31 Dec 2016

BHIM App

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப் 'பீம்' : டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன்படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கு விக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அடுத்த கட்டமாக, 'பீம்' என்ற பெயரில், புதிய மொபைல் ஆப், பிரதமர், நரேந்திர மோடியால் நேற்று, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டில்லியில் நேற்று நடந்த, டிஜிட்டல் பரிவர்த்தனை விழாவில், இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலம், வங்கிக் கணக்குடன் இணைக்கப் பட்டுள்ள ஆதார் எண் அடிப்படையில், கைவிரல் ரேகையை பதிவு செய்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.அதைத் தவிர, 'இ - வாலட்' எனப்படும், மின்னணு முறையில், பணப் பரிமாற்றம் செய்யவும், இந்த புதிய, 'ஆப்'பை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஆப் பதிவிறக்கம் செய்து, நம் மொபைல் எண்ணை பதிவு செய்தால் போதும். நம் வங்கிக் கணக்கில் இருந்து, பணத்தை செலுத்துவதுடன், பணத்தையும் மிக சுலபமாக பெற முடியும்.

ஆதார் மூலமாக பரிவர்த்தனை செய்யக் கூடிய இந்த மொபைல் ஆப், என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பரிவர்த்தனை வாரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக பல்வேறு வங்கிகள் அறிமுகம் செய்துள்ள ஒருங்கிணைந்த பரிவர்த்தனை முறைகளுக்கும் பயன்படுத்தலாம்.

''சட்டமேதை அம்பேத்கரின் நினைவாக, இந்த ஆப்புக்கு, பீம் என்றுபெயரிட்டுள்ளது,'' என,
பிரதமர், நரேந்திர மோடி தெரிவித்தார்.இதன் அறிமுக விழாவில், டிஜிட்டல் பரிவர்த்த னையை ஊக்குவிக்கும் வகையில், போஸ்டர் கள், வாசகங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத் தவர்களுக்கு, பிரதமர் மோடி பரிசளித்தார். மேலும், மத்திய அரசால் சமீபத்தில் அறிவிக்கப் பட்ட, டிஜிட்டல் பரிவர்த் தனையை பயன் படுத்துவோருக்கு பரிசு அளிக்கும் திட்டத்தின் படி, முதல் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட் டோருக்குபரிசுகள் வழங்கப்பட்டன.

விழிப்புணர்வு பிரசாரம்

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், 100 நாட்களுக்கு, 100 நகரங்களில், விழிப்புணர்வு விழாக்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, அரசுக்கு, திட்டங் களுக்கான ஆலோசனைகளை வழங்கும், 'நிடி ஆயோக்' செய்து வருகிறது.

பீம் மொபைல் ஆப் அறிமுக விழாவில், நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் பேசுகையில், ''இன்னும் கொஞ்சம் காலம்தான்; இந்தியா டிஜிட்டல் மயமாகிவிடும். டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை மாறி வருகிறது. இதன் மூலம், ரொக்கப் பரிவர்த்தனை குறைவதால், ஊழல், லஞ்சம் போன்றவை இல்லாத சமூகமாக நாம் மாறி விடலாம்,'' என்றார்.

24th National Children's Science Congress

24வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு , டிசம்பர் 27 - 31 வரை பாரமதியில் ( புனே , மகாராஷ்டிரா ) நடைபெறுகிறது.
தமிழ் வினா

1.  சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர்

2.  ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்ற வருகுது”என்று பாடியவர் - நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.

3.  அகப்புறப் பாடல்களைக் கொண்ட நூல் ---பரிபாடல்

4.  அகநானூற்றில் 1,3 என ஒற்றைப் படை எண்களாக வருவது பாலைத் திணையைச் சார்ந்தவை.

5.  அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு

6.  ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டிப் பாடியவர் ----  கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

7.  திருக்குறளின் அறத்துப்பால்ää பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் --- வீரமாமுனிவர்

8.  பாவேந்தருக்கு  சாகித்ய அகாதெமிப் பரிசைப் பெற்றுத்தந்த நூல் பிசிராந்தையார் நாடகம்

9.  சொற்றொடர் நிலை என்று வழங்கப்படுவது -  அந்தாதி

10.  தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் --- நந்திக் கலம்பகம்

11.  உவமைக் கவிஞர் என்று பாராட்டப்பட்டவர் --- சுரதா

12.  பாஞ்சாலி கடதத்தில் உள்ள சருக்கத்தின் எண்ணிக்கை - ஐந்து

13.  சுந்தரர் தேவாரம் --- ஏழாம் திருமறை

14.  கடிகை முத்து புலவரின் மாணவர் --- உமறுப்புலவர்

15.  சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு ---- காதை

16.  நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் - தாராபாரதி

17.  வரதநஞ்சையப் பிள்ளை இயற்றிய குறவஞ்சி---தமிழரசி குறவஞ்சி

18.  உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைத்தண்டனையைப் பெற்றவர்  நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.

19.  அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை ---13 அடி முதல் 31 அடி வரை

20.  பொருட்பாலின் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை -எழுபது

21.  கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்  எனப்படும் நூல் - தேம்பாவணி

22.  ‘நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று முன்வந்து காப்பியம் படைத்தவர் -- இளங்கோவடிகள்.

23.  ‘ஸ்ரீ” சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த சுப்புரத்தினம் என்று பாரதியாரால் அறிமுகப்பட்டவர் --- பாரதிதாசன்

24.  சிற்றிலக்கியங்கள் 96 என்று கூறிப்பட்டியலிடும் நூல் - சதுரகராதி

25.  உலாவிற்குரிய பாவகை ---  கலிவெண்பா

26.  பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர் -  வாணிதாசன்

27.  சிலப்பதிகார உரையாசிரிகளுள் ஒன்று - அரும்பதவுரைக்காரர்

28.  தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப் பரிசை பெற்ற முதற்பாவலர்--  சுரதா

29.  கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு - தொண்ணூற்றாறு

30.  சிறிய திருவடி என்று அழைக்கப்படுபவர் --- அனுமன்

31.  திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் -- பெரிய வச்சான் பிள்ளை

32.  உள்ளுறை உவமத்தின் உவமிக்கப்படும் கருப்பொருள் இதுவாக அமையக் கூடாது. --- தெய்வம்

33.  ஒன்றே யென்னின் - உன்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் -- யுத்த காண்டம்.

34.  புறநானூற்றால் குறிப்பிடப்பட்ட துறைகள் --  65

35.  அகநானூறு மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை -180

36.  கபிலரை ‘வாய்மொழிப் கபிலர்” என்று போற்றியவர் ---  நக்கீரர்

37.  திருக்குறளின் பெருமை உணர்த்துவது --  திருவள்ளுவமாலை.

38.  சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் மூன்று

39.  கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் அஞ்சாதவன்

40.  வடமொழியில் பாரதம் பாடியவர் -----வியாசர்

41.  ‘பிரபந்தம்” என்னம் வடசொல் உணர்த்தும் பொருள்--- நன்கு கட்டப்பட்டது.

42.  செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் -- பாரதிதாசன்

43.  தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்று கவிஞர் அப்துல் ரகுமான்.

44.  ‘கிறிஸ்துவ கம்பர்” என்றழைக்கப்படுபவர் --- எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

45.  நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு அளித்துச் சிறப்பித்த விருது -பத்மபூஷண்

46.  நற்றிணையைத் தொகுப்பித்தவர்  -- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

47.  ‘தனயை” என்ற சொல்லின் பொருள் ---- மகள்

48.  தைரியநாத சுவாமி என்று அழைக்கப்படுவர் ---  வீரமாமுனிவர்

49.  திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை --- ஒன்பது

50.  இராமன் கொடுத்தாகச் சீதையிடம் அனுமன் காட்டியது --- கணையாழி

51.  தாம் இயற்றிய இராம கதைக்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்.

52.  வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகராதி

53.  ‘புலன்” என்னம் இலக்கிய வகை --- பள்ளு

54.  முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை  --  சிந்துப்பா

55.  பாரதிதாசனின் இயற்பெயர் -- சுப்புரத்தினம்

56.  உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்படுபவர் -- சுரதா

57.  ‘சின்னச் சீறா” என்ற நூலை எழுதியவர் -- பனு  அகமது மரைக்காயர்

58.  தமிழரசு குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் --  முருகன்

59.  இராமலிங்கனார்  எக்கலையில் வல்லவர் --- ஓவியக்கலை மற்றும் முத்தமிழிலும் வல்லவர்.

60.  ‘அஞ்சிலோதி” இதன் இலக்கணக் குறிப்பு -   அன்மொழித் தொகை

61.  “பராய்க்கடன்” என்றால் ---  வேண்டிக் கொள்ளுதல்

62.  திருக்குறள் என்பதில் குறள் என்பது --  ஆகுபெயர்

63.  பொறுமைக்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் கூறுவது ---  நிலம்.

64.  சிலப்பதிகாரம் பொருள் எழுதுக--- சிலம்பால் அதிகரித்த வரலாறு

65.  ஊர் சூழ்வரி என்பதில் வரி என்பது -- இசைப்பாடல்

66.  ‘மருகி” என்பதன் பொருள் ---- மருமகள்

67.  தேம்பாவணி எத்தனை காண்டங்களை உடையது --- மூன்று

68.  பாரதிதாசன் வெளியிட்ட இதழ் --- குயில்

69.  ‘திவ்விய கவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர் --- பிள்ளைப் பெருமாய் ஐயங்கார்.

70.  தமிழகத்தின் ‘வோர்ட்ஸ்வொர்த்” எனப் பாராட்டப்பட்டவர் -- வாணிதாசன்

71.  ‘தம்பிரான் தோழர்” என்று அழைக்கப்பட்டவர் -- சுந்தரர்

72.  தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன் -- முருகன்.

73.  புறநானூற்றின் திணைகள் பதினொன்று

74.  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று --  பரிபாடல்

75.  “சுந்தரன்” என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் --  அனுமன்

76.  வீரமாமுனிவரின் தாய்நாடு --- இத்தாலி

77.  இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் -- பாரதியார்
1. டிசம்பர் 2016-ல் Immunization incentives and information programme என்ற திட்டம், இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது? - ஹரியானா
2. இந்தியாவின் முதல் கார்பன் நடுநிலை மாவட்டமாக மாறவுள்ள மாவட்டம் எது? - மஜுலி
3. டிசம்பர் 2016-ல் 6வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு எந்த இந்திய நகரத்தில் நடைபெற்றது? - புது தில்லி
4. சிறு மற்றும் குறு தொழில்களுக்கு அதிகளவு கடனுதவி செய்தமைக்காக, சிறந்த வங்கி எனும் பெருமையை பெற்ற பொதுத்துறை வங்கி எது? - விஜயா வங்கி
5. இந்திய அரசினால் தகவல் தொழில்நுட்ப திறன் மையம் அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகம் எது? - எகிப்து நாட்டின் அல் அஷார் பல்கலைக்கழகம்
6. சர்வதேச ஊழலுக்கெதிரான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - டிசம்பர் 9
7. டிசம்பர் 2016-ல் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான வருடாந்திர கடற்படைப் பயிற்சி ................... - கொங்கன் 16 (Konkan 16)
8. டிசம்பர் 2016-ல் ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்ட, நைஜீரியாவின் சுற்றுச் சூழல் அமைச்சர் யார்? - அமினா முகமது
9. அறுவடைக்குப் பின் கொண்டாடப்படும் Thal Favang Kut திருவிழா, இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது? - மிசோரம்
10. 8 ஆண்டுகளாக பதவி வகித்த நியூசிலாந்தின் பிரதமர் .................... என்பவர், தனது பதவியை ராஜினாமா செய்தார். - ஜான் கே
11. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் சீக்கிய நீதிபதி யார்? - ஜெகதீஷ் சிங் கேஹர்
12. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்த, புதுமுக வேகப்பந்து வீச்சாளர் யார்? - விகும் சஞ்ஜெயா
13. சர்வதேச தொண்டர்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? - டிசம்பர் 5

பணமில்லா பரிவர்தனைகள் மற்றும் வங்கி தொடர்பானவை.

பணமில்லா பரிவர்தனைகள் மற்றும் வங்கி  தொடர்பானவை.

