29 Nov 2016

TNPSC மாதிரி வினாத்தாள் - 1



1. பலசமயக் கடவுளரையும் போற்றி நூல்கள் பல இயற்றியவர்?

A. பாரதியார் B. சொக்க நாதப்புலவனார்

C. திரு.வி.க. D. சி.இலக்குவனார்

2. “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்று பாடியவர்.

A. தாயுமானவர் B. வள்ளலார்

C. குணங்குடிமஸ்தான் D. சுத்தானந்த பாரதியார்

3. “மனித நாகரிகத்தின் தொட்டில்” என்ற சிறப்புக்குரியது?

A. பாபிலோன் B. ஆப்பிரிக்கா

C. மஞ்சளாற்றுப்படுகை D. லெமூரியாக்கண்டம்

4. “மருந்து” என்ற தலைப்பின்கீழ்ச் செய்திகளைக் கூறும் நூல்?

A. திருக்குறள் B. திரிகடுகம்

C. ஏலாதி D. சிறுபஞ்சமூலம்

5. “குமரி” என்ற பெயர்கொண்ட மூலிகை ?

A. கண்டங்கத்திரி B. கற்றாழை

C. தூதுவளை D. ஆடுதொடாப்பாளை

6. ஏற்றுமதி இறக்குமதி பற்றிக் கூறும் பண்டைத் தமிழ் நூல் ?

A. மலைபடுகடாம் B. பட்டினப்பாலை

C. பழமொழி நானூறு D. சிலப்பதிகாரம்

7. “தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என்ற போற்றுதலுக்கு உரியவர் ?

A. முத்துலட்சுமி ரெட்டி B. பாலம்மாள்

C. இராமாமிர்தத்தம்மா D. அஞ்சலையம்மாள்

8. பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்துக.

I II

அ. தென்னாட்டு ஜான்சிராணி 1. தென்னாப்ரிக்கா

ஆ. வள்ளியம்மை 2. முத்துலட்சுமி

இ. இந்துப் பல்கலைக்கழகம் 3. அஞ்சலையம்மாள்

ஈ. இந்தியாவின் முதல் பெண்

மருத்துவர் 4. அன்னிபெசண்ட்

அ ஆ இ ஈ

A. 2 1 4 3

B. 2 4 3 2

C. 3 1 4 2

9. உலகம் உருண்டை வடிவமானது என்று கூறிய முதல் குரல் இடம் பெற்ற நூல்.

A. திருக்குறள் B. நெடுநல்வாடை

C. பழமொழிநானூறு D. மணிமேகலை

10. விண்ணில் தாமே ஒளிவிடக் கூடியவற்றுக்குத் தமிழர் வைத்த பெயர்.

A. கோள்மீன் B. நாள்மீன்

C. கிரகணம் D. ஒளிச்சிதறல்

11. தமிழ் ஓர் ஆட்சி மொழியாகத் திகழும் நாடு

1. இந்தியா

2. மலேசியா

3. சிங்கப்பூர்

4. இலங்கை

A. அனைத்தும் சரி B. 1, 2, 3, சரி

C. 2, 3, 4 சரி D. 2, 3, சரி

12. “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்று சொன்னவர் ?

A. முன்றுறையரையனார் B. கபிலர்

C. பரணர் D. ஔவையார்

13. பொருந்தாததைக் கண்டறி.

A. சிறந்த ஊர்களைக் குறிக்கும் பின்னொட்டு புரம்

B. கடற்கரை நகரம் பட்டினம்

C. கடற்கரைச் சிற்றூர் பாக்கம்

D. மருதத்திணையுடன் தொடர்புடையது குப்பம்.

14. பொருந்தாத ஒன்றைக் கண்டறி.

A. திருவண்ணாமலை B. வால்பாறை

C. கோவில்பட்டி D. கிருஷ்ணகிரி

15. இந்தியாவின் உயர்ந்த விருதாகிய “பாரத ரத்னா” என்ற விருதினைப் பெற்ற தமிழ்நாட்டவர் ?

A. அம்பேத்கர் B. காமராசர்

C. எம்.ஜி.ஆர் D. முத்துராமலிங்கத்தேவர்

16. சென்னை மாகாணத்திற்குத் “தமிழ்நாடு என்ற பெயர் மாற்றிச் சட்டம் இயற்றியவர் .

A. அண்ணாதுரை B. காமராசர்

C. கருணாநிதி D. பக்தவச்சலம்

17. பொருந்தாததைக் கண்டறி: ஜி.யூ.போப்

A. திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

B. திருவாசகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

C. Elementary Tamil Grammar என்ற நூலை எழுதியவர்

D. அயர்லாந்தைச் சேர்ந்தவர்

18. ஜோசப் பெஸ்கிக்கு “தைரியநாதர்” என்ற பட்டம் அளித்தவர்கள்.

A. மதுரைத் தமிழ்ச் சங்கத்தார்

B. கிழவன் சேதுபதி

C. சுப்பிரதீபக் கவிராயர்

D. தென்னிந்திய கிறித்தவச் சபையார்

19. பொருந்தாததைக் கண்டறிக

சென்னையில் இவர்கள் பெயரில் சிறந்த நூல்நிலையங்கள் அமைந்துள்ளன.

A. பெருஞ்சித்திரனார்

B. உ.வே.சா

C. தேவநேயப்பாவாணர்

D. மறைமலையடிகள்

20. இன்றுள்ள தமிழ்ப் பேரகராதியில் காணப்படும் பிழைகளைச் சுட்டிக்காட்டி நூல் எழுதியவர்.

A. மறைமலையடிகள்

B. திரு.வி.க.

C. பரிதிமாற்கலைஞர்

D. தேவநேயப்பாவாணர்

21. பொருத்துக

அ. என்வாழ்க்கைப்போர் 1. பெருஞ்சித்திரனார்

ஆ. தமிழ்ச்சிட்டு 2. இலக்குவனார்

இ. என்சரித்திரம் 3. தெ.பொ.மீ

ஈ. கானல்வரி 4. உ.வே.சா.

அ ஆ இ ஈ

A. 1 3 4 2

B. 2 3 4 1

C. 2 1 4 3

D. 4 1 2 3

22. தொடர்ச்சியாக 99 பூக்களின் பெயர்களைக் கூறும் நூல்.

A. பரிபாடல்

B. குறிஞ்சிப்பாட்டு

C. திருமுருகாற்றுப்படை

D. முல்லைப்பாட்டு

23. பரிதிமாற்கலைஞர்

அ. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலில் கூறியவர்.

ஆ. அங்கம் என்ற நாடக வகைக்கு மானவிஜயம் என்ற நாடகத்தை எழுதியவர்

இ. ரூபாவதியாகவும், கலாவதியாகவும் பெண்வேடம் இட்டு நடித்தவர்.

ஈ. சித்திரக்கவி என்ற நூலின் ஆசிரியர்.

A. அ, இ, சரி

B. அ, இ, தவறு

C. அ, ஆ, இ சரி

D. அனைத்தும் சரி

24. பொருந்தாததைக் காண்க.

A. கள்ளர் சரித்திரம் என்ற நூலை எழுதியவர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்

B. தமிழ்ப் பேரகராதியைப் பதிப்பித்தவர்

C. திராவிட சாஸ்திரி என்று அழைக்கப்படுவர் சத்தியமூர்த்தி

D. நாவலர் என்ற பட்டம் பெற்றவர்கள் சோமசுந்தர பாரதியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

25. கடல் பயணத்தை “முந்நீர் வழக்கம்” என்று குறிப்பிடும் நூல்.

A. தொல்காப்பியம்

B. குறுந்தொகை

C. பட்டினப்பாலை

D. நெடுநல்வாடை

26. கோடிட்ட இடத்தை நிரப்புக.

பண்டைக் காலத்தில் பெரிய கப்பல்களை ………………… என்று அழைத்தனர்

A. பாய்பரம்

B. கட்டுமரம்

C. நாவாய்

D. தெப்பம்

27. பொருத்துக.

அ. கலைகளின் சரணாலயம் 1. கும்பகோணம்

ஆ. ஓவியம் 2. நாட்டியம்

இ. விறலி 3. கண்ணெமுத்து

ஈ. நாதப்படிகள் 4. தாராசுரம்கோயில்

அ ஆ இ ஈ

A. 1 2 3 4

B. 2 3 1 4

C. 4 2 1 3

D. 4 3 2 1

28. கருத்துப்படத்தைத் தொடங்கியவர்

A. வால்ட்டிஸ்னி

B. ஈஸ்ட்மன்

C. எட்வர்ட்

D. பிரான்சிஸ் சென்கின்ஸ்

29. “ஒருபிடிசோறு” என்ற சிறுகதையின் ஆசிரியர்.

A. சு. சமுத்திரம்

B. கல்கி

C. புதுமைப்பித்தன்

D. ஜெயகாந்தன்

30. 2002 இல் ஞானபீட விருது பெற்றவர்.

A. அகிலன்

B. ஜெயகாந்தன்

C. சிதம்பரரகுநாதன்

D. வல்லிக்கண்ணண்

31. “மாபாவியோர் கூடியிருக்கும் மாநகருக்கு மன்னா நீர் போகாதீர் என்ற வசனத்தால் எற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்.

A. பரிதிமாற்கலைஞர்

B. சங்கரதாஸ்சுவாமிகள்

C. பம்மல் சம்பந்தனார்

D. சோ

32. நாடகம் ஏத்தும் நாடகக் கணிகை – என்று குறிப்பிடப்படுபவள்.

A. மாதவி

B. மணிமேகலை

C. சித்திராங்கி

D. சித்திராதேவி

33. தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் “உலகின் சிறந்த நாவல்களில் ஒன்று” என்று நேரு குறிப்பிடும் நூல் ?

A. தாய்

B. போரும் அமைதியும்

C. சோபியின் உலகு

D. இடைவேனிற் பருவத்து நள்ளிரவு

34. “சீட்டுக்கவி” என்பது

A. சொல்லணியுள் ஒன்று

B. கவிஞர் வகையுள் ஒன்று

C. செய்யுட்கடிதம்

D. விளையாட்டுச் சீட்டு

35. பொருந்தாததைக் காண்க.

A. புதுக்கவிதை வளர்ச்சியில் பங்கு பெற்றவர் வல்லிக்கண்ணன்

B. உலகின் முதல் புதுக்கவிதையை எழுதியவர் வால்ட்விட்மன்

C. ”ழ” என்பது ஒரு புதுக்கவிதை இதழ்

D. வெளிச்சம் வெளியே இல்லை என்ற புதுக்கவிதையை எழுதியவர் அப்துல் ரகுமான்

36. பொருந்தாததைக் காண்க.

A. தீவுகள் கரையேறுகின்றன – ஈரோடு தமிழன்பன்

B. அமரவேதனை - சி.சு. செல்லப்பா

C. சர்ப்பயாகம் - சிற்பி

D. திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் - மு.மேத்தா

37. “திரைக்கவித் திலகம்” என்று போற்றப்படுபவர்.

A. மருதகாசி

B. பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம்

C. உடுமலை நாராயணகவி

D. கண்ணதாசன்

38. மலைக்கள்ளன் என்ற மர்ம நாவலின் ஆசிரியர்.

A. நாமக்கல் கவிஞர்

B. தேசிகவிநாயகம் பிள்ளை

C. முடியரசன்

D. கு.ப. ராஜகோபாலன்

39. பாரசீக மொழியில் எழுதப்பட்ட கவிதை நூல் ருபாயதினைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

A. பாரதியார்

B. கவிமணி

C. நாமக்கல் கவிஞர்

D. வெங்கட்டராமன்

40. பொருந்தும் ஒன்றைத் தேர்ந்தெடு.

A. நேயர் விருப்பம் - அப்துல் ரகுமான்

B. அவர்கள் வருகிறார்கள் - மீரா

C. சர்ப்ப யாகம் - வைரமுத்து

D. ஊமைவெயில் - புவியரசு

41. “தமிழ் மூவாயிரம்” என்ற சிறப்பிற்குறிய நூல்.

