29 Nov 2016

இராசராச சோழனின் வில், வாள், முரசு, கொடி, குடை குறித்து கூறப்படுபவை:
வில் - இந்திரனை வென்றது, பெருங்கடலை வற்றச் செய்தது.
வாள் - சோழ நாட்டிற்குக் காவிரி செல்ல மலையை வெட்டி வழி
அமைத்தது. வானத்தில் அசைந்த நகரத்தை அழித்தது.

முரசு - சேரனை வென்று பெற்ற கடப்பமரத்தால் செய்யப்பட்டது. காவிரிக்கு அணைகட்ட பகைவரை மண் சுமக்கச் செய்தது.
கொடி - மேருமலையை வலம் வந்தது. இந்திரனைப் புலியாகக் கொண்டது.
குடை - மக்களைக் காப்பதற்கு அண்ட கூடத்தை ஒத்து நின்றது.

வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்:

பிழை: வண்டிகள் ஓடாது
திருத்தம்: வண்டிகள் ஓடா
பிழை: அவை இங்கே உளது
திருத்தம்: அவை இங்கே உள
பிழை: அது எல்லாம்
திருத்தம்: அவை எல்லாம்
பிழை: மக்கள் கிடையாது
திருத்தம்: மக்கள் இல்லை
பிழை: வருவதும்போவதும் கிடையாது
திருத்தம்: வருவதும் போவதும் கிடையா
பிழை: ஒன்றோ அல்லது இரண்டோ தருக
திருத்தம்: ஒன்றோ இரண்டோ தருக
பிழை: சென்னை என்ற நகரம்
திருத்தம்: சென்னை என்னும் நகரம்
பிழை: எனது மகன்
திருத்தம்: என் மகன்
பிழை: ஏற்கத் தக்கது அல்ல
திருத்தம்: ஏற்கத் தக்கது அன்று
பிழை: அவளது தந்தை
திருத்தம்: அவள் தந்தை
பிழை: புலி வந்தன
திருத்தம்: புலி வந்தது
பிழை: எருதுகள் ஓடியது
திருத்தம்: எருதுகள் ஓடின
பிழை: பூக்கள் மலர்ந்து மணம் வீசியது
திருத்தம்: பூக்கள் மலர்ந்து மணம் வீசின
பிழை: இங்குள்ளது எல்லாம் நல்ல பழங்களே
திருத்தம்: இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே
பிழை: எனக்குப் பல வீடுகள்உள
திருத்தம்: எனக்கு வீடுகள் பல உள்ளன
பிழை: இது பொது வழி அல்ல
திருத்தம்: இது பொது வழி அன்று
பிழை: விழாவில் பல அறிஞர் பேசினர்
திருத்தம்: விழாவில் அறிஞர்கள் பலர் பேசினர்
பிழை: தென்றல் மெல்ல வீசின
திருத்தம்: தென்றல் மெல்ல வீசியது
பிழை: வாகனத்தை இடது பக்கம் திருப்பாதே
திருத்தம்: வாகனத்தை இடப்பக்கம் திருப்பாதே
பிழை: பத்து பழங்களில் ஒரு பழமே நல்லன
திருத்தம்: பத்துப் பழங்களில் ஒரு பழமே நல்லது
பிழை: வலது பக்கச் சுவரில் எழுதாதே
திருத்தம்: வலப்பக்கச் சுவரில் எழுதாதே
பிழை: ஒவ்வொரு சிற்றூர்களிலும் ஊராட்சி உள்ளது.
திருத்தம்: ஒவ்வொரு சிற்றூரிலும் ஊராட்சி உள்ளது.
பிழை: மாணவர்கள் கல்வியறிவு ஒழுக்கத்திற் சிறந்து விளங்க வேண்டும்.
திருத்தம்: மாணவர்கள் கல்வியறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
பிழை: அவர் தான் கூறினார் இவர் தான் கூறினார் என்று பாராது எவர் தான் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க
திருத்தம்: அவர்தாம் கூறினார் இவர்தாம் கூறினார் என்று பாராது எவர்தாம் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க.
பிழை: நல்லவகைளும் கெட்டவைகளும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.
திருத்தம்: நல்லனவும், கெட்டனவும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.
பிழை: கண்ணன் முருகன் மற்றும்வேலன் வந்தனர்.
திருத்தம்: கண்ணன், முருகன், வேலன் ஆகியோர் வந்தனர்.
பிழை: சென்னைக்கு அருகாமையில் இருப்பது கன்னியாகுமரி அல்ல.
திருத்தம்: சென்னைக்கு அருகில் இருப்பது கன்னியாகுமரி அன்று.
பிழை: தலைவி தலைவனோடு சென்றார்
திருத்தம்: தலைவி தலைவனோடு சென்றாள்
பிழை: இதனைச் செய்தவர் இவரல்லவா?
திருத்தம்: இதனைச் செய்தவர் இவரல்லரோ?
பிழை: பெரியதும் சிறியதுமான சாமான்களைச் செய்கிறார்கள்.
திருத்தம்: பெரியனவும், சிறியனவுமான சாமான்களைச் செய்கிறார்கள்.
மரபு வழூஉச்சொற்களை நீக்கி எழுதுதல்

* காகம் கூவும், நாய் கத்தும்
- காகம் கரையும், நாய் குரைக்கும்
* காட்ல யானை கத்தியது, புலி கூவியது
- காட்டில் யானை பிளிறியது, புலி உறுமியது
* நீரின்றி நஞ்சையும், புஞ்சையும் விளையவில்லை
- நீரின்றி நன்செய்யும், புன்செய்யும் விளையவில்லை
* யானை மேய்ப்பனோடு ஆட்டுப் பாகனும் வந்தான்
- யானைப் பாகனோடு ஆட்டு இடையனும் வந்தான்
* கரும்புத் தோப்புக்கு அருகாமையில் நாய் கத்தியது
- கரும்புக் கொல்லைக்கு அருகில் நாய் குரைத்தது.
* மயில் கூவ, குயில் அகவ, கிளி பாடியது
- மயில் அகவ, குயில கூவ, கிளி பேசியது
* தேயிலைத்தோப்புக்கு அருகில் பலாத் தோட்டம் உள்ளது.
- தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் பலாத் தோப்பு உள்ளது.
* சோளக்காடு - ஆலங்கொல்லை
- சோளக் கொல்லை - ஆலங்காடு
* குதிரைத் தொழுவம் - யானை கொட்டில்
- குதிரைக்கொட்டில் - யானைக் கூடம்
* தோட்டத்தில் வாழைச்செடியும் மாஞ்செடியும் நட்டனர்.
- தோட்டத்தில் வாழைக் கன்றும், மாங்கன்றும் நட்டனர்.
கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுதல்

* அப்பிசி மாசம் அடமள இம்பாங்க
- ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
* கோளி முட்டை தாவாரத்தில் உருண்டது.
- கோழி முட்டை தாழ்வாரத்தில் உருண்டது
* வெடியங்காட்டியும் வெத்திலை போடறது ஒரு பளக்கமா?
- விடிவதற்குள் வெற்றிலை போடுவது ஒரு பழக்கமா?
* ஒருத்தன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்கோலமா?
- ஒருவன் ஒன்றியாய்ப் போனால் அது ஊர்வலம் ஆகுமா?

No comments:

Post a Comment