ஆண்டுகள்

4. சாதவாகனர்கள் ............. என்றும் அழைக்கப்பட்டனர் - ஆந்திரர்கள்

5. ..........., ............... சாதவாகனர்களின் வரலாற்றுக்கு முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன - புராணங்கள், கல்வெட்டுக்கள்

6. கௌதமி புத்ர சதகர்ணி என்பவரின் ஆட்சி பற்றி ........... மற்றும் .............. கல்வெட்டுக்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன - நாசிக் மற்றும் நானாகாத்

7. சாதவாகனர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் அக்காலத்தின் ........... நிலைமையை எடுத்துக் கூறுகின்றன - பொருளாதார நிலைமையை

8. சாதவாகன வம்சத்தை நிறுவியவர் யார் - சிமுகர்

9. சிமுகரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார் - கிருஷ்ணர்

10. சாதவாகன வம்சத்தின் மூன்றாவது அரசன் யார் - ஸ்ரீசதகர்ணி

11. ஸ்ரீசதகர்ணி எந்தெந்த பகுதிகளை கைப்பற்றினார் - மேற்கு மாவளம், பீரார்

12. சாதவாகன வம்சத்தின் பதினேழாவது அரசன் யார் - ஹாலா

13. ஹhலா எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார் - 5 ஆண்டுகள்

14. சத்த சாய் என்றழைக்கப்படும் கத சப்த சாய் என்ற நூலை இயற்றியவர் யார் - ஹாலா

15. கத சப்த சாய் நூல் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது - பிராகிருத மொழி

No comments:

Post a Comment