IMPS   ----  Immediate Payment Service
UPI   ----  Unified Payments Interface
NEFT   ---  National Electronic Funds Transfer
RTGS   ---  Real Time Gross Settlement
POS   ---  Point Of Sale
VPA  ---   Virtual Payment Address
AEPS  ---  Aadhar Enabled Payment System
USSD  ---  Unstructured Supplementary Service Data
MMID  ---   Mobile Money Identifier

Pradhan Mantri Sukanya Samriddhi Yojana (PMSSY)

Pradhan Mantri Sukanya Samriddhi Yojana (PMSSY)

Launched: 22 January 2015

Main Objective: Secure the future of girl child

Sukanya Samriddhi Yojana is an ambitious small deposit savings scheme for a girl child. Under the scheme, a saving account can be opened in the name of girl child and deposits can be made for 14 years. After the girl reach 18 years of age, she can withdraw 50% of the amount for marriage or higher study purposes.
After the girl completes 21 years of age, the maturity amount can be withdrawn including the interest at rates decided by Government every year.

The investments and returns are exempt from section 80C of Indian income tax act. The maximum investment of Rs. 1.5 Lakh per year can be made while minimum deposit is Rs. 1000/- per year.

In case of more than one girl child, parents can open another account on the different name but only for 2 girl child. Only exception is that the parents have twins and another girl child.

நாலடியார்

 நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.
இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.
திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) பொருட்பால் : 260 பாடல்கள் (26 அதிகாரஙள்) காமத்துப்பால் : 10 பாடல்கள் (1 அதிகாரம்) மொத்தம் : 400 

30 Dec 2016

தமிழ் நாட்டில் பெண்கள் நலத்திட்டங்கள் - துவங்கப்பட்ட வருடங்கள்

தமிழ் நாட்டில் பெண்கள் நலத்திட்டங்கள் - துவங்கப்பட்ட வருடங்கள்

தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்ட ஆண்டு - 1989

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் 1989

அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் - 1989

டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம்  - 1989

டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமணத் திட்டம் - 1975

அனைத்து மகளிர் காவல் நிலையம் - 1992

காவல் துறையில் பெண்களை நியமனம் செய்யும் திட்டம் - 1973

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்  - 1990

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992

பெண் கொடுமை சட்டம்  - 2002

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவான பெண் குழந்தைகள் பெயரில் 1,500 ரூபாய்க்கான வைப்புத் தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் 2001 ஆம் ஆண்டு இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் 22,200 ரூபாய் வைப்புத் தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா 15,200 ரூபாயும் வைப்பீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும். தற்போது இந்தத் தொகை முறையே 50,000 ரூபாய் என்றும், 25,000 ரூபாய் என்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 
மாண்பு மிகு முதல்வர் அவர்கள் செப்டம்பர் 2013 ல் திருமண நலத்திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.24 ஆயிரத்திலிருந்து, ரூ.72 ஆயிரமாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார்.

Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)

Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)

Launched: ‎28 August 2014

Main Objective: Financial inclusion and access to financial services for all households in the country.

Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) is a national mission to bring comprehensive financial inclusion of all the households in the country. Under the PMJDY, any individual above the age of 10 years and does not ave a bank account can open a bank account without depositing any money.

The scheme was to ensure the access to financial services such as banking / savings & deposit Accounts, remittance, credit, debit cards, insurance and pension in affordable manner. The scheme was mostly targeted to the people belonging to the Below Poverty Line but is beneficial to everyone who does not have a bank account.

Jan Dhan Yojana has seen a great success, about 21 Crore accounts have been opened in just about one and half year under the scheme. Out of the total 12.87 crore in rural area and 8.13 Crore accounts have been opened in urban areas. Despite of zero minimum balance, there is 33074.89 crore rupees balance in these accounts with 28.88% accounts opened with zero balance.

நமது தேசிய சின்னங்கள்

நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇
தேச தாய் - பாரதமாதா
தேசதந்தை - மகாத்மா காந்தி,
தேச மாமா - ஜவஹர்லால் நேரு,
தேச சேவகி - அன்னை தெரசா,
தேச சட்டமேதை - அம்பேத்கார்,
தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,
நாட்காட்டி - 1957 சக ஆண்டு,
நகரம் - சண்டிகார்,
உலோகம் - செம்பு,
உடை - குர்தா புடவை,
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத்,
தேச நிறம் - வெண்மை,
தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,
தேச பாடல் - வந்தே மாதரம்,
தேசிய கீதம் - ஜனகனமன,
தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை,
சிகரம் - கஞ்சன் ஜங்கா,
பீடபூமி - தக்கானம்,
பாலைவனம் - தார்,
கோயில் - சூரியனார்,
தேர் - பூரி ஜெகநாதர்,
எழுது பொருள் - பென்சில்,
வாகனம் - மிதிவண்டி,
கொடி - மூவர்ணக் கொடி,
விலங்கு - புலி,
மலர் - தாமரை,
விளையாட்டு - ஹாக்கி,
பழம் - மாம்பழம்,
உணவு - அரிசி,
பறவை - மயில்,
இசைக் கருவி - வீணை,
இசை - இந்துஸ்தானி,
ஓவியம் - எல்லோரா,
குகை - அஜந்தா,
மரம் - ஆலமரம்,
காய் - கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்,
மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி - கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி - யானை,
நீர் உயிரி - டால்பின்,
அச்சகம் - நாசிக்,
வங்கி - ரிசர்வ் வங்கி,
அரசியலமைப்பு சட்டபுத்தகம்,
கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

December 2016 : Current Affairs

நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016

1. டிசம்பர் 2016-ல் Immunization incentives and information programme  என்ற திட்டம், இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது? - ஹரியானா

2. இந்தியாவின் முதல் கார்பன் நடுநிலை மாவட்டமாக மாறவுள்ள மாவட்டம் எது? - மஜுலி

3. டிசம்பர் 2016-ல் 6வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு எந்த இந்திய நகரத்தில் நடைபெற்றது? - புது தில்லி

4. சிறு மற்றும் குறு தொழில்களுக்கு அதிகளவு கடனுதவி செய்தமைக்காக, சிறந்த வங்கி எனும் பெருமையை பெற்ற பொதுத்துறை வங்கி எது? - விஜயா வங்கி

5. இந்திய அரசினால் தகவல் தொழில்நுட்ப திறன் மையம் அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகம் எது? - எகிப்து நாட்டின் அல் அஷார் பல்கலைக்கழகம்

6. சர்வதேச ஊழலுக்கெதிரான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - டிசம்பர் 9

7. டிசம்பர் 2016-ல் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான வருடாந்திர கடற்படைப் பயிற்சி ................... - கொங்கன் 16 (Konkan 16)

8. டிசம்பர் 2016-ல் ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்ட, நைஜீரியாவின் சுற்றுச் சூழல் அமைச்சர் யார்? - அமினா முகமது

9. அறுவடைக்குப் பின் கொண்டாடப்படும் Thal Favang Kut  திருவிழா, இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது? - மிசோரம்

10. 8 ஆண்டுகளாக பதவி வகித்த நியூசிலாந்தின் பிரதமர் .................... என்பவர், தனது பதவியை ராஜினாமா செய்தார். - ஜான் கே

11. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் சீக்கிய நீதிபதி யார்? - ஜெகதீஷ் சிங் கேஹர்

12. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்த, புதுமுக வேகப்பந்து வீச்சாளர் யார்? - விகும் சஞ்ஜெயா

13. சர்வதேச தொண்டர்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? - டிசம்பர் 5

General Knowledge 30/12/16

பொது அறிவு

1. விஜய நகரை சேர்ந்த ராய வம்சத்துக்கு குருவாக இருந்தவர் யார்? - வித்யாரண்யர்

2. பாமினி அரசின் தலைநகர் எது? - குல்பர்கா

3. விஜயநகரப் பேரரசு எந்தப் போரினால் அழிந்தது - தலைக்கோட்டைப்போர்

4. பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் பாமன்ஷாவின் மற்றொரு பெயர் என்ன? - ஹாசன்கங்கு

5. விஜயநகரம் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை எவை? - விட்டலசாமி ஆலயம்

6. விஜயநகர பேரரசின் தலைநகரம் எது? - ஹம்பி

7. எந்த சுல்தானின் ஆட்சி காலத்தில் பாமினி பேரரசு உருவானது? - முகமது பின் துக்ளக்

8. பாமினி பேரரசின் உட்பகுப்பு முறைக்கு பெயர் - ஜாஹிர்

9. பாமினி அரசைத் தோற்றுவித்தவர் - அலாவுதீன் பாமன்ஷா

10. பாமினி அரசைத் தோற்றுவித்த ஆண்டு? - 1347

11. விஜய நகர பேரரசின் புகழ்பெற்ற அரசர் யார்? - கிருஷ்ண தேவராயர்

12. விஜயநகர பேரரசு எந்த நதிக்கரையின் தென்கரையில் தோற்றுவிக்கப்பட்டது? -  துங்கபத்ரா நதி

13. விஜயநகர மன்னரின் தமிழகப் படையெடுப்பு யார் தலைமையில் நடைபெற்றது? - குமாரகம்பனார்

14. விஜயநகர பேரரசை ஆட்சி செய்த முதல் வம்சம் எது? - சங்கம வம்சம்

15. விஜய நகர பேரரசை எத்தனை வம்சங்கள் ஆட்சி செய்தன? - 4

29 Dec 2016

சீனாவில் உலகிலேயே உயரமான பாலம் 29/12/2016

சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு சீனா பிரம்மாண்ட பாலங்களை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் Hangzhou மற்றும் Yunnan பகுதியில் உள்ள Ruili நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து நேரத்தை குறைக்கும் நோக்கில், சுமார் 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகிலேயே மிக உயரமான இடத்தில் பாலம் கட்டப்பட்டது. 565 மீட்டர் உயரமும் 1.34 கிமீ நீளமும் கொண்ட இந்த பாலம் இன்று முதல் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் 4 மணி நேரம் ஆக இருந்த போக்குவரத்து பயண தூரம், தற்போது ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்' கிரகத்திற்கு செல்லும் இந்திய ஆராய்ச்சி குழு! 29/12/2016

'மார்ஸ் ஆர்பிட்டர்' செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள், அடுத்த கட்டமாக அந்த கிரகத்தின் சுற்றுப்புற சூழலில் ஆராய்ச்சி செய்யவுள்ளனர். அமெரிக்காவின் யூடா மாகாணத்தில், செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்தின் மாதிரியில் முதல்முறையாக அனைத்திந்திய குழு ஒன்று ஆராய்ச்சி செய்ய செல்கின்றனர். ஜனவரி 28 முதல் பிப்ரவரி 12 வரை MDRS எனப்படும் அந்த செயற்கை சூழலில் பல ஆராய்ச்சிகளை செய்ய அனுமதி பெற்றுள்ளனர். 2001ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மார்ஸ் சொசைட்டி, இந்த ஆராய்ச்சி கூடத்தை நிர்வகித்து வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் இங்கு தங்கி செவ்வாய் கிரகத்தை பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். அங்கு செல்லும் இந்திய குழு, மனித உடம்பில் உள்ள பேக்டீரியா செவ்வாயில் எப்படி செயல்படுகிறது என்பது பற்றியும், அங்கு வீசும் தூசு புயல்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றனர்.
அகமும் புறமும் தழுவியது

1.நெடுநல்வாடை
         தலையாங்கானத்துப் போரில் வென்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது.

         வேறுபெயர்: புணையா ஓவியம்,சிற்பப்பாட்டு.
சிறுபாணாற்றுப் படை
          நல்லியகோடன் என்னும் குறுநில மன்னனை நத்தத்தனாரால் பாடப்பெற்றது.

        இதில் வரும் பாணன் ஏழு நரம்புகளை உடைய சிறிய யாழைப் பெற்றவன்.

“சிறுபடைக்கான சிறுபாணாற்றுப்படை” எனத்
தக்கையாப்பரணி கூறுகிறது.

“இன் குரல் சிறயாழ் இடவயின் தழீஇ”

4. பெரும்பாணாற்றுப்படை
      தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங்கண்ணனால்
பாடப்பெற்றது.

     இதன் வேறு பெயர் பாணாறு .இதில் வரும் பாணன் 21 நரம்புகளுடைய
பெரிய யாழை உடையவன்.

5. கூத்தராற்றுப்படை - பெருங்கவுசிகனார் பாடியது.
2.பொருநராற்றுப்படை
        கரிகாலச் சோழனைப் பற்றி முடத்தாமக்கண்ணியாரால் பாடப்பெற்றது.