A. மூவர்தேவாரம்

B. திவ்யப்பிரபந்தம்

C. பெரியபுராணம்

D. திருமந்திரம்

42. பொருத்துக.

அ. நாமார்க்கும் குடியல்லோம் 1. அப்பூதியடிகள்

ஆ. இப்போது இங்கவன் உதவான் 2. சுந்தரர்

இ. முகுந்த மாலை 3. அப்பர்

ஈ. தேவாரம் 4. குலசேகரர்

அ ஆ இ ஈ

A. 3 2 4 1

B. 2 4 1 3

C. 3 1 4 2

D. 4 2 3 1

43. உருவவழிபாட்டை மறுத்த சித்தர்.

A. கடுவெளிசித்தர்

B. அகத்தியர்

C. பட்டினத்தார்

D. கொங்கணச்சித்தர்

44. மீனவர்களின் அரிச்சுவடி

A. ஐலேசா

B. மீன்வலை

C. வெண்மணல்

D. விடிவெள்ளி

45. “நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா” என்று பாராட்டியவர்.

A. வாணிதாசன்

B. கண்ணதாசன்

C. பாரதிதாசன்

D. பாரதியார்

46. பாஞ்சாலி சபதத்தின் நூல் அமைப்பு

A. காண்டம் 2, சருக்கம் 5

B. காண்டம் 3, படலம் 3

C. காண்டம் 5, சருக்கம் 3

D. காண்டம் இல்லை, சருக்கம் 9

47. மூவர் உலாவில் புகழப்படுபவன்

A. ஒட்டக்கூத்தர்

B. குலோத்துங்கன்

C. கம்பர்

D. ராஜாதிராஜன்

48. தமிழ் விடுதூதில் தமிழின் நான்கு வரப்புகளாகக் கூறப்படுவன

A. பாக்கள்

B. அசைகள்

C. சீர்கள்

D. தளைகள்

49. பொருந்தாத ஒன்றைக் காண்க.

A. தேம்பாவணி - சூசையப்பர்

B. திருவிளையாடற்புராணம் - கொங்குவேள்

C. தருமிக்குக் கொடுத்தபாடல் -குறுந்தொகையில் உள்ளது

D. காரைக்கால் அம்மையார் - பெரியபுராணம்

50. கூற்று (A) : திருமாலைப் பாடாத ஆழ்வார் மதுரகவி ஆழ்வார்

காரணம் (R) : நம்மாழ்வாரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்

A. A சரி R தவறு

B. R சரி A தவறு

C. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் இரண்டும் தம்முள் பொருந்தவில்லை

D. இரண்டும் தவறு

51. சொல்லின் குற்றங்களாக மணிமேகலை கூறுவன.

A. 4

B. 6

C. 8

D. 5

52. வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல்

A. சந்திரன் சுவர்க்கி

B. சடையப்பர்

C. சீதக்காதி

D. வரபதி ஆட்கொண்டான்

53. “எவ்வழிநல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்று பாடியவர்.

A. கபிலர்

B. பாரதியார்

C. ஔவையார்

D. குமணன்

54. நெய்தற்கலியின் ஆசிரியர்.

A. நல்லந்துவனார்

B. கபிலர்

C. பேயனார்

D. இளநாகனார்

55. மறுபிறப்பு உணர்ந்தவளான மணிமேகலையில் குறிப்பிடப்படுபவள்.

A. சித்ராபதி

B. மணிமேகலை

C. தீவதிலகை

D. சுதமதி

56. நற்றிணையின் பேரெல்லை

A. 8 அடி

B. 9 அடி

C. 10 அடி

D. 13 அடி

57. பிள்ளைத்தமிழன் வகைகள்

A. 2

B. 4

C. 6

D. 10

58. யாதினும் இனிய நண்ப – என இராமன் கூறியது.

A. விசுவாமித்திரரை

B. பரதனை

C. குகனை

D. வாலியை

59. கல்விக்கு விளக்கம் என்று கூறப்படுவது.

A. புகழ்

B. அறிவு

C. செல்வம்

D. நல்உணர்வு

60. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்

A. திருவள்ளுவப்பயன்

B. குமரேச வெண்பா

C. ஞானக்குறள்

D. திருவள்ளுவமாலை

61. கோடிட்ட இடத்தை நிரப்புக.

