29 Nov 2016

GK 29/11/1016
பொது அறிவு

1. அன்னிபெசண்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கம் துவங்கிய ஆண்டு? 1916

2. இந்தியாவின் மூன்றாம் குடியரசுத் தலைவர் யார்? ஷாகிர் உசேன்

3. ரௌலட் சட்டம் வெளியிடப்பட்டபோது மகாத்மா காந்தி எந்த இடத்தில் இருந்தார்? தமிழ்நாடு

4. குடியரசுத்தலைவர் யார் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்? முதன்மை நீதிபதியின்

5. தமிழ்நாட்டில் தனி நபர் சத்தியாகிரகத்திற்காக சிறை சென்ற முதல் வீரர் யார்? டி.எஸ்.எஸ்.ராஜன்

6. எந்த மாநிலத்திற்கென தனியாக அரசியலமைப்பு உள்ளது? ஜம்மு காஷ்மீர்

7. இந்திய சுதந்திரத்தின்போது தமிழக முதல்வராக இருந்தவர் யார்? ஓமந்தூர் ராமசாமி

8. மக்களவை சபாநாயகரை பதவிநீக்கம் செய்ய நடைமுறையில் உள்ள முறை? மக்களவையின் நம்பிக்கையின்மை வாக்கெடுப்பால்

9. ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட இடம் எது? வேதாரண்யம்

10. பஞ்சாயத்து ராஜ் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு? 1959

11. வேலு நாச்சியார் எந்த சீமையைச் சார்ந்தவர்? சிவகங்கை

12. இந்தியாவில் நிதி நெருக்கடி நிலைமை (Financial Emergency ) இதுவரை எத்தனை முறை அறிவிக்கப்பட்டுள்ளது? ஒருமுறையும் இல்லை

13. தேவதாசி முறையை ஒழிக்க போராடிய சமூகப் போராளி யார்? மூவலூர் இராமாமிர்தம்

14. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாரால் நியமிக்கப்படுகின்றனர்? ஜனாதிபதியால்

15. தாசிகளின் மோச வலை அல்லது மதி பெற்றமைனர் - என்ற நாவலை எழுதியவர் யார்? மூவலூர் இராமாமிர்தம்

16. இந்திய அரசு சட்டம் 1935 ன் படி மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு எது? 1937

17. தியாகராஜபாகவதருக்கு ஏழிசை மன்னர் எனப் பட்டமளித்தவர் யார்? தருமாம்மாள்

18. கிராம பஞ்சாயத்துக்களை குறிப்பிடும் அரசியலமைப்பு சரத்து எது? சரத்து 40

19. சாரதா மகளிர் சங்கம் துவங்கியவர்? சுபலட்சுமி

20. உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது? 65

21. இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழர் யார்? எஸ்.சுப்பிரமணியஐயர்

22. 1920- ஆம் ஆண்டு நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக செயல்பட்ட தமிழர் யார்? விஜயராகவாச்சாரி

23. சுதந்திரத்திற்கு முன்பு எத்தனை காங்கிரஸ் தேசியமாநாடுகள் சென்னையில் நடைபெற்றன? 7

24. தமிழ்நாட்டில் மிதவாதிகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? விஜயராகவாச்சாரி

25. தமிழ் நாட்டு திலகர் என அழைக்கப்பட்டவர் யார்? வ.உ.சி

No comments:

Post a Comment