       சோழ நாட்டின் பெருமை, வளமை, காவிரியின் பெருமை ஆகியவற்றின்
பெருமை பற்றிக் கூறுகிறது.

       உணவு உண்ணும் முன் காக்கைக்கு சோறிடுவது பற்றி இந்நூலில்
கூறப்பட்டுள்ளது.

      ஒருவரியில் பாண்டியனின் வேப்பம் பூ கூறப்பட்டு உள்ளதால் இதனை
புறப்பாட்டாகவும் கொள்ளலாம்.
புறப்பாடல்கள் விளக்கம்:
1.மதுரைக்காஞ்சி
      மதுரையை ஆண்ட நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை வலியுறுத்தும்
பொருட்டு மாங்குடி மருதனாரால் பாடப்பெற்றது.

வேறுபெயர்கள் :
முக்கூடல் தமிழ், தூடல் காஞ்சி, புறப்பாட்டு
“பெருகு வளமதுரைக் காஞ்சி” எனப் புகழ் பெற்றது.

ஆற்றுப்படை நூல்கள் விளக்கம்:
1.திருமுருகாற்றுப்படை

பாட்டுடைத்தலைவன் - முருகன்

வேறுபெயர்கள்:
முருகு - புலவர் ஆற்றுப்படை, கடவுள் பழம் பாட்டு.
சிறப்பு : இது பதினோறாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழில்
தோன்றிய நீண்ட பக்திப்பாடல்.
அகமும் புறமும் தழுவியது - 1
    நெடுநல்வாடை- நக்கீரர்

பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் - மதுரைக்காஞ்சி
பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு
அகப்பாடல்கள் - விளக்கம்
1.முல்லைப்பாட்டு
       பத்துப்பாட்டில் இதில் பாட்டுடைத் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இதன் வேறு பெயர்: நெஞ்சாற்றுப்படை

2.குறிஞ்சிப்பாட்டு
       ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழின் சுவையை அறிவுருத்தும்பொருட்டு
கபிலரால் பாடப்பட்டது.

இதன் வேறு பெயர்கள் :
பெருங்குறிஞ்சி. காப்பியப்பாட்டு. உளவியல் பாட்டு
3.பட்டினப் பாலை
       கரிகாலச் சோழனின் பெருமையை கடியலூர் உத்திரங்கண்ணனால்
பாடப்பெற்றது.

      இதன் வேறு பெயர் வஞ்சி நெடும் பாட்டு.
அகப்பாடல் - 3
ஆற்றுப்படை நூல்கள் - 5
புறப்பாடல் - 1
அகமும் புறமும் தழுவியது-1

அகப்பாடல் - 3 (இல்லறம், காதலன், காதலி)
    1. முல்லைப்பாட்டு -நப்பூதனார்
    2. குறிஞ்சிப்பாட்டு- கபிலர்
    3. பட்டினப்பாலை -கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

புறப்பாடல் - 1 (மன்னன், நாடு, கடவுள்)
    1. மதுரைக்காஞ்சி -மாங்குடி மருதனார்

ஆற்றுப்படை நூல்கள் - 5
   1. திருமுருகாற்றுப்படை- நக்கீரர்
   2.பொருநராற்றுப்படை -முடத்தாமக்கண்ணியார்
   3. சிறுபாணாற்றுப்படை- நல்லூர் நத்தத்தனார்.
   4. பெரும்பாணாற்றுப்படை- உருத்திரங்கண்ணனார்.
   5.கூத்தராற்றுப்படை(மலைபடுகடாம்)- பெருங்கவுசிகனார்.
சீனாவில் உலகிலேயே நீளமான புல்லட் ரயில் வழித்தடம் (2,252 கி.மீ.) செயல்பாட்டுக்கு வந்தது.

சீனாவில் வளமிக்க கிழக்கு கடற்கரைப் பகுதியிலுள்ள ஷாங்காய், வளர்ச்சி குறைந்த தென்மேற்குப் பகுதியிலுள்ள கன்மிங் ஆகிய நகரங்களை இணைக்கும் 2,252 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடம், ஷிஜியாங், ஜியாங்ஷி, ஹுனான், குவாங்ஷு, யுனான் ஆகிய 5 மாகாணங்கள் வழியாகச் செல்கிறது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 330 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

ஏற்கெனவே பெய்ஜிங்-குவாங்ஷு இடையே 2,298 கி.மீ. தொலைவு கொண்ட வழித்தடம், கடந்த 2012-ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது.

இராணுவ கூட்டுப்பயிற்சிகள்

இராணுவ கூட்டுப்பயிற்சிகள்

1. 14வது இந்தியா மற்றும் பிரான்ஸ் (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - VARUNA

2. இந்தியா மற்றும் இந்தோனேசியா (கடற்படை) ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சியின் பெயர் என்ன ? - CORPAT (Coordinated Patrol )

3. இந்தியா மற்றும் பிரிட்டன் (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - AJEYA WARRIOR

4. அமெரிக்கா மற்றும் மலேசியா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - CARAT - 21 ( Coordinated Afloat Readiness and Training  )

5. இந்தியா மற்றும் ஜப்பான் (கடலோர காவல் படைகள்) 2016 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - Sahyog - Kaijin

6. அமெரிக்கா மற்றும்10 NATO உறுப்பு நாடுகள் (விமானப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - SWIF RESPONSET

7. இந்தியா மற்றும் பங்களாதேஷ் (தரைப்படை ) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - SAMPRITI

8. இந்தியா மற்றும் ஓமன் (கடற்படை) 2016 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - NASEEM - AL - BAHR

9. இந்தியா மற்றும் சிங்கப்பூர் (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - SIMBEX

10. இந்தியா மற்றும் சீனா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - HAND IN HAND

11. இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - MALABAR

12. இந்தியா மற்றும் பிரிட்டன் (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - KONKAN

13. இந்தியா மற்றும் ரஷ்யா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - INDRA NAVY

14. 3வது இந்தியா மற்றும் இலங்கை (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - MITHRA SAKTHI

15. இந்தியா மற்றும் பிரிட்டன் (விமானப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - INDRA DHANUSH

16. இந்தியா மற்றும் அமெரிக்கா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - YUDH ABHYAS

இலக்கணம்

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-
1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்

1. எழுத்து இலக்கணம்:-
🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து

1. முதல் எழுத்து வகைகள் - 2  (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)

1. உயர் எழுத்துக்கள் - 12
 🐓வகைகள் - 2
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

2. மெய்யெழுத்து - 18
🐓 வகைகள் - 3
🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)

2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்

2.சொல் இலக்கணம்:-
🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ  பொருள் தந்தால் அது - சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்
🐿 பகாபதம் வகைகள் - 4
1. பெயர் பகாப்பதம்
2. வினைப் பகாப்பதம்
3. இடைப் பகாப்பதம்
4. உரிப் பகாப்பதம்

2. பகுபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
1. பொருள் பெயர்ப் பகுபதம்
2. இடப் பெயர்ப் பகுபதம்
3. காலப் பெயர்ப் பகுபதம்
4. சினைப் பெயர்ப் பகுபதம்
5. பண்புப் பெயர்ப் பகுபதம்
6. தொழிற் பெயர்ப் பகுபதம்
🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
🐿 பகுபதம் உறுப்புகள் - 6
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம்
🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
🐿 வினை இடைநிலை வகைகள் - 3
1. இறந்த கால இடைநிலை
2. நிகழ்கால இடைநிலை
3. எதிர்கால இடைநிலை

3.பொருள் இலக்கணம்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
(1) அகப்பொருள்:-
📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்

1. முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)

2. கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள்  - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)

3. உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
📚 முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்

3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.

5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்

7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.

9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.

11. கைக்கிளை - ஒருதலை  ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு

4. யாப்பிலகணம்:-
📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை
1. எழுத்து:-
📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்

2. அசை:-
📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)

3. சீர்:-
📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
📚 சீர்கள் எண்ணிக்கை - 30
1. மாச்சீர் - 2
2. விளச்சீர் - 2
3. காய்ச்சீர் - 4
4. கனிச்சீர் - 4
5. பூச்சீர் - 8
6. நிழற்சீர் - 8
7. ஓரசைச்சீர் - 2

4. தளை:-
📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
📚 தளை வகைகள் - 4
1. ஆசியத்தளை
2. வெண்டளை
3. கலித்தளை
4. வஞ்சித்தளை

5. அடி:-
📚 அடி வகைகள் - 5
1. குறளடி - இரண்டு சீர்கள்
2. சிந்தடி - மூன்று சீர்கள்
3. அளவடி - நான்கு சீர்கள்
4. நெடிலடி - ஐந்து சீர்கள்
5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்

6. தொடை:-
📚 தொடை வகைகள் - 5
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4. இயைபு தொடை
5. அளபெடைத் தொடை

5. அணி இலக்கணம்:-
📚 அணி என்பதன் பொருள் - அழகு
📚 அணிகள்  வகைகள் - 2
1. சொல்லணி
2. பொருளணி
📚 சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
📚 பொருளணி வருபவை - உவமை, உருவகம்
அணிகள் பின்வருமாறு:-
📚 இல்பொருள் உவமையணி
📚 ஏகதேச உருவக அணி
📚 பிறிது மொழிதல் அணி
📚 வேற்றுமை அணி
📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
📚 இரட்டுற மொழிதலணி
📚 சொற்பொருள் பின்வருநிலையணி
📚 தற்குறிப்பேற்ற அணி
📚 நிரல்நிறை அணி

டிசம்பர் 29-ஆம் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

விள‌க்க‌ம்:

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் என்ப‌து புவியின் அனைத்து ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழ்நிலை முறைக‌ளில் வாழும் உயிரின‌ங்க‌ள் ஆகும். இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌து. இந்த‌ உயிரின‌ங்க‌ளின் த‌ற்போதைய‌ நிலைக‌ளை அள‌விட‌வும், அவைக‌ளின் பெருக்க‌த்தையும் ம‌திப்பிடுகிற‌து.

எத‌ற்காக‌ இந்த‌ உயிரின‌ங்க‌ளை பாதுகாக்க‌ வேண்டும்?.

நாம் உண்ணும் உண‌வில் 80 ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கில் வாழும் தாவ‌ர‌ங்க‌ளையும், வில‌ங்குக‌ளையும் சார்ந்து தான் இருக்கின்ற‌ன‌.இப்போது உள்ள‌ வாழ்க்கைமுறையில் நோயில்லாம‌ல் வாழ்வ‌து என்ப‌து நினைத்து பார்க்க‌ முடியாத‌ ஒன்று, இந்த‌ நோய்களின் தாக்க‌த்தில் இருந்து ந‌ம்மை காக்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தும் ம‌ருந்துக‌ளில் முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌து இந்த‌ உயிரின‌ங்க‌ளில் இருந்து பெற‌ப்ப‌டும் பொருட்க‌ள் தான்.இருப்பிட‌ங்க‌ள் ம‌ற்றும் ஆடைக‌ள் உருவாக்குவ‌த‌ற்கும் தாவ‌ர‌ங்க‌ள் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து.

இதையெல்லாம் நினைவூட்டவும், அதற்குரிய முக்கியத்துவத்தை உணர்த்தவுமே இத்தினம்.

திரைக்கவித் திலகம் கவிஞர் மருதகாசி

ஆசிரியர் குறிப்பு:

✧ பிறப்பு : பிப்ரவரி 13, 1920.

✧ ஊர் : மேலக்குடிகாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

✧ பெற்றோர் : அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள்.

✧ மனைவி : தனக்கோடி அம்மாள்.

✧ ஆசிரியர் : ராசகோபால ஐயர்.

✧ இறப்பு : நவம்பர் 29, 1989.

கல்வி:

✧ உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார் பின்பு, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார்.

திருமண வாழ்க்கை:

✧ 1940 ஆம் ஆண்டில் திருமணமானது.

✧ மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளார்கள்.

பரிசும் பாராட்டுக்களும்:

✧ துணைவன் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார்.

✧ மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடல் தமிழக அரசின் பரிசு பெற்றது.

திரைப்பயணம்:

✧ எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர்.

✧ சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

✧ கல்லூரி படிப்பிற்குப் பிறகு தேவி நாடக சபையின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார்.

✧ கருணாநிதி எழுதிய மந்திரிகுமாரி என்ற நாடகத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.

பாடல்கள் நாட்டுடமை:

✧ தமிழக அரசு மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும் மே,2007-இல் அரசுடைமை ஆக்கியது.

நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்:

✧ 1949-இல் சேலம் மாடர்ன் தியேட்டரின் மாயாவதி என்ற படத்திற்கு

  பெண் எனும் மாயப் பேயாம் .... பொய் மாதரை என் மனம் நாடுமோ .... என்று தொடங்கும் பாடலே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.

🎵 ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
  என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

🎵 நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக -அது
  நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக

🎵 மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
  வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு

🎵 கடவுள் என்னும் முதலாளி
  கண்டெடுத்த தொழிலாளி
  விவசாயி .... விவசாயி ....

🎵 மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே

🎵 வாராய் ..... நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!

🎵 சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா ..... (நீலமலைத் திருடன்)

🎵 சிரிப்பு ..... இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு (ராஜா ராணி)

🎵 முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல (உத்தம புத்திரன்)

🎵 காவியமா? நெஞ்சின் ஓவியமா? (பாவை விளக்கு)

இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் பயோடீசல் பேருந்து 27/12/2016

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பாக முற்று முழுதாக பயோடீசலில் இயங்கும் 25 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேற்படி போக்குவரத்து கழகத்தின் நிர்வாக அதிகாரி ராஜேந்திர குமார் கட்டாரியா, இந்த பயோடீசல் பேருந்துகள் மூலம், சுற்றுச்சூழல் மாசடைவது பெருமளவு குறையும் என்றும், உள்ளூர் தொழிலை மேம்படுத்த இது சரியான வழியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். முன்னதாக, கடந்த வருடம் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 பேருந்துகளில் 20 % பயோடீசலும், 80% சாதாரண டீசலும் பயன்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கிடைத்த வெற்றியை அடுத்தே முற்று முழுவதுமாக பயோடீசலில் இயங்கும் பேருந்துகளை அம்மாநில அரசு தற்போது அறிமுகப்படுத்தவுள்ளது.

அக்னி 5 ஏவுகணை : இறுதிக் கட்ட சோதனை வெற்றி 26/12/2016

ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையின் சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது. இவ்வெற்றிக்குக் கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்தியாவின் அடுத்த அக்னி-6 ஏவுகணையைக் கட்டமைக்கும் பணியானது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்துடன், நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்தும் ஏவும் வகையில் கட்டமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான தீனாநாத் காலமானார் 26/12/2016


தேசிய சின்னமான அசோகச் சக்கரத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்றிருந்த தீனாநாத் பார்கவா(89) காலமானார். சுதந்திரத்துக்கு பிறகு, கைகளால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை அலங்கரிக்க ஓவியர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த தீனாநாத் பார்கவா, தேசிய சின்னத்தை வடிவமைத்த குழுவிலும் முக்கிய அங்கம் வகித்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட பார்கவா, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை கவர்னராக நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் விரால் வி ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

துணை கவர்னராக இருந்த உர்ஜித் படேல் கவர்னராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து துணை கவர்னர் பதவி காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

துணை கவர்னராக நியமனம் செய்யப்பட்டாலும் எந்த பிரிவினை கவனித்துக்கொள்வார் என்பது குறித்த தகவலை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் நிர்வாகவியல் கல்லூரியில் 2008-ம் ஆண்டு முதல் பேராசிரியராக இருக்கிறார். வங்கி விதிமுறைகள், கார்ப்பரேட் பைனான்ஸ், கடன் வழங்குவதில் உள்ள ரிஸ்க் உள்ளிட்ட பிரிவுகளில் ஆர்வம் உடையவர்.

மும்பை ஐஐடியில் கணிப்பொறி அறிவியல் படித்தவர். ஸ்டெர்ன் நிர்வாகவியல் கல்லூரியில் நிதித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். லண்டன் பிஸினஸ் ஸ்கூலில் 2008-ம் ஆண்டு வரை பணியாற்றியவர்.

தற்போது எஸ்.எஸ்.முந்திரா, என்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ஆர்.காந்தி ஆகியோர் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருக்கின்றனர்.

’ரகுராம் ராஜனை ரோல் மாடல்’

ஐஐடி பாம்பேயின் முன்னாள் மாணவரான ஆச்சார்யா முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனுடன் இணைந்து நிறைய ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஒருமுறை இவர் ரகுராம் ராஜன் பற்றி குறிப்பிடும்போது, “ரகுராம் ராஜனை எனது ரோல் மாடலாக எடுத்துக் கொண்டால், அவரது திறமையில் 5% அல்லது 10% என்னால் வெற்றிகரமாக வெளிப்படுத்த முடியுமென்றால் நான் ‘ஏழைகளின் ரகுராம் ராஜன்’ என்று தேர்வேன்” என்றார்.

இவரும் ரகுராம் ராஜன் போலவே மத்திய ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை ஆதரிப்பவர்.
ஆந்திரா மாநில விஜயவாடாவில் 5வது சர்வதேச குச்சிபுடி நடன மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு 6117 நடன கலைஞர்கள் கலந்து கொண்ட Jayamu Jayamu என்ற நாட்டியம் நடைபெற்றுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

28 Dec 2016

DAMaN ( Durgama Anchalare Malaria Nirakaran )

மலேரியா நோயை கட்டுப்படுத்த ஒடிஷா மாநில அரசு " தமன் " திட்டத்தை துவக்கியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

2வது இடம் --  ஜப்பான்  ;  3வது இடம்  --  இந்தியா
Atal - Amrit Abhiyan

அஸ்ஸாம் மாநில முதல்வர் , ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு கீழ் உள்ள மக்களுக்காக  " அடல் அம்ருத் அபியான் " என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

K K பிர்லா பவுண்டேசன் அமைப்பு வழங்கும் 26வது பீகாரி புரஷ்கார் விருது , Yeh Ek Dunia என்ற ஹிந்தி புத்தகத்தை எழுதிய ராஜஸ்தான் மாநில எழுத்தாளர் டாக்டர். சத்யா நாராயண் அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FC-31 Gyrfalcon

சீனா,  5ம் தலைமுறை இரட்டை இன்ஜின் போர் விமானம் FC - 31 Gyrfalconஐ வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

Hafnium carbide (HfC) & Tantalum carbide (TaC)

மேற்கண்ட இரண்டும் உலகின் மிக அதிவெப்பம்  தாங்கும் உலோகங்கள் என பிரிட்டனின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Hafnium carbide (HfC) 3958 ℃ மற்றும் Tantalum carbide (TaC) 3768 ℃ வரை வெப்பத்தை தாங்கும் சக்தியுடையவை என கண்டறிந்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக வைரல் வி ஆச்சார்யா நியமனம்

Google Lunar Xprize

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான  கூகுள், தனியார் நிறுவனங்களுக்காக , நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி, உயர்தரமான வீடியோ, புகைப்படங்களை பூமிக்கு அனுப்பும்  "  லுானார் எக்ஸ்பிரைஸ் "  போட்டியை அறிவித்துள்ளது.

இந்த போட்டியில், 30 மில்லியன் டாலர் ( 200 கோடி ரூபாய் ) பரிசு வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில், இந்தியாவை சேர்ந்த, 'டீம்இண்டஸ்' எனப்படும், தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் பங்கேற்கிறது.

இதற்காக, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன், டீம்இண்டஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, இஸ்ரோவின், பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை பயன்படுத்தி, நிலவுக்கு விண்கலம் அனுப்பப்பட உள்ளது.

Windmill Energy

காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தை பிடித்து உள்ளது.

கடந்த 2½ ஆண்டுகளில் காற்றாலை மூலம் 7.04 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் 25,088 மெகா வாட் அளவு  காற்றாலை மின் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இது உலகளவில் 5.8% ஆகும்.  சீனா , அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.

.
[ இதைப்போல சூரியசக்தி மின்தகடுகள் மூலமாக 5.8 ஜிகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் 31-ந் தேதிப்படி நாட்டில் 8,727.62 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியசக்தி மின் உற்பத்திக்கூடங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. ]
கேரளாவில், முதன் முறையாக, ( சோலார் ) சூரிய மின்சக்தி மூலம் இயங்கும், படகுச் சேவை,     கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் இருந்து, கொச்சிக்கு, 180 கி.மீ., தொலைவிற்கு, ஜனவரி, 12ல் துவங்க உள்ளது.

ஜப்பான் மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து ,  உலகின் கார்பன் டை ஆக்சைடு அளவை கண்காணிக்க , சீனா  Tansat என்ற சாட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

முதன்முறையாக கனடா நாட்டின் ரூபாய் நோட்டுகளில் பெண் ஒருவரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

அவர் வயோலா டெஸ்மண்ட் ( Viola Desmond )  என்ற  கருப்பின  சமூக உரிமைகள் இயக்கத்தின் தலைவர். (  Black Civil Rights Leader )

ராஞ்சிக்கு ( ஜார்கண்ட் ) அடுத்து பெங்களூருவில் சிறப்பான வசதிகளை கொண்ட பட்டு வளர்ப்பு மையத்தை ( centre of excellence for sericulture) மத்திய அரசு அமைத்துள்ளது.
2017 குடியரசு தின விழா அணிவகுப்பில் ,  முதன்முறையாக  தேசிய பாதுகாப்பு படையை ( National Security Guard - NSG ) சேர்ந்த கருப்பு பூனை படை கமாண்டோ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

செய்தி துளிகள்

01) டச்சஸ் வங்கி ( Deutsche Bank ) இந்தியாவில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு ஆறுமாதம் குழந்தை வளர்ப்பு விடுமுறை (childcare leave) வழங்கியுள்ளது.

02) புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க தலா ரூ.3.54 மற்றும் ரூ.3.09 செலவு ஆவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

03) Google Toilet Locator - டெல்லி மற்றும் ம.பி. மாநிலங்களில், அருகே  உள்ள பொது கழிப்பிடங்களை அறிந்து கொள்ள உதவும் அலைபேசி செயலி.

04) வடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக மிசோரம் மாநிலத்தின் Aizawl நகரில் இலவச WiFi வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

05) Cash@Home  ---  மின்னணு வணிக நிறுவனமான ஸ்னாப் டீல் தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கு சென்று ரூபாய்2000 வழங்கும் திட்டத்தை ( ரூ.1 கட்டணத்தில் ) அறிமுகம் செய்துள்ளது.

06) ITBP எனப்படும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை , முதன்முறையாக தங்கள் பதுகாப்பு பணியின் உதவிக்காக இமயமலை மற்றும் திபெத் பகுதிகளில் வாழும் Yak எனப்படும் பனிமலை மாடுகளை பயன்படுத்த உள்ளது.

வனஜீவன் திட்டம் ( Vanjeevan Programme )

மத்திய பழங்குடியினர் நலத்துறை , தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்ட முகமை ஆகியன இணைந்து அஸ்ஸாம், தெலுங்கானா, ம.பி. , குஜராத், ராஜஸ்தான், ஒடியா ஆகிய மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வழும் பழங்குடியின மக்களின்  வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்ககூடிய " வனஜீவன் " எனும் வளமையத்தை ஒடியாவின்  புவனேஷ்வரில் ஏற்படுத்தியுள்ளன.

River Water and Air Quality Monitoring (WAQM) Systems

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ஆற்றுநீர் மற்றும் காற்றின் தரத்தை கண்காணிக்கும் அமைப்பை [  River Water and Air Quality Monitoring (WAQM) Systems ] ஏற்படுத்த INTEL நிறுவனத்துடன்   ஒப்பந்தம் செய்துள்ளது.

Laureates and Leaders For Children Summit - 2016 .

டிசம்பர் 10 & 11ல் ராஷ்டிரபதி பவனில் , குழந்தைகளுக்கான Laureates and Leaders மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்  -- நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி

INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL – 2016

இந்தியா, சர்வதேச அறிவியல் கண்காட்சி புதுடெல்லியில் டிசம்பர் 07 - 11 வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பொருள் இலக்கணம்

பொருள் இலக்கணம் பற்றிய சில தகவல்கள்:-

📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்

(1) அகப்பொருள்:-

📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்

1. முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)

2. கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள்  - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)

3. உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
📚 முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்

3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.

5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்

7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.

9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.

11. கைக்கிளை - ஒருதலை  ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு

Venues Of Upcoming Important Sports Events

___________________________
Summer Olympics
2012 – London, UK.
2016 – Rio de Janeiro, Brazil.
2020 – Tokyo, Japan.
____________________________________
Winter Olympics
2014 – Sochi, Russia.
2018 – Pyeongchang, South Korea.
2022 – Beijing, China.
_____________________________________
Commonwealth Games
2010 – New Delhi, India.
2014 – Glasgow, Scotland, U.K.
2018 – Gold Coast, Queensland, Australia.
2022- Durban, South Africa.
______________________________________
Asian Games
2014 – Incheon, South Korea.
2018 – Jakarta, Indonesia.
2022- Hangzhou, China.
______________________________________
Hockey World Cup
2010 – New Delhi, India (Winner- Australia).
2014 – The Hague, Netherlands (Winner- Australia).
2018 – New Delhi, India.
_______________________________________
Women Hockey World Cup
2010 – Argentina (Winner- Argentina).
2014 – The Hague, Netherlands (Winner- Netherlands).
2018 – London, England.
________________________________________
FIFA World Cup
2010 – South Africa (Winner- Spain).
2014 – Brazil (Winner- Germany).
2018 – Russia2022 – Qatar.
_________________________________________
Women Football World Cup
2011 – Germany (Winner – Japan).
2015 – Canada (Winner – United States).
2019 – France.
_________________________________________
ICC Cricket World Cup
2011 – India, Bangladesh & Sri Lanka ( Winner- India).
2015 – Australia and New Zealand (Winner – Australia).
2019 – England.
2023 – India.
_________________________________________
Women Cricket World Cup
2013 – India (Winner- Australia).
2017 – England.
2021 – New Zealand.
_________________________________________
ICC World T-20 World Cup
2014 – Bangladesh (Winner- Sri Lanka).
2016 – India (Winner – West Indies).
2018 – Australia.
_________________________________________
Women ICC World T-20 World Cup
2014 – Bangladesh (Winner- Australia).
2016 – India (Winner – West Indies).
2018 – West Indies.
_________________________________________
ICC World Test Championship
2017 (1st edition) – England.
2021 – India.

இந்திய அரசியலமைப்பு : ( Notable Points )

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்:
(Constitutional Bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art.
1. தேர்தல் ஆணையம் Art.324
2. மத்திய தேர்வாணையம் Art.315-323
3. மாநில தேர்வாணையம் Art.315-323
4. நிதிக்குழு Art.280
5. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய
ஆணையம் Art.338
6. பழங்குடியினருக்கான தேசிய
ஆணையம் Art.338-A
7. மொழிச் சிறுபான்மையினருக்கான
சிறப்பு அலுவலர் Art.350-B
8. தலைமை தணிக்கை அதிகாரி (CAG)
Art.148
9. அட்டர்னி ஜெனரல் Art.76
10. அட்வகேட் ஜெனரல் Art.165
################################

அரசியலமைப்பு சாராத அமைப்புகள்
( Non- Constitutional Bodies)
அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1. திட்டக்குழு March 1950
2. தேசிய வளர்ச்சிக் குழு August
1952
3. தேசிய மனித உரிமை ஆணையம் 1993
4. மாநில மனித உரிமை ஆணையம் 1993
5. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
6. மத்திய தகவல் ஆணையம் 2005
7. மாநில தகவல் ஆணையம் 2005
###############################

மத்தியிலும் மாநிலத்திலும்
Art.52 to 151 மத்திய அரசாங்கம்
Art.52 to 237 மாநில அரசாங்கம்
Art.32 உச்சநீதிமன்றத்தின்
நீதிப்பேராணை
Art.226 உயர்நீதிமன்றத்தின்
நீதிப்பேராணை
Art.74
அமைச்சரவை ஆலோசனைப்படி குடியரசு
தலைவர் செயல்படுதல்
Art.163
அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர்
செயல்படுதல்
Art.78 பிரதமரின் பணிகள்
Art.167 முதல்வரின் பணிகள்
Art.72 குடியரசுத் தலைவரின்
மன்னிப்பளிக்கும் அதிகாரம்
Art.161 ஆளுநரின் மன்னிப்பளிக்கும்
அதிகாரம்
Art.123 குடியரசுத் தலைவரின் அவசர
சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
Art.213 ஆளுநரின் அவசர சட்டங்கள்
பிறப்பிக்கும் அதிகாரம்
Art.110 பண மசோதா
Art.199 பண மசோதா (மாநிலத்தில்)
Art.112 வருடாந்திர
நிதிநிலை அறிக்கை
Art.202 பட்ஜெட் (மாநிலத்தில்)
Art.266 ஒருங்கிணைந்த நிதியம்
Art.267 அவசரகால நிதி
##########################@#

அரசியல் கட்சிகள் :
தேசிய கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி தேசிய கட்சியாக
அங்கீகரிக்கப்பட 4
அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில்
6% வாக்குகள் மக்களவை தேர்தலில்
பெற்றிருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு மாநிலத்தில்
அல்லது மாநிலங்களில் குறைந்தது 4
தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க
வேண்டும்.
மாநில கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி மாநில அங்கீகரிக்கப்பட,
மாநில பொதுத் தேர்தலில்
குறைந்தது 6% வாக்குகள் பெற
வேண்டும். மேலும்
குறைந்தது இரண்டு எம்.எல்.ஏக்களாவது
வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன.
(2009 ஆம் ஆண்டு தேர்தல்) அவை.
1. இந்திய தேசிய காங்கிரஸ் (INC)
2. பாரதீய ஜனதா கட்சி (BJP)
3. பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
4. கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)
5. கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
6. தேசியவாத காங்கிரஸ் (NCP)
7. ராஷ்ட்ரி ஜனதா தளம் (RJD)
தற்போது 40 மாநில கட்சிகள் உள்ளன.
மேலும் 980 பதிவு செய்த அங்கீகாரம்
பெறாத கட்சிகள் உள்ளன.
#############################

உச்சநீதிமன்றம் (Art. 124 -147)
உச்சநீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி மற்றும்
பிறநீதிபதிகளை குடியரசுத் தலைவர்
நியமிக்கிறார்.
உச்சநீதிமன்றமானது ஒரு தலைமை
நீதிபதியையும் 30 நீதிபதிகளையும்
(30+1) கொண்டது.
Art.129 உச்சநீதிமன்றம் பதிவுறு மன்றம்
(Court of Record)
Art.131 முதன்மைப்பணி (Original
Jurisdiction)
Art.132 மேல்முறையீட்டு அதிகாரம்
Art.143 ஆலோசனை அதிகாரம்
குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை
Art.137
தனது தீர்ப்பை மறுபரீசீலனை செய்தல்
(Revisory Jurisdiction)
Art.32 நீதிப்பேராணை அதிகாரம்
###############################

உச்சநீதிமன்றம் டெல்லியில்
அமைந்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதிகள்
ஓய்வு பெறும் வயது 65
உயர்நீதிமன்றம்
• இந்தியாவில் 21 உயர்நீதிமன்றங்கள்
உள்ளன
• இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம் கல்கத்தா
• இந்தியாவின் இரண்டாவது உயர்நீதிமன்றம் பம்பாய்
• இந்தியாவின் மூன்றாவது உயர்நீதிமன்றம் மெட்ராஸ்
• மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா பெயர்கள்
முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா என
பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும்
உயர்நீதிமன்றங்களின் பெயர்கள்
மாற்றப்படவில்லை.
• குவஹாட்டி உயர்நீதிமன்றம் அதிக
பெஞ்சுகளைக் கொண்டுள்ளது
• மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின்
மதுரை பெஞ்ச் 2004 ஆம்
ஆண்டு அமைக்கப்பட்டது.
• உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும்
வயது 62 ஆக இருந்ததை 65 என மாற்ற
கேபினட் தீர்மானித்துள்ளது.

* நிதி ஆணையம் Art.280
5 வருடத்திற்கு ஒரு முறை குடியரசுத்
தலைவரால் அமைக்கப்படுகிறது.
மத்திய, மாநில
அரசுகளுக்கைடையே வரி வருவாயை
பகிர்ந்தளிப்பது தொடர்பான
ஆலோசனை வழங்கும்
நிதி ஆணைய முதல் தலைவர் நியோகி,
12வது தலைவர் கே.சி.ரங்கராஜன்
13வது நிதி ஆணையத்தின்
தலைவர் விஜய் எல்.கெல்கர்
14வது நிதி ஆணையத்தின்
தலைவர் Y.V.Reddy

* தேர்தல் ஆணையம் Art.324-329
தற்போது தேர்தல் ஆணையர்கள்
உள்ளனர்
1.    Dr.Nasim Zaidi   தலைமை தேர்தல்
ஆணையர்,
2. Mr. Achal Kumar Joti
 இவர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள்
அல்லது 65 வயது வரை
###############################

பிரதமர் (Prime Minister)
• இந்திய அரசாங்கத்தின் தலைவர்
• பெயரளவு அதிகாரம் உள்ளவர்
குடியரசுத் தலைவர்
• உண்மையான அதிகாரம் உள்ளவர் பிரதமர்
• திட்டக்குழுவின் தலைவர்
• தேசிய வளர்ச்சிக் குழுத் தலைவர்
• தேசிய ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவர்
• அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.
• அமைச்சர்களுக்கான
துறைகளை தேர்வு செய்கிறார்.
• அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்பாக
நாடாளுமன்றத்திற்கு (குறிப்பாக
லோக்சபா) கட்டுப்பட்டவர்கள்
தனித்தனியாக குடியரசுத்
தலைவருக்கு பொறுப்பானவர்கள்
• ஒரு அமைச்சர்
மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
நிறைவேறினால் மொத்த அமைச்சரவையும்
பதவி விலக வேண்டும்

அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதும்
, துறைகளை மாற்றுவதும் பிரதமரே!
அமைச்சர்களை பதிவி நீக்கம் செய்யவும்
குடியரசுத் தலைவருக்கு பிரதமர்
ஆலோசனை வழங்குவார்.
• அனைத்து உயர் அதிகாரிகள்
நியமானத்தில் குடியரசுத்
தலைவருக்கு உதவுவார்.
• தேசிய நெருக்கடி, மாநிலத்தில்
குடியரசுத் தலைவர் ஆட்சி,
நிதி நெருக்கடி போன்றவற்றை அமல்படுத்த
குடியரசுத்
தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.
• நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்
நேரு
• வங்கிகளை தேசியமயமாக்கியவர்
இந்திரா காந்தி
• ஜமீன் தாரி முறையை ஒழித்தவர் நேரு
• கொத்தடிமை முறையை ஒழித்தவர்
இந்திரா காந்தி
• இந்தியாவின் உயர்ந்த விருதான
“பாரத ரத்னா”, பாகிஸ்தானின் உயர்ந்த
விருதான ‘நிசாமி பாகிஸ்தானி’
இரண்டையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய்
• தாஸ்கண்ட் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டவர் லால்பகதூர்
சாஸ்திரி
• சிம்லா ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டவர் இந்திரா காந்தி
• மிக அதிக வயதில் பிரதமரானவர்
மொரார்ஜி தேசாய், இவர் காங்கிரஸ்
கட்சியை சாராதவ்ர் என்பதும் பிரதமர்
பதவியை ராஜினாமா செய்த முதல்
பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது
• பாராளுமன்றத்தை எதிர்
கொள்ளலாமலேயே பதவிக்காலம்
முடிவுற்றவர் சரண்சிங்
• நம்பிக்கையில்லா தீர்மானத்தில்
தோல்வியடைந்து பதவி இழந்த முதல்
பிரதமர் வி.பி.சிங்
• தென்னிந்தியாவிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர்
பி.வி.நரசிம்மராவ். இவர் எழுதிய நூல்
இன்சைடர்
• இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
இந்திரா காந்தி. தேர்தலில்
தோல்வியடைந்த முதல் பிரதமரும் இவரே.
• தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக்
கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
பி.வி.நரசிம்மராவ்
• ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திட்ட
ஒரே இந்திய பிரதமர் மன்மோகன் சிங்
(ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த
போது)
• திட்டக்கமிஷன் துணை தலைவராகவும்
பின் தலைவராகவும் பதவி வகித்தவர்
மன்மோகன் சிங்
##################################