அன்பில்லார் எல்லாம் ……………………………..

A. எதுமில்லார்

B. யாதுடையார்

C. தமக்குரியர்

D. வீணர்களே

62. உவப்பக்கூடி உள்ளப்பிரிதல்

A. அறிவர் தொழில்

B. வீணர்தொழில்

C. புல்லார் தொழில்

D. புலவர் தொழில்

63. “சம்பு” என்ற சொல்லின் பொருள்

A. கேவலம்

B. நாவல்

C. புதுமை

D. தேம்புதல்

64. பொருந்தாத ஒன்றைக் கண்டறி.

A. மல்லல் - வளம்

B. பாற்றுதல் - போக்குதல்

C. தியங்கி - மயங்கி

D. மரை - காடு

65. “மங்கையர் கோன்” என்று அழைக்கப்படுபவர்.

A. சிவபெருமான்

B. திருமங்கையாழ்வார்

C. மங்கையர்க்கரசி

D. ஆண்டாள்

66. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

A. பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணகவி

B. நாடக உலகின் இமயமலை - சங்கரதாஸ் சுவாமிகள்

C. ஈசானதேசிகர் - சுவாமிநாதர்

D. வலவன்ஏவா வானஊர்தி - அகநானூறு



67. பிரித்தெழுதுக. எந்தாய்

A. என் + தாய்

B. எமது + தாய்

C. எந்தை + ஆய்

D. எ + தாய்

68. பிரித்தெழுதுக. காமுறுவர்

A. காம் + உறுவர்

B. கா + உறுவர்

C. காமுறு + அர்

D. காமம் + உறுவர்

69. பகுபத உறுப்பிலக்கணப்படி பிரிக்க. உரைத்தது

A. உரை + த் + த் + அ + து

B. உரைத்து + அது

C. உரை + த் + அது

D. உரை + தது

70. பொருத்துக: எதிர்ச்சொல் வகையில்

அ. சுருக்கல் 1. நிமிர்தல்

ஆ. குன்றல் 2. விரிதல்

இ. மடிதல் 3. விளங்கல்

ஈ வளைதல் 4. மிகைபடல்

அ ஆ இ ஈ

A. 3 2 4 1

B. 3 4 2 1

C. 4 3 1 2

D. 2 1 4 3

71. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

A. குண்டலகேசி - நீலகேசி

B. மணிமேகலை - சீவகசிந்தாமணி

C. வளையாபதி - சிலப்பதிகாரம்

D. மணிமேகலை - வளையாபதி

72. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

A. வஞ்சினக்காஞ்சி

B. தொடாக்காஞ்சி

C. மகற்பாற்காஞ்சி

D. முதுமொழிக்காஞ்சி

73. உத்தரவு – என்ற பிறமொழிச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல்

A. கட்டளை

B. உத்திரவு

C. உறுதிப்பாடு

D. ஆணை

74. சந்திப்பிழையற்ற தொடரைக் காண்க.

A. வாங்கிய புத்தகத்தைப் படித்தபின் திருப்பி கொடுத்தான்

B. வாங்கியப் புத்தகத்தைப் படித்தபின் திருப்பி கொடுத்தான்

C. வாங்கிய புத்தகத்தைப் படித்தபின் திருப்பிக் கொடுத்தான்

D. வாங்கியப் புத்தகத்தைப் படித்தபின் திருப்பிக் கொடுத்தான்

75. மரபுப்பிழையானதைக் காண்க

A. யானைக் கன்று

B. புலிப்பறழ்

C. மான்குட்டி

D. சிங்கக்குறளை

76. Cartoon – இவ் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்.

A. கேளிக்கைப்படம்

B. கருத்துப்படம்

C. பொழுதுபோக்குப் படம்

D. கார்ட்டூன் படம்

77. ஒலி-ஒளி வேறுபாடு அறிந்து சரியானதைத் தேர்வு செய்க.

