TNPSC மாதிரி வினாத்தாள் - 1
1. பலசமயக் கடவுளரையும் போற்றி நூல்கள் பல இயற்றியவர்?
A. பாரதியார் B. சொக்க நாதப்புலவனார்
C. திரு.வி.க. D. சி.இலக்குவனார்
2. “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்று பாடியவர்.
A. தாயுமானவர் B. வள்ளலார்
C. குணங்குடிமஸ்தான் D. சுத்தானந்த பாரதியார்
3. “மனித நாகரிகத்தின் தொட்டில்” என்ற சிறப்புக்குரியது?
A. பாபிலோன் B. ஆப்பிரிக்கா
C. மஞ்சளாற்றுப்படுகை D. லெமூரியாக்கண்டம்
4. “மருந்து” என்ற தலைப்பின்கீழ்ச் செய்திகளைக் கூறும் நூல்?
A. திருக்குறள் B. திரிகடுகம்
C. ஏலாதி D. சிறுபஞ்சமூலம்
5. “குமரி” என்ற பெயர்கொண்ட மூலிகை ?
A. கண்டங்கத்திரி B. கற்றாழை
C. தூதுவளை D. ஆடுதொடாப்பாளை
6. ஏற்றுமதி இறக்குமதி பற்றிக் கூறும் பண்டைத் தமிழ் நூல் ?
A. மலைபடுகடாம் B. பட்டினப்பாலை
C. பழமொழி நானூறு D. சிலப்பதிகாரம்
7. “தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என்ற போற்றுதலுக்கு உரியவர் ?
A. முத்துலட்சுமி ரெட்டி B. பாலம்மாள்
C. இராமாமிர்தத்தம்மா D. அஞ்சலையம்மாள்
8. பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்துக.
I II
அ. தென்னாட்டு ஜான்சிராணி 1. தென்னாப்ரிக்கா
ஆ. வள்ளியம்மை 2. முத்துலட்சுமி
இ. இந்துப் பல்கலைக்கழகம் 3. அஞ்சலையம்மாள்
ஈ. இந்தியாவின் முதல் பெண்
மருத்துவர் 4. அன்னிபெசண்ட்
அ ஆ இ ஈ
A. 2 1 4 3
B. 2 4 3 2
C. 3 1 4 2
9. உலகம் உருண்டை வடிவமானது என்று கூறிய முதல் குரல் இடம் பெற்ற நூல்.
A. திருக்குறள் B. நெடுநல்வாடை
C. பழமொழிநானூறு D. மணிமேகலை
10. விண்ணில் தாமே ஒளிவிடக் கூடியவற்றுக்குத் தமிழர் வைத்த பெயர்.
A. கோள்மீன் B. நாள்மீன்
C. கிரகணம் D. ஒளிச்சிதறல்
11. தமிழ் ஓர் ஆட்சி மொழியாகத் திகழும் நாடு
1. இந்தியா
2. மலேசியா
3. சிங்கப்பூர்
4. இலங்கை
A. அனைத்தும் சரி B. 1, 2, 3, சரி
C. 2, 3, 4 சரி D. 2, 3, சரி
12. “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்று சொன்னவர் ?
A. முன்றுறையரையனார் B. கபிலர்
C. பரணர் D. ஔவையார்
13. பொருந்தாததைக் கண்டறி.
A. சிறந்த ஊர்களைக் குறிக்கும் பின்னொட்டு புரம்
B. கடற்கரை நகரம் பட்டினம்
C. கடற்கரைச் சிற்றூர் பாக்கம்
D. மருதத்திணையுடன் தொடர்புடையது குப்பம்.
14. பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
A. திருவண்ணாமலை B. வால்பாறை
C. கோவில்பட்டி D. கிருஷ்ணகிரி
15. இந்தியாவின் உயர்ந்த விருதாகிய “பாரத ரத்னா” என்ற விருதினைப் பெற்ற தமிழ்நாட்டவர் ?
A. அம்பேத்கர் B. காமராசர்
C. எம்.ஜி.ஆர் D. முத்துராமலிங்கத்தேவர்
16. சென்னை மாகாணத்திற்குத் “தமிழ்நாடு என்ற பெயர் மாற்றிச் சட்டம் இயற்றியவர் .
A. அண்ணாதுரை B. காமராசர்
C. கருணாநிதி D. பக்தவச்சலம்
17. பொருந்தாததைக் கண்டறி: ஜி.யூ.போப்
A. திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
B. திருவாசகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
C. Elementary Tamil Grammar என்ற நூலை எழுதியவர்
D. அயர்லாந்தைச் சேர்ந்தவர்
18. ஜோசப் பெஸ்கிக்கு “தைரியநாதர்” என்ற பட்டம் அளித்தவர்கள்.
A. மதுரைத் தமிழ்ச் சங்கத்தார்
B. கிழவன் சேதுபதி
C. சுப்பிரதீபக் கவிராயர்
D. தென்னிந்திய கிறித்தவச் சபையார்
19. பொருந்தாததைக் கண்டறிக
சென்னையில் இவர்கள் பெயரில் சிறந்த நூல்நிலையங்கள் அமைந்துள்ளன.
A. பெருஞ்சித்திரனார்
B. உ.வே.சா
C. தேவநேயப்பாவாணர்
D. மறைமலையடிகள்
20. இன்றுள்ள தமிழ்ப் பேரகராதியில் காணப்படும் பிழைகளைச் சுட்டிக்காட்டி நூல் எழுதியவர்.
A. மறைமலையடிகள்
B. திரு.வி.க.
C. பரிதிமாற்கலைஞர்
D. தேவநேயப்பாவாணர்
21. பொருத்துக
அ. என்வாழ்க்கைப்போர் 1. பெருஞ்சித்திரனார்
ஆ. தமிழ்ச்சிட்டு 2. இலக்குவனார்
இ. என்சரித்திரம் 3. தெ.பொ.மீ
ஈ. கானல்வரி 4. உ.வே.சா.
அ ஆ இ ஈ
A. 1 3 4 2
B. 2 3 4 1
C. 2 1 4 3
D. 4 1 2 3
22. தொடர்ச்சியாக 99 பூக்களின் பெயர்களைக் கூறும் நூல்.
A. பரிபாடல்
B. குறிஞ்சிப்பாட்டு
C. திருமுருகாற்றுப்படை
D. முல்லைப்பாட்டு
23. பரிதிமாற்கலைஞர்
அ. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலில் கூறியவர்.
ஆ. அங்கம் என்ற நாடக வகைக்கு மானவிஜயம் என்ற நாடகத்தை எழுதியவர்
இ. ரூபாவதியாகவும், கலாவதியாகவும் பெண்வேடம் இட்டு நடித்தவர்.
ஈ. சித்திரக்கவி என்ற நூலின் ஆசிரியர்.
A. அ, இ, சரி
B. அ, இ, தவறு
C. அ, ஆ, இ சரி
D. அனைத்தும் சரி
24. பொருந்தாததைக் காண்க.
A. கள்ளர் சரித்திரம் என்ற நூலை எழுதியவர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்
B. தமிழ்ப் பேரகராதியைப் பதிப்பித்தவர்
C. திராவிட சாஸ்திரி என்று அழைக்கப்படுவர் சத்தியமூர்த்தி
D. நாவலர் என்ற பட்டம் பெற்றவர்கள் சோமசுந்தர பாரதியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
25. கடல் பயணத்தை “முந்நீர் வழக்கம்” என்று குறிப்பிடும் நூல்.
A. தொல்காப்பியம்
B. குறுந்தொகை
C. பட்டினப்பாலை
D. நெடுநல்வாட
No comments:
Post a Comment