ஓய்வு பெறும் வயது:
மாநில அரசுப் பணியாளர்……………….58
மாநில அரசுப் பணியாளர் ‘டி’
பிரிவு……….60
மத்திய அரசுப் பணியாளர்……………….60
உயர்நீதிமன்ற நீதிபதி……….62
தற்போது (65)
உச்சநீதிமன்ற நீதிபதி…………………..65
மாநிலப் பொதுப்பணி ஆணையத்
தலைவர்…….62
மத்திய பொதுப்பணி ஆணையத்
தலைவர்……..65
மாநிலத் தேர்தல் ஆணையர்………………62
மத்திய தேர்தல் ஆணையர்……………….65
தலைமைக்
கணக்கு தணிக்கையாளர்………….65
மாநில மனித உரிமை ஆணையத்
தலைவர்…….70
மத்திய மனித உரிமை ஆணையத்
தலைவர்…….70
மாநில முதல்வர் வயது வரம்பு இல்லை
மாநில ஆளுநர் வயது வரம்பு இல்லை
பிரதமர் வயது வரம்பு இல்லை
குடியரசுத் தலைவர்
வயது வரம்பு இல்லை.
###############################

மாதம் ஒன்றுக்கு சம்பளம்:
குடியரசுத் தலைவர் ரூ.1,50,000
துணைக் குடியரசுத் தலைவர்
ரூ.1,25,000
ஆளுநர் ரூ.1,10,000
உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி ரூ.1,00,000
உச்சநீதிமன்ற மற்ற நீதிபதிகள்
ரூ.90,000
உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதி ரூ.90,000
உயர்நீதிமன்ற மற்ற நீதிபதிகள்
ரூ.80,000
• துணைக் குடியரசுத் தலைவர்
பதவிக்கென சம்பளம் எதுவும்
வழங்கப்படுவதில்லை. ஆனால், ராஜ்ய
சபா தலைவர் என்ற முறையில் சம்பளம்
வழங்கப்படுகிறது.
• குடியரசுத் தலைவர் பதவி காலியாக
உள்ள காலத்தில், அதிகபட்சம் 6 மாதம்
துணைக் குடியரசுத் தலைவர்,
குடியரசுத் தலைவராகப்
பணியாற்றுவார்.
அப்போது குடியரசு தலைவருக்குரிய
சம்பளம் மட்டும் வழங்கப்படும்.
• துணைக் குடியரசுத் தலைவர் ராஜ்ய
சபையின் தலைவர் (Ex Officer Chairman)
• பொதுவாக துணைக் குடியரசுத்
தலைவருக்கு ராஜ்ய சபையில்
வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில்,
அவர் ராஜ்ய சபையின் உறுப்பினரல்ல.
• ஆனால், வாக்குகள் சமநிலையின்
போது வாக்களிக்கிறார் (Casting Vote)
• குடியரசுத் தலைவர், துணைக்
குடியரசுத் தலைவர்,
இரண்டு பதவிகளும் காலியாக உள்ள
காலத்தில் உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி குடியரசுத்
தலைவராகப் பணியாற்றுவார்.
அவ்வாறு பணியாற்றிய
நீதிபதி எம்.ஹிதயதுல்லா.
##################################

அரசியலின் முக்கியச்சொற்கள்
எடுக்கப்பட்ட மூலமொழி :
பாலிடிக்ஸ் (Politics) கிரேக்கம்
ஸ்டேட் (State) டியூடோனிக்
சவரினிட்டி (Soverignity) லத்தீன்
நேசன் (Nation) லத்தீன்
லிபர்டி (Liberty) லத்தீன்
லா (Law) டியூடோனிக்
டெமாக்கரசி (Democracy) கிரேக்கம்
பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் (Public
Admin) லத்தீன்
பீரோக்கிரசி (Bureaucracy) பிரெஞ்ச்
பட்ஜெட் (Budget) பிரெஞ்ச்
###################################

அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
• இது பகுதி IV-ல் அமைந்துள்ளது.
• Art, 36 முதல் 51
வரை காணப்படுகிறது.
• அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து
எடுத்தாளப்பட்டது.
• Art 39 (D) சம வேலைக்கு சம கூலி.
• Art 40 கிராமப் பஞ்சயத்து.
• Art 41 முதுமை நோயுற்ற நிலையில்
அரசு உதவி.
• Art 42 பெண்களுக்கு பேறுகால
விடுப்பு.
• Art 43 வாழ்க்கைக்கான கூலி.
• Art 44 நாடு முழுவதும்
பொது சிவில் சட்டம்.
• Art 45-14 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக்
கல்வி.
• Art 46 எஸ்.சி., எஸ்.டி.க்கு கல்வி,
பொருளாதார வசதி
• Art 47 வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்துதல்
• Art 48 பசுவதை தடுத்தல்
• Art 49 தேசிய நினைவுச்சின்னங்களைப்
பாதுகாத்தல்
• Art 50
நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை
பிரித்தல்
• Art 51 உலக அமைதியில் நாட்டம்
கொள்ளுதல்.
###################################

குடியரசுத் தலைவர். (PRESIDENT)
• இந்தியாவின் முதல் குடிமகன்
• அரசின் தலைவர் (Executive Head of
the State)
• 42-வது சட்ட
திருத்ததின்படி குடியரசுத் தலைவர்
அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்
செயல்பட வேண்டும். (Art. 74 (I))
• குடியரசுத் தலைவர் தேர்தல்
முறை பற்றி Art 54 மற்றும் 55
குறிப்பிடுகிறது. குடியரசுத்
தலைவரை தேர்ந்தெடுப்பது, மக்களவை,
மாநிலங்களவை மற்றும் மாநிலச்சட்டப்
பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள் கொண்ட Electoral College.
• பிரதமர், பிரதமரின் ஆலோசனையின்
பேரில் பிற அமைச்சர்களையும்
குடியரசுத் தலைவர் நியமனம்
செய்கிறார்.
• உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி மற்றும் பிற
நீதிபதிகள்.
• உயர்நீதிமன்றத்
தலைமை நீதிபதி மற்றும் பிற
நீதிபதிகள்.
• அட்டர்னி ஜெனரல்.
• தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற
தேர்தல் ஆணையர்கள்.
• மத்திய பொதுப்பணி ஆணையத் (UPSC)
தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள்.
• மாநில ஆளுநர்.
• முப்படைகளின் தளபதிகள்.
• தலைமை தணிக்கை அதிகாரி CAG.
• நிதி ஆணையத் தலைவர் மற்றும்
உறுப்பினர்கள். வெளிநாட்டுக்கான
இந்திய தூதர்கள்
ஆகியோரை குடியரசுத் தலைவர்
நியமிக்கிறார்.
• முப்படைகளின் தலைவர் இவரே.
• போர்க்காலத்தில் போர்
அறிவிப்பு செய்வதும், போர் நிறுத்தம்
செய்வதும் குடியரசுத் தலைவரே.
• ராஜ்ய சபாவுக்கு 12 பேரை நியமனம்
செய்கிறார்.
• லோக்சபாவுக்கு 2
ஆங்கிலோ இந்தியரை நியமனம்
செய்கிறார்.
அவசரக் கால அதிகாரிகள்
(EMERGENCY POWERS)
நெருக்கடி நிலை அதிகாரம் 3 அவை
• Art 352 தேசிய
நெருக்கடி NATIONAL EMERGENCY
• இது அமல்படுத்திய ஒரு மாத
காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்
பெற வேண்டும்.
• இது வரை மூன்று முறை (1962, 1971,
1975) தேசிய
நெருக்கடி அமல்படுத்தப்பட்டுள்ளது.
Art.356 மாநிலத்தில் குடியரசுத்
தலைவர் ஆட்சி STATE EMERGENCY
• இது அமல்படுத்திய 2 மாத
காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்
பெற வேண்டும்.
• இதுவரை 100 முறைக்கு மேல்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
• இதனை அதிக அளவில் பயன்படுத்திய
பிரதமர் இந்திராகாந்தி.
Art . 360
நிதி நெருக்கடி FINANCIAL
EMERGENCY

நிதி நெருக்கடி இதுவரை இந்தியாவில்
அமல்படுத்தப்படவில்லை.
• இதனை அமல்படுத்திய 2 மாத
காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்
பெற வேண்டும்.

குடியரசுத் தலைவர் பற்றி சில
தகவல்கள்:
• குடியரசுத் தலைவர்
தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
• குடியரசுத் தலைவர் தேர்தல்
தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.
• குடியரசுத் தலைவருக்கு பதவிப்
பிரமாணம்
செய்து வைப்பது உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி.
• குடியரசுத் தலைவர் பதவி விலகல்
கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக்
குடியரசுத் தலைவரிடம்.
• குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5
ஆண்டுகள்.
• Art. 57-ன் படி ஓய்வுபெற
உச்சவரம்பு இல்லை.
எத்தனை முறை வேண்டுமானாலும்
தேர்ந்தெடுக்கப்படலாம்.
• Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய
குற்றத்திற்காக குடியரசுத் தலைவர்
மீது குற்றச்சாட்டு (Impeachment)
சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.
• பாராளுமன்றக் கூட்டுக்
கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத்
தலைவர்.
• பாராளுமன்றக் கூட்டுக்
கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர்
லோக்சபா சபாநாயகர்.
• முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்
ராஜேந்திர பிரசாத்.
• முதல் துணைக் குடியரசுத் தலைவர்
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். பாரத
ரத்னா விருது பெற்ற முதல்
குடியரசுத் தலைவரும் இவரே.
• அதிக காலம் குடியரசுத் தலைவராக
இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
• முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர்
டாக்டர் ஜாகீர் உசேன்.
• முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர்
கியானி ஜெயில் சிங்.
• முதல் தலித் குடியரசுத் தலைவர்
டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
• முதல் பெண் குடியரசுத் தலைவர்
பிரதிபா பாட்டீல்.
• பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல்
குடியரசுத் தலைவர் டாக்டர்
கே.ஆர்.நாராயணன்.
• பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும்
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும்
சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர்
டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
• Art. 72 குடியரசுத் தலைவரின்
மன்னிப்பளிக்கும் அதிகாரம்.
• Art. 123 குடியரசுத் தலைவரின்
அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.
• குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும்
அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6
வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.
• குறுகிய காலம் குடியரசுத்
தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர்
உசேன்....
1. போர் கடவுள் என்று அழைக்கப்படும் கோள் எது?
- Mars (செவ்வாய்)

2. விவசாயத்திற்கு வணங்கும் கோள் எது?
- Saturn (சனி)

3. சொர்க்கத்திற்கான கோள் என்று அழைக்கப்படுவது எது?
- Uranus

4. மரணத்திற்கான அழைக்கப்படும் கோள் எது?
- Pluto

5. வசந்த கால கோள் என்று அழைக்கப்படும் கோள் எது?
- Venus (வெள்ளி)

6. வணிகத்திற்கான கோள் என்று அழைக்கப்படும் கோள் எது?
- Mercury (புதன்)

7. கடவுளின் ஆளுநர் என்று அழைக்கப்படும் கோள் எது?
- Jupiter (வியாழன்)

8. கடலுக்கு காக அழைக்கப்படும் கோள் எது?
- Neptune

யாப்பிலகணம்

யாப்பிலகணம் பற்றிய சில தகவல்கள்:-
📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை
1. எழுத்து:-
📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்
2. அசை:-
📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)
3. சீர்:-
📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
📚 சீர்கள் எண்ணிக்கை - 30
1. மாச்சீர் - 2
2. விளச்சீர் - 2
3. காய்ச்சீர் - 4
4. கனிச்சீர் - 4
5. பூச்சீர் - 8
6. நிழற்சீர் - 8
7. ஓரசைச்சீர் - 2
4. தளை:-
📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
📚 தளை வகைகள் - 4
1. ஆசியத்தளை
2. வெண்டளை
3. கலித்தளை
4. வஞ்சித்தளை
5. அடி:-
📚 அடி வகைகள் - 5
1. குறளடி - இரண்டு சீர்கள்
2. சிந்தடி - மூன்று சீர்கள்
3. அளவடி - நான்கு சீர்கள்
4. நெடிலடி - ஐந்து சீர்கள்
5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்
6. தொடை:-
📚 தொடை வகைகள் - 5
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4. இயைபு தொடை
5. அளபெடைத் தொடை

Planets

கோள்கள்

1: மிகப்பெரிய கோள் எது? வியாழன் (ஜீபிடர்)

2. மிகச்சிறிய கோள் எது? புளுட்டோ

3. கோள்களில் பூமியானது உருவ அளவில் எந்த இடத்தில் உள்ளது? 5வது இடம்

4. மிகப்பிரகாசமான கோள் எது? வெள்ளி

5. முதல்முதலாக கண்டறியப்பட்ட கோள் எது? புதன்

6. அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? சனி

7. நீலக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? பூமி

8. மிகவும் சூடான கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)

9. விடிவெள்ளி எனப்படும் கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)

10. மற்ற கோள்களைப்போல் அல்லாமல் எதிர் திசையில் சுற்றுக்கோள் எது? வெள்ளி (வீனஸ்)

11. சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)

12. சிகப்பு கிரகம் எது? செவ்வாய்

13. சூரிய குடும்பத்தில் தனிச்சிறப்பான கோள் எது? புமி

14. பூமிக்கு வெளிப்புறமாக அமைந்த முதல் கோள் எது? செவ்வாய்

15. தூசிகளின் கிரகம் எது? செவ்வாய்
16. மிகவேகமாக சுற்றும் கிரகம் எது? புதன்

17. கலிலியோவினால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)

18. சாதாரண கண்களினால் காணக்கூடிய கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)

19. நவீன காலத்தில் கண்டறியப்பட்ட கிரகம் எது? யுரேனஸ்

20. சூரிய குடும்பத்தின் மிகச் குளிச்சியான கிரகம் எது? புளுட்டோ

21. பூமியின் சகோதரி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)

22. பூமியின் இயற்கை துணைக்கோள் எது? சந்திரன்

23. மிகப்பெரிய துணைக்கோள் எது? கேணிமீட்

24. சூரியனின் வெளிப்புற வெப்பநிலை எவ்வளவு? 6000 degree celcious

25. துணைக்கோள்களே இல்லாத கிரகங்கள் எவை? புதன், வெள்ளி, புளுட்டோ

26. பூமியின் வாயுமண்டல வெப்பநிலை எவ்வளவு? 15 degree celcious

27. டைட்டன் என்ற கிரகத்தின் துணைக்கோள் எது? சனி

28. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது? பிராக்ஸிமா

29. பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது? வெள்ளி (வீனஸ்)

30. அஸ்டிராய்டுகள் என்பது என்ன? சிறிய கோள்கள்

31. அஸ்டிராய்டுகள் எந்த இரு கோள்களுக்கு இடையே அமைந்துள்ளது? செவ்வாய் மற்றும் வியாழன்

32. மிகப்பெரிய அஸ்டிராய்டு எனப்படுவது எது? சிரிஸ்

33. மெட்டிரோஸ் என்பது என்ன? கோள்களுக்கு இடையில் இருந்து வரும் சிறிய பொருட்கள்

34. பூமியின் வாயு மண்டலத்தில் நுழையும் மெட்டிரோஸ் பொருட்களுக்கு பெயர் என்ன? வெடிக்கும் விண்மின்கள்

35. சுய ஒளியுடைய மிக நீண்ட தூரத்தில் அமைந்துள்ள வாயுப் பொருட்களின் பெயர் என்ன? விண்மீன்கள்

36. விண்மீன்களுக்கு இடையே உள்ள தூரத்தை அளக்கும் அலகு. ஒளி வருடங்கள்

37. சூரிய ஒளி பூமியை அடைய ஆகும் காலம் எவ்வளவு? 8 நிமிடங்கள்

38. சந்திர ஒளி பூமியை அடைய ஆகும் காலம் எவ்வளவு? 1 நிமிடம்

39. சூரியனை பூமி சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 365 1/4 நாட்கள்

40. சூரியனை நெட்டியுன் சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 165 வருடங்கள்

41. சூரியனை புளுட்டோ சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 268 வருடங்கள்

42. சுக்கிரன் பூமியை சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 27 நாட்கள்

43. சூரியனை புதன் சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 88 நாட்கள்

44. சூரியனை வெள்ளி சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 225 நாட்கள்

45. சூரியனை வியாழன் (ஜுபிடர்)சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 12 வருடங்கள்
46. சூரியனை சனி சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 30 வருடங்கள்

47. சூரியனை சுற்றியே மற்ற கோள்கள் சுழலுகின்றன எனக் கூறிய அறிஞர் யார்? கோபர்நிகஸ்

48. அமைதிக்கடல் காணப்படும் இடம் எது? சந்திரன்

49. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் எவை? 1. புதன் 2. வெள்ளி 3.பூமி 4. செவ்வாய்
5. வியாழன் 6. சனி 7. யுரேனஸ் 8. நெப்ட்டியுன் (புளுட்டோ ஒரு கோள் அல்ல அது துணைக்கோள் என்று கூறப்பட்டுள்ளது.)

தமிழ்

தமிழ் அறிவோம்..!

ண ன ந எங்கெல்லாம் வரும் ?

மூனுசுழி “ண” , ரெண்டு சுழி “ன” "ந" என்ன வித்தியாசம்?

படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத் தந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்!
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்- “தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம். 4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?ன்னு.

தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு!  மூனு சுழி ண என்பதும் தவறு!

ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம்,
ந இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப் பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. (இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரி சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
('வர்க்க எழுத்து'-ன்னா,
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம், தந்நகரம்)
இந்த ண, ன, ந எழுத்துகளைப் பற்றி அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.

எப்புடீ?

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).
Gk 23/10/16

 தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு.

#  பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

#  சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

#  பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

#  காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

#  அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

#  கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

#  உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

#  உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.

#  வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு’.

#  இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.

#  இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.

#  கறுப்பு ஈயம்’ எனப்படும் தாது, கிராபைட்.

#  கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு’.

#  காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.

# திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை

# மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்

# குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார்
– குறத்தி

# குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்

# குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை)

# குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்

# நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்

# நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.

# நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை

# காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது
– அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.

# அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.

# அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861

# அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்

# அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)

# காவடிச் சிந்துவின் ஆசிரியர் – அண்ணாமலை ரெட்டியார்

# மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்

# நான்கு வேதங்கள் – ரிக், யஜீர், சாமம், அதர்வணம்

# அறுசுவை என்பவை – கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு

# ஏழு கடல்கள் – உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.

”ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்

# நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை

# ஞாலம் என்ற சொல்லின் பொருள் – அறிவு

# வசை என்ற சொல்லின் பொருள் – பழி

# வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்

# விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி

# குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்

# குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் – கபிலர்

# குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்

# புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யூ.போப்

# புறநானூறு இடம் பெறும் தொகுப்பு – எட்டுத்தொகை

# சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள்
– அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை

# சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன்
– பாண்டியன் நன்மாறன்.

# கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் – கண்புரை

# விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை – கெரட்டோமலேசியா

# தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் – 25 செமீ

# பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
ஜெனோகிராப்ட்

# விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு
தைமஸ் சுரப்பி

# நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது
டிரான்ஸ்போசான்கள்

# இடியோகிராம் என்பது – குரோமோசோம்களைக் குறிக்கும் படம்

# ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை – வாசக்டமி

# தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது – 5 அறைகள்

# எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர்
–ஹாவர்ஷியன் குழாய்

# உடுக்கை இழந்தவன் கைபோல – இடுக்கண் களைபவர்

# சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்

# சீவகசிந்தாமணி – மணநூல்

# கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம்,
கம்ப நாடகம்

# அகநானூறு – நெடுந்தொகை

# பழமொழி – முதுமொழி

# பெரிய புராணம் – திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்

# இலக்கண விள்க்கம் – குட்டித் தொல்காப்பியம்

# பட்டிணப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு

# கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை

# புறநானூறு – தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்

# பெரும்பாணாற்றுப்படை – பாணாறு

# மலைபடும்கடாம் – கூத்தராற்றுப்படை

# முல்லைப்பாட்டு – பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை

# குறிஞ்சிப் பாட்டு – காப்பியப்பாட்டு

# வெற்றிவேற்கை – நறுத்தொகை

# மூதுரை – வாக்குண்டாம்

# பெருங்கதை – கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்

# சிலப்பதிகாரம் – இரட்டைகாப்பியங்கள்

# மணிமேகலை – மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்

# நீலகேசி – நீலகேசித்தெருட்டு

திணை

சங்க இலக்கியங்களில் கூறப்படும் திணை பற்றிய குறிப்புகள் (ஐந்திணை, ஐந்நிலம், ஐந்து ஒழுக்கங்கள்)

தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை.

தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளபடி,

** மொழியியல் திணைகள், உயர்திணை மற்றும் அஃறிணைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

** பொருளியல் திணைகள், அகத்திணை மற்றும் புறத்திணைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை எனும் இரு வகைகளுக்குள் அடங்குகின்றன.

திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். பாட்டுக்கு உரிய தலைவர்களின் ஒழுக்கத்தை பாடல் பொருளாக பாடுவதை திணை என்றார்கள்.

புறத்திணை - அகத்திணை:-

** புறத்திணை - பழந் தமிழர் வாழ்வியலில் போர், அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறத்திணை என வழங்கப்படுகின்றது

** அகத்திணை - ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன.

ஐந்நிலம்:-

பண்டைத்தமிழகத்தில் நிலப்பரப்புகள் 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்

முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்

மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்

நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்

பாலை - முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற‌ நிலம்.

ஐந்து ஒழுக்கங்கள்:-

குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்)

முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்து இருத்தல்)

மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்)

பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

ஐந்திணை:-

வகைப்படுத்தப்பட்ட நிலம் 5, வகைப்படுத்தப்பட்ட ஒழுக்கம் 5, - ஆகியவற்றின் திணிவுகளை ஐந்திணை என்கிறோம்.

அகத்திணைப் பிரிவுகள்:-

1. குறிஞ்சித் திணை
2. முல்லைத் திணை
3. மருதத் திணை
4. நெய்தல் திணை
5. பாலைத் திணை
6. பெருந்திணை
7. கைக்கிளைத் திணை

இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை.

ஏனைய ஐந்தும், நிலத்திணைகளுடன் இணைத்துப் பெயர் இடப்பட்டிருப்பதைக் காணலாம். அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம்.

குறிஞ்சித்திணை:-

** குறிஞ்சியாவது, 'மலையும் மலைசார்ந்த இடங்களும்', இயற்கை அழகும், வளங்களும் நிறைந்தனவாக, இளம் பருவத்தாரிடையே 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும்' செல்லவும், இவைபற்றி எல்லாம் நினைக்கவும், அணுக்கரிடையே (தமக்கு நெருக்கமானவர்) தம் உணர்வை எடுத்து கூறவும் பொருந்துவனவாக அமைந்திருக்கும் நிலப்பகுதிகள்.

** எனவே, தனித்து வேட்டை மேல் செல்லும் இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களமாகி, இந்த துணிவு நிகழ்வதற்கு ஏற்ற வாழ்வியல் அமைந்தது குறிஞ்சி ஆகும்

** குறிஞ்சித்திணைக்கு கூதிர்காலம் மற்றும் முன்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும் யாமம் சிறுபொழுதாகவும் அமையும்.

** குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது"

முல்லைத்திணை:-

** முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும்.

** ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, 'இருத்தல், இருத்தல் நிமித்தம்' முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர்.

** முல்லைத்திணைக்கு கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்

** முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது"

மருதத்திணை:-

** மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே உழுவித்து உண்ணும் பெரும் செல்வர் வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும்.

திணை

இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும்.

புறத்திணைப் பிரிவுகள்:-

1. வெட்சித் திணை

2. வஞ்சித் திணை

3. உழிஞைத் திணை

4. தும்பைத் திணை

5. வாகைத் திணை

6. காஞ்சித் திணை

7. பாடாண் திணை

புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல்:-

"வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்".

வெட்சித் திணை:-

** ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந் நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை

வஞ்சித் திணை:-

** மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது.

உழிஞைத் திணை:-

** படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக் கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது.

தும்பைத் திணை:-

** படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுவது.

வாகைத் திணை:-

** மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது

காஞ்சித் திணை:-

** உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை

பாடாண் திணை:-

** பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது

மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சில தகவல்கள்

🌹 மொழிவாரி மாநிலங்களாக உருவாக்க முன்முதலில் அமைக்கப்பட்ட கமிட்டி - S.K. தார் (ஜீன், 1948)
🌹  மொழிவாரி மாநிலங்களாக உருவாக்க இரண்டாவதாக அமைக்கப்பட்ட கமிட்டி - ஜே.வி.பி.(1948) JVP
J - ஜவஹர்லால் நேரு
V - வல்லபாய் படேல்
P - பட்டாபி சீதாராமையா
🌼1952- மெட்ராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
🌼இக்கோரிக்கையை முன் வைத்து போராடியவர் -  காந்தி, பொட்டி ஸ்ரீராமலு.
🌼 பொட்டி ஸ்ரீராமலு உண்ணா நோம்பிருந்து முயற்சியால் 1953-ல் ஆந்தார பிரதேசம் உருவாக்கப்பட்டது.
🌼 மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க கடைசியாக அமைக்கப்பட்ட கமிட்டி தலைவர் - பாசல் அலி, உறுப்பினர்கள் - ஹிருதயநாத்குன்ஸ்ரு, கே.எம்.பணிக்கர்
🌼 பாசல் அலி கமிட்டி அறிக்கை அளித்த ஆண்டு - 1955
🌼1.9.1956 - 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசம் தோன்றியது.
🌼1960 - பம்பாய் மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டது (மகாராட்டிரா & குஜராத்-15).
🌼1963 - அசாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(நாகாலாந்து-16).
🌼1966 - அரியானா (17).
🌼1971 - இமாச்சலப் பிரதேசம் (18).
🌼1972 - மணிப்பூர் (19).
🌼1972 - திரிப்புரா (20).
🌼1972 - மேகாலயா(21).
🌼1975 - சிக்கிம் (22).
🌼1987 - மிசோரம் (23).
🌼1987 - அருணாச்சலப் பிரதேசம் (24).
🌼1987 - கோவா (25).
🌼1.11.2000 - சட்டிஸ்கர்(26).
🌼9.11.2000 - உத்தர்காண்ட் (27).
🌼15.11.2000 - ஜார்கண்ட் (28).
🌼2.6.2014 - தெலுங்கானா (29).

Easy to Memory for பதிற்றுப்பத்துப் பாடியவர்கள்

குமட்டு'ற   பாலை,    காப்பி’க்காக   பர்னர்’ல நச்’சுன்னுசுட வைத்து,  க’ருப்பட்டி,     அ’ச்சுவெல்லம்   போட்டு  பெரு’சுக்கு  (கிழவர்) கொடுத்தாச்சு.

குமட்டு'ற-குமட்டூர்க் கண்ணனார்
பாலை’- பாலைக் கௌதமனார்
காப்பி’க்காக  - காப்பியாற்றுக் காப்பியனார்
பர்னர்’ல- பரணர்
நச்’சுன்னு -நச்செள்ளையார்
க’ருப்பட்டி-கபிலர்
அ’ச்சுவெல்லம்-அரிசில் கிழார்
பெரு’சுக்கு  (கிழவர்)-பெருங்குன்றூர் கிழார்.

 எளிதாக தொடர்புபடுத்தி நினைவில் கொள்ள

கீழக்கண்ட தொடர்புகளை நீங்கள் உங்கள் விருப்பதிற்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க முடிந்தால் மாற்றிக் கொள்ளவும்-இது ஒர் வழி அவ்வளவே

#சூரியநாராயணசாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்)

"தமிழ் நாடக உலகின் பேராசிரியர்" என்று அழைக்கப்படுகிறார்.

அந்த காலத்தில் 'பேராசிரியர்கள்' தான் 'சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டனர்.

#சங்கரதாஸ்_சுவாமிகள்

‘தமிழ் நாடக உலகின் இமயமலை’, ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ இந்த இரண்டுமே சங்கரதாஸ் சுவாமிகள்.

01.இமயமலை=Himalaya Mountain
02.தலைமை ஆசிரியர்=Head Master

அதாவது Head Master
'H'igher 'S'econdary (மேல்நிலைப்/உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்) இருப்பாங்க;
'M'iddle 'S'econdary (இடைநிலைப் பள்ளி தலைமையாசிரியர்) இருப்பாங்க.

இத அப்படியே பொருத்திப் பாருங்க அதாவது H.M=S.S= “Sangaradas Swamigal”.

#பம்மல்_சம்பந்தனார்

"தமிழ் நாடகத் தந்தை" மற்றும்  நாடக நடிகர்களால் 'கலைஞர்' என மதிக்கப்பட்டவர்  பம்மல்சம்பந்தம்.

'தந்தை' என்பவர் மகன்/மகள் திருமணத்திற்கு பின் 'சம்பந்தி' ஆகி விடுவார்.

கமலஹாசன் நடித்த திரைப்படம் ‘கலைஞன்’ மற்றும் ‘பம்மல்சம்பந்தம்’

இதோடு சம்பந்தப்படுத்தினால் மறவாமல் இருக்கலாம்.

 இருண்டவீடில் அமைதி யான
குடும்ப விளக்காக மணிமேகலை
என்ற பெண் தேனருவி சாரலில்
இசை அமுதினை பாடும்பொழுது
அழகின் சிரிப்பு க் கண்ட பாண்டியன்
பரிசு கொடுத்து எதிர்பாராத
முத்தம் கொடுத்தான்.
இருவருக்கும் காதல் நினைவுகள்
ஆரம்பமாவதை பார்த்த
பிசிராந்தையார் கோர (சேர)
தாண்டவம் ஆடி நாட்டாமை
பில்கணியிடம் இளைஞனை
அழைத்து சென்றார்.
"இது என்ன கழைக்கூத்தியின்
காதல் நாடகமா?" என்றார்
நாட்டாமை
இல்லை, அமைதியான தமிழச்சியின்
கத்தி என்றாள் மணிமேகலை.
நல்ல இளைஞர் இலக்கியமோ , தமிழ்
இயக்கமோ இருந்திருந்தால் இப்படி
நடந்திருக்காது என்று
கூறியவாறு இளைஞனிடம்
காதலா? கடமையா? என்று கேட்க,
" படித்த பெண்கள்" என்று கூறினான்
அந்த இளைஞன்.
நீதான் இணையற்ற வீரன், உன்னை
இந்த மானுடம் போற்றும் என்று
நாட்டாமை நல்ல தீர்ப்பு கூறினார்.

எழுத்து என்னும் இதழில்
புதுக்கவிதைகளைப்
படைத்தவர்கள்.
சி.மணி
தருமுசிவராமு
எஸ்.வைத்தீஸ்வரன்
சி.சு.செல்லப்பா
Shortcut:
மணி தரு ம் வைத் தியரிடம்
செல்லலாம், எழு ந்து வா
மணி - சி.மணி
தரு - தருமுசிவராமு
வைத் தி - எஸ்.வைத்தீஸ்வரன்
செல்ல - சி.சு.செல்லப்பா
எழு - எழுத்து

 முதல் மைசூர் போர் கி.பி.1767-69
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை
கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை )
உடன்படிக்கை கையெழுத்தானது.
Online Loans Study Materi
இரண்டாவது மைசூர் போர்
கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன்
ஹேஸ்டிங்ஸ்சால்
தோற்கடிக்கப்பட்டார். மங்களூர்
உடன்படிக்கை ஏற்பட்டது
மூன்றாவது மைசூர் போர்
கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர்
திப்புசுல்தான் இடையே
ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.
நான்காவது மைசூர் போர்
கி.பி.1799
ஆர்தர் வெல்லெஸ்லியின்
தலைமையில் பிரிட்டிஷ் படையினர்
திப்பு சுல்தானை எதிர்த்து
போரிட்டனர். இதில் திப்பு சுல்தான்
கொல்லப் பட்டார்.
Sheik Hussain shortcut
My Ma Man Sri
My - மைசூர் போர்
Ma - மதராஸ் (சென்னை )
உடன்படிக்கை
Man - மங்களூர் உடன்படிக்கை
Sri - ஸ்ரீரங்கப்பட்டினம்

செந்தில் மண்டையை சீவு
1வது உடன்படிக்கை - செந்தில்
சென்னை உடன்படிக்கை
2 வது உடன்படிக்கை - மண்டை
மங்களூர் உடன்படிக்கை
3 வது உடன்படிக்கை - சீவு சீரிரங்கம்
(ஸ்ரீரங்கம்) முதல் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.மு. 487
இடம் : இராஜகிருகம்
கூட்டிய மன்னர் : அஜாதசத்ரு
தலைமை : மகாகசிபர்
இரண்டாம் புத்த சமய மாநாடு:
ஆண்டு : கி.மு. 387
இடம் : வைசாலி

கூட்டிய மன்னர் : காகவர்ணன் (எ)
காலசோகன்
தலைமை : சபகமி
மூன்றாவது புத்த சமய மாநாடு
ஆண்டு : கி.மு. 251
இடம் : பாடலிபுத்திரம்
கூட்டிய மன்னர் : அசோகர்
தலைமை : உபகுப்தர்
நான்காம் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.பி. 100
இடம் : குண்டலிவனம் (காஷ்மீர்)
கூட்டிய மன்னர் : கனிஷ்கர்
தலைமை : வசுமித்திரர்
சமண (ஜைன) சமய மாநாடுகள்
நடைபெற்ற இடங்கள்

புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற
இடங்களை நினைவில்
வைத்துக்கொள்ள எளிய வழி

Shortcut :

ர வை பாகு
1) ர - ரா ஜகிருகம்
2) வை - வைசாலி
3) பா - பாடலிபுத்திரம்
4)கு-குண்டலிவனம்
ஐம்பெருங்காப்பியங்களில் சமண
காப்பியங்கள்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி,
வளையாபதி
Shortcut .. சி சீ வா சமணம்

ஐம்பெருங்காப்பியங்களில் பௌத
காப்பியங்கள்
குண்டலகேசி, மணிமேகலை
Shortcut : குண்டு - மணி - பௌ
GK SCIENCE 24/10/16

# ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது – பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை

# மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் – காப்பர் சல்பேட்

# நொதித்தல் நிகழ்வின் போது வெளிப்படும் வாயு – கார்பன்-டை-ஆக்ஸைடு

# கடல்நீர் ஆவியாதல் – வெப்ப கொள்வினை

# பொருட்களின் நிலை மாறுவது – இயக்கம்

# எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது – ஆவியாதல்

# மின்தடையை அளக்க உதவும் முறை – ஓம்

# கலவைப் பொருள் என்பது – பால்

# ஒரு படித்தான தன்மை கொண்டது – தூய பொருட்கள்

# இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை – புடைத்தல்

# ஒளியைத் தடை செய்யும் பொருள் – உலோகத்துண்டு.

# திரவ நிலையிலுள்ள உலோகம் – பாதரசம்

# அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் – சீசியம்

# பதங்கமாகும் பொருள் – கற்பூரம்

# இரும்பின் தாது – மாக்னடைட்

# காந்தத் தன்மையற்ற பொருள் – கண்ணாடி

# திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு – லிட்டர்

# கன அளவின் அலகு – மீ3

# அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை – இடமாறுதோற்றப்பிழை

# வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது – ஒழுங்கற்ற பொருளின் பரப்பு

# தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு – மி்ன்னணு தாரசு.

# புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் – 365 1/4

# நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு.

# சைகஸ் – ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.

# கிரினெல்லா – சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது

# குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு – ஹைட்ரா

# மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது – தட்டைப்புழு

# மெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு – வெலாமன்

# கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்

# பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.

# ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்

# விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு – ஒளிச்சேர்க்கை

# புரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு – 90 சதவீதம்

# அடர்த்தி குறைவான பொருள் – வாயு

# கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று – கருங்கல் துண்டு

# மூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் – மீன்தூண்டில்

# உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு – உயிரியல்

# மனிதனின் கருவுறுகாலம் – 280 நாள்கள்

# யானையின் கருவுறு காலம் – 17 – 20 மாதங்கள்

# அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்

# வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்

# புவி நாட்டம் உடையது – வேர்

# இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்

# டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை

# ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.

# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா.

# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்

# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்

# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு

# தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ

# எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி

# பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்

# இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்

# தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை

# ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்

# அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்

# விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா

# ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

# அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

# சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்

# தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல்

# நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்

# எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்

# பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்

# புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்

# ஆடு ஒரு தாவர உண்ணி

# தற்சார்ப்பு உணவூட்டம் என்பது – தானே தயாரித்தல்

# தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் – வேதி ஆற்றல்

# விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது – சூரிய மின்கலம்.