வேழம் வேலம் வேளம்

A. மரம் சிறை யானை

B. யானை சிறை மரம்

C. சிறை மரம் யானை

D. யானை மரம் சிறை

78. ரு – என்ற குறியீடு தமிழில் கீழ்வரும் எண்ணைக் குறிக்கும்.

A. 5

B. 6

C. 7

D. 8

79. யா என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்.

A. யார்

B. சுட்டு

C. துற

D. கட்டு

80. வேர்ச்சொல்லைக் கண்டறிந்து பொருத்துக.

அ. மாண்டான் 1. மாண்

ஆ. மாண்பு 2. சுட்டு

இ. சுட்டான் 3. சுடு

ஈ. சுட்டினான் 4. மாள்

அ ஆ இ ஈ

A. 1 4 3 2

B. 4 1 3 2

C. 4 1 2 3

D. 1 4 2 3

81. செதுக்கினான் – இதன் வேர்ச்சொல்

A. செது

B. செதுக்

C. செதில்

D. செதுக்கு

82. “கேள்” என்பதன் வினையாலணையும் பெயர்.

A. கேள் – கேள்வன் – வினையாலணையும் பெயர்.

B. கேள் – கேள்வி – வினையாலணையும் பெயர்.

C. கேள் – கேட்டவன் – வினையாலணையும் பெயர்.

D. கேள் – கேட்பு – வினையாலணையும் பெயர்.

83. பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு.

A. வாழ் – வாழாள் – வினை முற்று

B. ஓடு – ஓட - பெயரெச்சம்

C. கருமை – கரிய – குறிப்பு வினையெச்சம்

D. பெருமை – பெரிய – தெரிநிலைப் பெயரெச்சம்

84. அகரவரிசைப்படுத்துக. வடிவு, வட்டம், வடக்கு வாட்டம்

A. வட்டம், வடக்கு, வாட்டம், வடிவு

B. வாட்டம், வட்டம், வடக்கு, வடிவு

C. வடக்கு, வடிவு, வட்டம், வாட்டம்

D. வட்டம், வடக்கு, வடிவு, வாட்டம்

85. சரியாக அமைந்த சொற்றொடரைக் காண்க.

A. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர்

B. கலங்காது காலம் கருதி இருப்பர் ஞாலம் கருதுபவர்

C. ஞாலம் கருதுபவர் கலங்காது காலம் கருதி இருப்பர்

D. கலங்காது ஞாலம் கருதுபவர் கருதி இருப்பர் காலம்

86. ஒழுங்கான சொற்றொடரைக் காண்க.

A. துன்பத்திற்கும் பிறப்பிடம் தீமைக்கும் சோம்பலே

B. துன்பத்திற்கும் தீமைக்கும் பிறப்பிடம் சோம்பலே

C. சோம்பலே துன்பத்திற்கும் பிறப்பிடம் தீமைக்கும் பிறப்பிடம்

D. துன்பத்திற்கும் தீமைக்கும் சோம்பலே பிறப்பிடம்

87. பெயர்ச்சொல்லின் வகை அறிக. தீயன்

A. பண்புப் பெயர்

B. பொருட்பெயர்

C. சிறப்புப்பெயர்

D. காலப்பெயர்

88. பெயர்ச்சொல்லின் வகை அறிக. வெற்பு

A. சினைப் பெயர்

B. பொருட்பெயர்

C. இடப்பெயர்

D. தொழிற்பெயர்

89. இலக்கணக் குறிப்பறிக.

A. வாராய் – ஏவல் வினைமுற்று

B. படித்தாய் – இறந்தகால வினைமுற்று

C. செய்தாள் – முன்னிலை இறந்தகால பெண்பால் வினைமுற்று

D. படித்திலீர் – தன்மைப் பன்மை வினைமுற்று

90. அகனமர்ந்து செய்யுள் உறையும் – இதில் “அகன்” என்பது.

A. போலி

B. ஆகுபெயர்

C. பண்புத்தொகை

D. வினைத்தொகை

91. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

காவலரிடம் திருடன் பிடிபட்டான்?

