26 Nov 2016

முதல் ஐந்தாண்டு திட்டம்1951 – 1956) ஹரார்டு டோமா மாதிரி திட்டம்
● முன்னுரிமை வேளாண்மை வளர்ச்சி (நீர்மின் திட்டம், நீர்ப்பாசன வசதிகளை பெருக்குதல்)
● திட்டம் வெற்றியடைந்தது சமுதாய முன்னேற்ற திட்டம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1956 – 1961) மஹலனோபிஸ் மாதிரி
● முன்னுரிமை, அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் வளர்ச்சி.
● பிலாய், துர்காபூர், ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
● பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது
மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்: (1961 – 1966)
● முன்னுரிமை பெரும் இயந்திரங்களை நம் நாட்டிலேயே உருவாக்குதல்.
● வேளாண்மையில் சுய தேவையைப் பூர்த்தி செய்தல்.
● பாகிஸ்தான், சீனாவுடன் போர் மற்றும் பருவக்காற்று பொய்த்ததால் வறட்சி காரணமாக தோல்வி அடைந்து.
● தானியங்களை பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கப் பட்டது – 1965.
● பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1965)
மூன்று ஓராண்டு திட்டங்கள் (1966 – 69)
● 1966 ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்தது
● விலைவாசி குறைந்தது
நான்காம் ஐந்தாண்டு திட்டம்: (1969 – 1974)
● தற்சார்பு அடைதல், ஏற்றுமதி அதிகரித்தல்
● நீதியுடன் கூடிய வளர்ச்சி
● விஜய நகரம், சேலம், விசாகப்பட்டினம் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: (1974 – 1979)
● வறுமையை ஒழித்தல்
● ஓராண்டு முன்னதாகவே 1978ல் ஜனதா அரசால் நிறுத்தப்பட்டது.
● 20 அம்சத் திட்டம் (1975) அறிமுகப்படுத்தப்பட்டது
● தேசிய குறைந்தபட்சத் தேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
● உருளல் திட்டம் (1978 – 80) Rolling Plan
● TRYSEM – 1979 தேசிய கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது
ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: (1980 – 1985)
● ஏழ்மையை போக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
● தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
● ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (1980)
ஏழாம் ஐந்தாண்டு திட்டம்: (1985 – 1990)
● வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்
● ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (1989)
● வேலைக்கு உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது
● ஓராண்டு திட்டங்கள் (1990 – 1992)
எட்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1992 – 1997)
● நோக்கம்:
1. மனித வள முன்னேற்றம்
2. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
● மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கை விட மிஞ்சியது
● தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: (1997 – 2002)
● சமுதாய நீதி மற்றும் சமத்துவத்துடன் ஆன வளர்ச்சி.
● மக்கள் பங்கு பெறும் அமைப்புகளை (மகளிர் சுய உதவிக் குழு, கூட்டுறவுச் சங்கங்கள்) முன்னேறச் செய்தல்
பத்தாவது ஐந்தாண்டு திட்டம்: (2002 – 2007)
● எட்டு சதவீதம் வளர்ச்சியை எட்டுதல்
● ஓராண்டுக்கு 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
● அனைவருக்கும் கல்வி அளித்தல்.
● புதுப்பிக்கப்பட்ட 20 அம்ச திட்டம் தொடங்கப்பட்டது.
பதினோறாவது ஐந்தாண்டு திட்டம்: (2007 – 2012)
● வேளாண்மை வளர்ச்சி விகிதத்தை 4% ஆக உயர்த்துதல்
● 70 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல்
● குழந்தை இறப்பு விகிதம் 1/1000 மாக குறைத்தல்
● காடுகள் சதவீதம் 5% ஆக உயர்த்ததுல்
● அனைவருக்கும் சுத்தமான குடிநீர் அளித்தல்.

No comments:

Post a Comment