நாட்டிலே முதன் முறையாக, தெலுங்கானா வனத்துறை அம்ராபாத் புலிகள் காப்பகத்தில் உள்ள நல்லமலை வனங்களில் சருகு மான் / சுட்டிமான் / எலிமான்களை (Mouse Deer) மறு-அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட சருகு மான்கள் / சுட்டி மான்கள் / எலிமான்கள் தங்களை வனசூழலுக்கு தகவமைத்து கொண்டன என அறிய வரும் வேளையில் நேரு விலங்கியல் பூங்காவில் பெருக்கப்பட்டு வரும் பிற சுட்டிமான்களும் இதே செயல்முறை பின்பற்றலின் வழி வனங்களில் விடப்பட்டு புலிகள் காப்பகத்தின் (Tiger Reserve) உயிரி பல்வகைத்தன்மை (Bio-diversity) கூட்டப்படும்.
இந்த சுட்டிமான் / எலிமான்கள் புள்ளியுடைய செவ்ரோடைன் (Spotted Chevrotain) எனவும் அழைக்கப் படுகின்றது.
வழக்கமாக நாட்டின் இலையுதிர் மற்றும் பசுமை மாறா காடுகளில் (deciduous & evergreen) காணப்படும் இவை அழியும் தருவாயிலுள்ள (endangered species) உயிரினமாகும்.
மார்ச் 2010-ல் நேரு விலங்கியல் பூங்கா, LACONES மற்றும் மத்திய விலங்கியல் பூங்கா ஆணையத்தோடு சுட்டிமான்/எலிமான்களுக்கான பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்கத் திட்டத்தை மேற்கொண்டதன் விளைவாக 6 வருடங்களில் தற்போது அவற்றின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment