சூரிய குடும்பம் 1
சூரியனும், அதனைச் சுற்றிவரும் அமைத்துப் பொருள்களும் சேர்ந்து இருக்கும் அமைப்பு சூரியக்குடும்பம் ஆகும். நமது சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும், நிலவுகளும், சிறு கோள்களும் வால் மீன்களும் உள்ளன .இவைஅனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. புதன் ,வெள்ளி ,புவி ,செவ்வாய் ,வியாழன் , சனி யுரேனஸ் நெப்டியூன் மற்றும் புளூட்டோ என்பன ஒன்பது கோள்களாகும். சூரியன் மட்டுமே ஒளியை உமிழ்கிறது. நிலவு உள்ளிட்ட மற்ற அனைத்தும் சூரி ஒளியை எதிரொளிக்கின்றன.
கோள்களை அவற்றின் அமைப்பைக் கொண்டு பாறைக் கோள்கள் வாயுக் கோள்கள் என இருபிரிவுகளாகப் பிரிக்கலாம். புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய கோள்கள் சிறிய உருவத்துடன் பெருமளவு பாறைகளையும் சிறிதளவு வாயுக்களையும் கொண்டுள்ளன. எனவே இக்கோள்கள் யாவும் பாறைக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன. வியாழன், சனி,யூரேனஸ், நெப்ட்யூன் ஆகிய கோள்கள் பெரிய உருவத்துடன் பெருமளவு வாயுக்களையும் சிறிதளவு பாறைகளையும் கொண்டுள்ளன. எனவே இக்கோள்கள் யாவும் வாயுக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
கோள் ஒன்றினைச் சுற்றிவரும் சிறிய பொருளை நிலவு என்கிறோம். புதன் மற்றும் வெள்ளி கோள்களைத் தவிர மற்ற அனைத்துக் கோள்களுக்கும் நிலவுகள் உண்டு. நமது புவிக்கு ஒரு நிலவு இருக்கிறது.
சூரியனுக்கு மிக அருகில் உள்ளது புதன் என்ற கோளாகும். ஒன்பது கோள்களில் மிகச் சிறியது புதன் கோள் ஆகும். வியாழன் மற்றும் சனிக் கோள்கள் மிகப் பெரியவை. சூரியனுக்கு வெகு தொலைவில் புளூட்டோ உள்ளது.
கோள் ஒன்றிலிருந்து உடைந்து போன சிறு பகுதி சூரியனைச் சுற்றி வருகிறது. அதற்கு சிறு கோள் (Asteroid) என்று பெயர். திடநிலையில் உள்ள வாயுவால் சூழப்பட்ட திடப்பொருள் வால்மீன் (Comet)எனப்படும் .இதற்கு வால் போன்ற அமைப்பு உண்டு. வால்மீனும் சூரியனைச் சுற்றி வருகிறது.
கோள்கள்
புதன்
சூரியனுக்கு மிக அருகில் முதல் அமைவிடத்தில் காணப்படுவது புதன் கோளாகும். ஆகையால் இதன் பகல் நேர வெப்பநிலை 290 டிகிரி செல்சியஸ் வரை உயருகிறது. இந்த வெப்பநிலை புவியில் நிலவும் அதிபட்ச வெப்பநிலையை விட ஏறக்குறைய ஆறு மடங்கு அதிகமானது. அதுபோலவே இரவில் -170 0 செல்சியஸ் வரை வெப்பநிலை குறைகிறது. புவியைப் பாதுகாக்கும் காற்றுமண்டலம் போல ஒரு அமைப்பு இக்கோளில் இல்லாத காரணத்தினாலேயே பகலில் கிடைக்கும் வெப்பத்தைத் தன்னிடத்திலேயே தக்க வைத்துக்கொள்ள இக்கோளால் இயலவில்லை. சூரிய குடும்பத்திலேயே மிக விரைவாக சூரியனை வலம் வருவது புதன் ஒன்றே என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
வெள்ளி
புதன் கோளுக்கு அடுத்து சூரியனிடமிருந்து இரண்டாவது அமைவிடத்தில் காணப்படுவது வெள்ளிக் கோளாகும். இக்கோளில்அதிபட்சமாக 480 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை காணப்படுகிறது. சூரிய குடும்பத்திலேயே மிகமிக அதிக அளவு வெப்பநிலையைக் கொண்ட கோள் இதுவேயாகும். மேலும் நம் புவிக்கு அருகாமையில் அமைந்திருப்பதினால் கிழக்கு வானத்தில் விடியற்காலையில் வெள்ளியை உருக்கியது போன்ற பேரொளியுடன் இக்கோள் காட்சியளிக்கும். எனவேதான் இக்கோள் “விடிவெள்ளி” எனவும் அழைக்கப்படுகின்றது. அதுபோலவே அந்திவேளையில் மேற்கு வானத்தில் பேரொளியுடன் இக்கோள் காட்சியளிக்கும். அப்பொழுது இக்கோள் “மாலை நட்சத்திரம்” என்றும் அழைக்கப்படுகின்றது. சூரிய குடும்பத்தில் இக்கோள் மட்டுமே கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலுகின்றது.
புவி
புவி சூரியனிடமிருந்து மூன்றாவது இடத்தில் அமைந்துள்ளது. ஏனைய கோள்களுடன் ஒப்பிடும் போது புவிக்கோளம் சூரியனிடமிருந்து சரியான தொலைவில் அமைந்துள்ளது. ஆதலால் உயிரினங்கள் தோன்றி வளரத் தகுந்த வெப்பநிலை நம் புவியில் நிலவுகின்றது. புவியின் மொத்தப்பரப்பில் 29 சதவீதம் நிலமும் 71சதவீதம் நீரும் காணப்படுகிறது. உலகின் ஏழு கண்டங்களும் நான்கு பெருங்கடல்களும் இப்பரப்பில் தான் அமைந்துள்ளன .
ஏழு கண்டங்கள்
ஆசியா2. ஆப்பிரிக்கா
வட அமெரிக்கா4. தென் அமெரிக்கா
ஐரோப்பா6. அண்டார்டிக்கா
ஆஸ்திரேலியா
பெருங்கடல்கள்
பசிபிக் பெருங்கடல், 2.அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்4. ஆர்க்டிக் பெருங்கடல்
புவியைச் சுற்றிக் காற்று மண்டலம் ஒரு போர்வை போலஅமைந்துள்ளது. இக்காற்று மண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜனும், 21சதவீதம் ஆக்ஸிஜனும், 1 சதவீதம் கரியமிலவாயு உட்பட மற்ற வாயுக்களும் உள்ளன. இவற்றைத் தவிர நீராவியும் தூசுகளும் காற்று மண்டலத்தில் காணப்படுகின்றன. புவியில் நிலமும், நீரும், காற்றும் உகந்த வெப்பநிலையும் அமைந்திருப்பதினால் உயிரினங்கள் இங்கு உருவாகிப் பெருகுகின்றன. இதனால் புவிக்கு உயிர்க்கோளம் என்ற சிறப்புப் ப உண்டு
: சூரிய குடும்பம்
No comments:
Post a Comment