A. யார் யாரிடம் பிடிபட்டான்?

B. திருடன் பிடிபட்டான் யாரிடம்?

C. யாரிடம் திருடன் பிடிபட்டான்?

D. காவலரிடம் திருடன் பிடிபட்டானா?

92. மூன்று காண்டங்களை உடையது சீறாப்புராணம்.

A. எது மூன்று காண்டங்களை உடையது?

B. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது

C. மூன்று காண்டங்களை உடையதா சீறாப்புராணம்

D. மூன்று காண்டங்களை உடையது எது?

93. ஐயோ அதிக மழையால் வீடு இடிந்ததே!

இதன் செய்தி வாக்கியம்.

A. அதிக மழையால் வீடு இடிந்ததே

B. அதிக மழை வீட்டை இடிக்கும்

C. அதிக மழையால் வீடு இடிந்தது

D. அதிக மழையும் வீட்டை இடிக்கும்

94. கொடிது கொடிது தாலிகட்ட தட்சணை கேட்பது – இது எவ்வகைத் தொடர்.

A. செய்தித்தொடர்

B. கட்டளைத்தொடர்

C. வியங்கோள்வினைத்தொடர்

D. உணர்ச்சித்தொடர்

95. முருகன் ஊருக்குச் சென்றான் – இதன் எதிர்மறைத் தொடர்.

A. முருகன் ஊருக்குச் செல்லவில்லை

B. முருகன் ஊருக்குச் செல்லான்

C. முருகன் ஊருக்குச் சென்றிலன்

D. முருகன் ஊருக்குச் செல்லான் அல்லன்

96. ஆசிரியர் மறுப்புரை எழுதுவார் – இதன் பொருள் மாறா எதிர்மறை.

A. ஆசிரியர் மறுப்புரை எழுதார்

B. ஆசிரியர் மறுப்புரை எழுதமாட்டார்

C. ஆசிரியர் உடன்பாட்டுரை எழுதிலர்

D. ஆசிரியர் மறுப்புரை எழுதாமல் இரார்

97. வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று – இவ் உவமையால் விளக்கப்பெரும் பொருள்

A. அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது

B. அறிவற்றோர் வாழ்வில் உயரமுடியாது

C. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்காது

D. பண்பில்லான் பெற்ற பெருஞ்செல்வம்

98. நவில்தோறும் நூல்நயம் போலும் – இவ் உவமையால் உணர்த்தப்படும் பொருள்

A. பண்புடையர் பட்டுண்டு உலகு

B. பண்புடையர் தொடர்பு

C. செந்தமிழ் நூல்களைக் கற்றல்

D. ஒழுக்கமில்லாரை விட்டு விலகல்

99. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் – இதில் அமைந்துள்ள தொடை.

A. ஒரூஉத் தொடையும் கீழ்க்கதுவாய்த் தொடையும்

B. மேற்கதுவாய் இயைபுத்தொடையும் அடிமோனையும்

C. வருக்க எதுகையும் வருக்க மோனையும்

D. அடிஇயைபும் அடி எதுகையும்

100. முதல் மூன்று சீர்களில் எழுத்து ஒன்றி வருவது.

A. இணை

B. பொழிப்பு

C. ஒரூஉ

D. கூழை





விடைகள்

1.C 2.A 3.D 4.A 5.B 6.B 7.C 8.D 9.A 10.B 11.C 12.D13.D

14.C 15.B 16.A 17.D 18.A 19.A 20.D 21.C 22.B 23.D24.C 25.A 26.C

27.D 28.A 29.D 30.B 31.B 32.A 33.B 34.C 35.D 36.B37.A 38.A 39.B

40.A 41.D 42.C 43.A 44.B 45.C 46.A 47.B 48.A 49.B50.C 51.A 52.D

53.C 54.A 55.B 56.B 57.A 58.C 59.D 60.D 61.C 62.D63.B 64.D 65.B

66.D 67.C 68.C 69.A 70.B 71.A 72.A 73.D 74.C 75.C76.B 77.D 78.A

79.D 80.B 81.D 82.C 83.A 84.D 85.A 86.D 87.B 88.B89.A 90.A 91.C

92.D 93.C 94.D 95.C 96.D 97.A 98.B 99.A 100.D

No comments:

Post a Comment