24 Nov 2016

அருந்ததி ராய்

✍ இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் 1961ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார்.

✍ இவர் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தை தொழிலாளர் பிரச்சனை, அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் முதலியவற்றை தனது படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

✍ மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டு சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்.

✍ இவருடைய எழுத்துகள் மக்களுக்கு சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய், நாவல்கள், அரசியல் கட்டுரைகள் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார்.

✍ 1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்-க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார். 2004-ல் சிட்னி அமைதிப் பரிசு மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்று இருக்கிறார்.

No comments:

Post a Comment