29 Nov 2016

இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை தொடர்ச்சி.

பிரெஞ்சுக்காரர்கள்:-

பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான “கால்பர்ட்” என்பவரின் முயற்சியால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கி.பி.1664-ல் தோற்றுவிக்கப்பட்டது.

இவர்கள் கி.பி.1668-ல் சூரத்திலும், கி.பி1669-ல் மசூலிப்பட்டினத்திலும் வணிக மையத்தை ஏற்படுத்தினர்.

கி.பி.1674-ல் தஞ்சாவூர் மன்னரிடமிருந்து சென்னைக்கு தெற்கே ஒரு நிலப்பகுதியைப் பெற்று பாண்டிசேரியை நிறுவி, இதனை தலைமையிடமாக மாற்றினர்.

கி.பி. 1742-ல் டியூப்ளே, பிரெஞ்சு கவர்னராக பொறுப்பேற்றார்.

இறுதி ஆதிக்கப்போட்டி:-

இந்தியாவுக்கு ஐரோப்பாவிலிருந்து ஐந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் வந்தாலும், இறுதியில் ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் தான் ஆதிக்கப்போட்டி நிலவியது. இதன் விளைவாக இவர்களுக்குள் போர்கள் ஏற்பட்டன. அப்போர்கள் தான் கர்நாடகப் போர்கள்.

கர்நாடகப் போர்கள்

முதல் கர்நாடகப் போர்: கி.பி. 1746-1748 (அய்லா சாப்பேல் உடன்படிக்கை)

இரண்டாம் கர்நாடகப் போர்: கி.பி. 1748-1754 (பாண்டிச்சேரி உடன்படிக்கை)

மூன்றாம் கர்நாடகப் போர்: கி.பி. 1756-1763 (பாரிஸ் உடன்படிக்கை)

இரண்டாம் கர்நாடகப் போரில், இராபர்ட் கிளைவ் பங்கெடுத்து ஆற்காட்டைக் கைப்பற்றியதால், ஆற்காட்டின் வீரர் என அழைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment